இருண்ட

நெஞ்சோடு கலந்திடு 10

🇮🇳 தமிழ்
வேகம்: 1.0x
நிலை: தயார்
×

இயக்க அமைப்பு உதவி

நீங்கள் ஏற்கனவே Chrome/Edge ஐப் பயன்படுத்தினாலும், இன்னும் இயக்க முடியவில்லை என்றால், உங்கள் தொலைபேசி/PC அமைப்புகளைச் சரிபார்க்கவும்.
நீங்கள் கேட்க விரும்பும் மொழியைப் பயன்படுத்தி, TTS இன்ஜின் செயலில் இருப்பதை உறுதி செய்யவும்.

Android மற்றும் பிற OS பயனர்களுக்கு

Android, Harmony, Lineage, Ubuntu Touch, Sailfish, ColorOS / FuntouchOS, hyperOS போன்ற பயனர்களுக்கு
மெனு அணுகல்: அமைப்புகளைத் திற > அணுகல்தன்மை > உரையிலிருந்து பேச்சு வெளியீடு.
அது இல்லை என்றால், அமைப்புகள் > மேலே உள்ள தேடல் பெட்டி > "text-to-speech" அல்லது "text" என உள்ளிடவும்
பிறகு உரையிலிருந்து பேச்சு அல்லது அதை ஒத்த ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
மொழியைச் சேர்க்க, கியர் ஐகானைக் கிளிக் செய்யவும் ⚙ > குரல் தரவை நிறுவு உங்களுக்குத் தேவையான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.

iOS பயனர்களுக்கு

அமைப்புகள் > அணுகல்தன்மை > பேசப்படும் உள்ளடக்கம் என்பதற்குச் செல்லவும்
அல்லது அமைப்புகள் > மேலே உள்ள தேடல் பெட்டி > "பேசப்படும் உள்ளடக்கம்" என உள்ளிட்டு என்டர் செய்யவும்
மொழியைச் சேர்க்க குரல்கள் என்பதைத் தேர்ந்தெடுத்து குரலைத் தேர்ந்தெடுக்கவும்

PC MacOS பயனர்களுக்கு

மெனு அணுகல்: Apple மெனுவைக் கிளிக் செய்யவும் () > கணினி அமைப்புகள் > அணுகல்தன்மை > பேசப்படும் உள்ளடக்கம்.

Windows பயனர்களுக்கு

Windows 10 & 11
மெனு அணுகல்: தொடக்கத்தைத் திற > அமைப்புகள் > நேரம் & மொழி > பேச்சு.
Windows 7 & 8
கட்டுப்பாட்டு பலகம் > அணுகல் எளிமை > பேச்சு அங்கீகாரம் > உரையிலிருந்து பேச்சு
Windows XP
தொடக்கம் > கட்டுப்பாட்டு பலகம் > ஒலிகள், பேச்சு மற்றும் ஆடியோ சாதனங்கள் > பேச்சு
Windows 2000 & ME
தொடக்கம் > அமைப்புகள் > கட்டுப்பாட்டு பலகம் > பேச்சு
Linux, ChromeOS, FreeBSD போன்ற பிற வகை PC பயனர்களுக்கு.
Google, Bing போன்ற தேடுபொறிகளில் உரையிலிருந்து பேச்சு வசதியை இயக்குவதற்கான அமைப்புகளைத் தேடவும்

குறிப்பு தற்போது, இந்தப் பக்கம் உங்கள் சாதனத்தின் இன்ஜினுக்கு ஏற்ப செயல்படுகிறது.
எனவே உருவாக்கப்படும் ஒலி உங்கள் சாதனத்தின் TTS இன்ஜினைப் பின்பற்றுகிறது.

நெஞ்சோடு கலந்திடு 10

. Tamil Sex Stories – அடுத்த நாள் காலை..!! இரவு நெடுநேரம் உறக்கமில்லாமல் தவித்த அசோக், அதிகாலையில்தான் உறங்கவே ஆரம்பித்திருந்தான்.
அதிகாலை குளிருக்கு இதமாக, போர்வையை நன்றாக இழுத்து மூடிக்கொண்டு, அசந்து போய் தூங்கினான்.
எதோ சத்தம் கேட்டு அசோக்கிற்கு விழிப்பு வந்தது.
போர்வையை விலக்கி முகத்தை வெளியே கொண்டு வந்து, விழிகளை மெல்ல திறந்து பார்த்தான்.
அவன் விழிகளை திறந்ததுமே அவன் முகத்தில் பளிச்சென மின்னல் வெட்டியது மாதிரி இருந்தது.
கூடவே கலகலவென்று திவ்யாவின் சிரிப்பொலி..!!அசோக்கிற்கு சில வினாடிகள் எதுவுமே புரியவில்லை.
கண்களை ஒருமுறை நன்றாக கசக்கி விட்டுக் கொண்டான்.
மீண்டும் திறந்து பார்த்தான்.
முகத்தில் குறும்பு கொப்பளிக்க திவ்யா அவனுக்கெதிரே அமர்ந்திருந்தாள்.
அவள் கையில் ஒரு டிஜிட்டல் கேமரா..!! அவள் உதடுகளில் சிரிப்பு குமுறிக்கொண்டு வெளியே வர முயல, வாயை ஒரு கையால் பொத்தி, அந்த சிரிப்பை அடக்க முயன்று கொண்டிருந்தாள்.
அசோக் தூக்க கலக்கமும், எரிச்சலுமாக கேட்டான்.
“ஹேய்.. நீ என்னடி பண்ணிட்டு இருக்குற இங்க..?”“சும்மாதான்.. உன்னை பாக்கலாம்னு வந்தேன்..!! ஒன்பது மணி ஆகியும் நீ நல்லா குறட்டை விட்டு தூங்கிட்டு இருந்தியா..? சரி.. கரெக்டா நீ கண்முழிக்கிறப்போ ஒரு ஸ்னாப் எடுக்கலாம்னு பத்து நிமிஷமா உன் பக்கத்துலையே உக்காந்துட்டு இருக்கேன்..!! என்னென்னவோ சவுண்டு குடுத்து பாக்குறேன்.. நீ எந்திரிக்கிற மாதிரியே இல்லை.. சரியான தூங்கு மூஞ்சி..!!”“அப்டிலாம் ஒன்னும் இல்ல.. நைட்டு தூங்குறதுக்கு கொஞ்சம் லேட் ஆயிடுச்சு..!!“ஓஹோ..?? ஆனா.. பத்து நிமிஷம் வெயிட் பண்ணினதுக்கு சூப்பர் ஸ்டில்டா.. செம எக்ஸ்ப்ரஷன் கொடுத்திருக்குற நீ.. சான்சே இல்ல..!!” என்றவள் குலுங்கி குலுங்கி சிரிக்க ஆரம்பித்தாள்.
“எங்க குடு.. பார்ப்போம்..”“வேணாம்.. நீ டெலீட் பண்ணிடுவ..”“ப்ச்.. பண்ண மாட்டேன்.. குடு..”“ப்ராமிஸ்..??”“ப்ராமிஸ்டி..!!”“இந்தா..!! டெலீட் பண்ணின..? மவனே.. மண்டைலையே நல்லா போடுவேன்..!!”கண்டிஷனுடனே திவ்யா கேமராவை அசோக்கிடம் ஒப்படைத்தாள்.
அசோக் அதை வாங்கி டிஸ்ப்ளே அழுத்தி பார்த்தான்.
தலை மயிர் எல்லாம் கலைந்து போய், எல்லாப்பக்கமும் குத்திட்டு நிற்க.. தூக்கம் அகலாத முகம் வாடிப்போயிருக்க.. இமைகள் முழுமையாக விலகாமல் கண்கள் சுருங்கிப் போயிருக்க.. இவன் வேறு உதட்டை குரங்கு மாதிரி பிதுக்கியிருந்தான்.. மொத்தத்தில் ரொம்பவே அசிங்கமாக இருந்தான்..!!இப்படி ஒரு ஃபோட்டோ உயிரோடு இருப்பது என்றைக்காயிருந்தாலும், தன் இமேஜுக்கு ஆபத்து என்று அசோக்கிற்கு தோன்றியது.
சற்றும் யோசிக்காமல் பட்டன் தட்டி, அதை அழித்தான்.
அவ்வளவுதான்.. அடுத்த நொடியே அவன் தலையில் நங்கென்று ஒரு குட்டு விழுந்தது.. திவ்யாதான் குட்டினாள்..!! அசோக் வலியில் அலறினான்..!!“ஆஆஆஆ..!!!! லூசு..!!!! ஏண்டி கொட்ன..?”“பின்ன என்ன..? நீ பாட்டுக்கு அசால்ட்டா டெலீட் பண்ணிட்ட.. நான் எவ்ளோ கஷ்டப்பட்டு அந்த ஃபோட்டோவை எடுத்தேன் தெரியுமா..? எல்லாம் போச்சு..!!”“அதுக்காக.. கொட்டுவியா..?”“அப்புறம்..?? நான்தான் டெலீட் பண்ணினா.. மண்டைல போடுவேன்னு சொல்லிட்டுத்தான கைல குடுத்தேன்..?”“அசிங்கமா இருந்ததுடி.. அதை வச்சுக்க சொல்றியா..?”“சட்டில இருந்தாத்தான அகப்பைல வரும்..? ஃபோட்டோ நல்லாருக்கனும்னா.. நாம கொஞ்சமாவது அழகா இருக்கணும்..!! அது வெளங்காம.. கேமரா சரியில்ல.. ஃபோட்டோ சரியில்லன்னு.. லூசுத்தனமா சொல்ல வேண்டியது..” அவள் கேலியாக சொல்ல, அசோக் கடுப்பானான்.
“ஏண்டி.. காலாங்காத்தால கலாய்க்கிறதுக்குன்னே வந்திருக்கியா நீ..?? உன்னை என்ன பண்றேன் பாரு..!!” அசோக் போர்வையை உதறிக்கொண்டு எழ,“ஐயய்யோ.. கொலை கொலை..!! யாராவது என்னை காப்பாத்துங்க..!!”என்று கத்திக்கொண்டே திவ்யா எழுந்து ஓடினாள்.
அசோக் விரட்டினான்.
காலையிலேயே எழுந்து குளித்து பக்திப்பழமாய் அமர்ந்திருந்த செல்வா.. அவர்கள் குழந்தைகள் மாதிரி ஓடிப்பிடித்து விளையாடுவதை பார்த்து.. வேடிக்கையாக சிரித்தார்..!! அறையை விட்டு வெளியேறி மொட்டை மாடியில் நுழைந்தபோது, அசோக் திவ்யாவை வளைத்து பிடித்தான்.
கேமரா வைத்திருந்த கையால் அவளை இறுக்கிப் பிடித்துக் கொண்டவன், இன்னொரு கையை மடக்கி அவள் தலையிலேயே ‘நங்.. நங்.. நங்.. நங்..’ என்று நாலைந்து குட்டு குட்டினான்.
ஒவ்வொரு குட்டுக்கும் திவ்யா, ‘ஆ.. ஆ.. ஆ.. ஆ..’ என அலறிக்கொண்டே இருந்தாள்.
“ஆஆஆஆ..!! விடுறா.. தடிமாடு..!! வலிக்குது..!!” திவ்யா கெஞ்சினாள்.
“அப்போ நீ கொட்டுனது மட்டும்.. எனக்கு வலிக்காதா..?” அசோக் திவ்யாவைப் பிடித்திருந்த பிடியை தளர்த்தினான்.
“அதுக்காக.. நான் ஒரு கொட்டு கொட்டுனதுக்கு.. நீ நாலஞ்சு கொட்டு கொட்டுவியா..? ஷ்ஷ்ஷ்ஷ்.. வலி உயிர் போகுது..!!” திவ்யா உச்சந்தலையை பரபரவென தேய்த்துக் கொண்டாள்.
“அது நீ கொட்டுனதுக்கு வட்டி..!!”“வெவ்வெவ்வே..!! மூஞ்சைப்பாரு..!! நீ மாறவே இல்ல.. சின்ன வயசுல இருந்து உன்கிட்ட கொட்டு வாங்கி கொட்டு வாங்கியே.. என் தலை நல்லா வீங்கி பெருசாயிடுச்சு..!!”“ஹ்ஹாஹ்ஹா..!!”“இளிக்காத.. சரி சரி.. வா..!! அப்படியே என்னை ஒரு ஸ்னாப் எடு பாப்போம்..!!”“ம்ம்.. இங்க வேணாம்.. வா.. அப்படி போயிடலாம்..”அசோக் திவ்யாவை அழைத்து சென்றான்.
உயரமாய் மொட்டை மாடி வரை வளர்ந்திருந்த ஒரு தென்னை மரம், அவளுக்கு பின்னணியில் வருமாறு, அவளை நிற்க சொன்னான்.
வெளிச்சம் அவளுடைய முகத்தில் சரியாக விழுமாறு திருப்ப சொன்னான்.
க்ளிக் செய்யும் வரை.. ‘லைட்டா தலையை குனி.. இல்ல ரொம்ப.. ம்ம்.. இப்போ ஓகே.. ஸ்மைல்.. கொஞ்சம் கம்மி பண்ணிக்கோ..’ என்று இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்துக்கொண்டே இருந்தான்.
திவ்யா தன் கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு போஸ் கொடுத்தாள்.
காலை நேர சூரிய கதிர்கள் அவளுடைய முகத்தில் பட்டு தெறிக்க, அவளது நிலா முகம் மேலும் பிரகாசித்தது.
அவள் அழகாக புன்னகைக்க.. அசோக் க்ளிக் செய்தான்..!! அருமையாக வந்திருந்தது அந்த புகைப்படம்..!! டிஸ்ப்ளேயில் அவளுடைய அழகை ஒருகணம் ரசித்த அசோக்,“செம அழகா இருக்குற திவ்யா..!!” என்றான் விழிகளை விலக்க மனதே இல்லாதவனாய்.
“எங்க குடு.. பாக்கலாம்..!!”திவ்யா வாங்கிப் பார்த்தாள்.
பார்த்தவள்,“வாவ்..!!! நான் கூட என்னவோ நெனச்சேன்.. நல்லா எடுத்திருக்கடா.. குட் ஜாப்..!!” என அதிசயித்தாள்.
“தேங்க்ஸ்..!! ஐயாகிட்ட இதுமாதிரி இன்னும் என்னன்னவோ திறமை ஒளிஞ்சிருக்கு.. உனக்குத்தான் தெரியலை..!!”“அடங்குடா டேய்..!! இதுல உன் திறமை என்ன இருக்கு..?? நான் அழகா இருக்கேன்.. அதான் ஃபோட்டோவும் அழகா வந்திருக்கு..!! நான்லாம் இதுவரை என் ஃபோட்டோ எதையும் டெலீட் பண்ணினது இல்லைப்பா.. ஃபோட்டோ எடுத்தவங்களையும் நங் நங்னு தலைல கொட்டினது இல்ல..!!”“ஒய்..!! நக்கலா..?” அசோக் கடுப்பானான்.
“ஹாஹா..!! விடு விடு..!! உண்மையை சொன்னா கோவம் வரத்தான் செய்யும்..!!”“போடீ லூசு..!!”“ம்ம்ம்… இதை அனுப்பினா அவருக்கு பிடிக்கும்ல அசோக்..?” திவ்யா திடீரென அப்படி கொஞ்சலாக கேட்க, அசோக் குழம்பினான்.
“யாருக்கு..?”“அவருக்குத்தான்.. திவாகருக்கு..!! என் ஃபோட்டோ வேணும்னு கேட்டிருந்தார்.. அதான்.. காலைலேயே கேமரா எடுத்துட்டு உன்னை பார்க்க வந்தேன்..!! இதை அவருக்கு அனுப்பலாமா அசோக்.. நல்லாருக்குல..?”திவ்யா சொல்ல சொல்ல, அசோக் அப்படியே உள்ளுக்குள் உடைந்து நொறுங்கினான்.
காலையிலேயே திவ்யாவின் முகத்தில் விழித்ததும், அவள் செய்த கலாட்டாவிலும்.. மிகவும் இலகுவாக மாறியிருந்த அவனது மனதை.. நேற்றிரவு இருந்த அந்த சோகம் வந்து மீண்டும் கவ்விக்கொண்டது..!! ‘ச்சே.. என் காதலியின் அழகை இன்னொருவன் ரசிக்க.. என் கையாலேயே புகைப்படம் எடுத்திருக்கிறேனே..?’ எரிச்சலாக இருந்தது.
அந்த கேமராவை வாங்கி அப்படியே தரையில் அடித்து உடைத்துவிடலாமா என்பது போலொரு ஆத்திரம் வந்தது.
ஆனால்.. பொங்கி வந்த ஆத்திரத்தை உடனடியாய் அடக்கிக்கொண்டு, திவ்யாவை ஏறிட்டு பரிதாபமாக புன்னகைத்தான்.
“என்னடா.. ஒன்னும் சொல்ல மாட்டேன்ற..? அனுப்பட்டுமா.. அவருக்கு பிடிக்குமா..?”“ம்ம்.. அனுப்பு திவ்யா.. பிடிக்கும்..!!”“தேங்க்யூடா.. தேங்க்யூ..!!” உற்சாகமாக கத்திய திவ்யா, அசோக்கை ஒருமுறை இறுக்கி அணைத்துக் கொண்டாள்.
அப்புறம் மணிக்கட்டை திருப்பி வாட்சை பார்த்தவள்,“ஐயோ.. எனக்கு டைமாச்சு அசோக்.. நான் கெளம்புறேன்.. ஈவினிங் பார்க்கலாம்.. பை..!!”என்று சொல்லிவிட்டு மான் மாதிரி துள்ளி குதித்து படியிறங்கி ஓடினாள்.
இதயம் தீப்பற்றி எறிய.. கண்கள் கலங்க ஆரம்பிக்க.. அவள் போவதையே பார்த்தவாறு.. அசோக் உறைந்து போய் நின்றிருந்தான்.
அத்தியாயம் 12திவ்யா சென்ற சில நிமிடங்களிலேயே சித்ரா படியேறி மேலே வந்தாள்.
அவளுடைய ஒரு கையில் ஒரு பெரிய டிஃபன் கேரியர்..!! நேற்று இரவு கோபமாக சென்ற தம்பி காலையில் சாப்பிட வர மாட்டான் என்று நினைத்திருப்பாள் போலிருக்கிறது.
சமைத்ததை கேரியரில் கட்டி, தம்பியின் அறைக்கே எடுத்து வந்திருந்தாள்.
அசோக்கிடம் அவள் அதிகமாகவெல்லாம் பேசிக்கொள்ளவில்லை.
“குளிச்சுட்டு வா.. சாப்பிடலாம்..” என்று முறைப்பாக சொன்னவள், செல்வாவிடம் திரும்பி,“செல்வாண்ணா.. உங்களுக்கும் சேர்த்துத்தான் எடுத்துட்டு வந்திருக்கேன்.. இன்னைக்கு ஒரு நாள் மெஸ்ல சாப்பிடாம.. நான் சமைச்சதை சாப்பிடுங்க..!!” என்றாள் உண்மையான அன்புடன்.
அசோக்கும் அவளிடம் எதுவும் பேசவில்லை.
அமைதியாக சென்று, பாத்ரூமுக்குள் புகுந்து கொண்டான்.
அவன் குளித்துவிட்டு வந்ததும், சித்ரா இருவருக்கும் சாப்பாடு பரிமாறினாள்.
இட்லியும், சட்னியும் சமைத்து கொண்டு வந்திருந்தாள்.
இட்லியை அசோக்கின் தட்டில் போட்டுக்கொண்டே, அவனிடம் சன்னமான குரலில் கேட்டாள்.
“கோவமா..?”“அதுலாம் ஒண்ணுல்ல.. சட்னியை ஊத்து..!!” என்றான் அசோக்கும் முறைப்பாக.
“நெலக்கடலை சட்னி.. உனக்கு பிடிக்கும்னு செஞ்சேன்..!!” என்றாள் சித்ரா சற்றே முகம் மலர்ந்தவளாக.
“ம்ம்.. ஊத்து ஊத்து..”அசோக் அப்புறமும் இறுக்கமான குரலில் சொல்ல, ஓரக்கண்ணால் தன் தம்பியை பார்த்து சித்ரா புன்னகைத்தாள்.
அப்புறம் ஒரு ஐந்தாறு நாட்கள் அதிக முக்கியத்துவம் இல்லாமலே கழிந்தன.
திவ்யா திவாகருடன் தொடர்ந்து தினமும் சேட் செய்தாள்.
திவாகரின் கேள்விக்கு எப்படி பதில் சொல்லுவது என்று அடிக்கடி அசோக்கிடம் கேட்டுக்கொண்டாள்.
அசோக் அச்சமயம் அருகில் இல்லாவிட்டால் கூட.. அவனுடைய செல்போனுக்கு கால் செய்து.. ‘ஆட்டுக்கால் சூப் எனக்கு புடிக்குமான்னு கேக்குறாருடா.. என்ன சொல்றது..?’ என்று கேட்டு இம்சை செய்வாள்.
அசோக்கும் எரிச்சலை அடக்கிக்கொண்டு ஏதோ ஒரு பதில் சொல்வான்.
அன்று அவர்கள் என்ன பேசிக்கொண்டார்கள் என்பதை, அடுத்த நாள் அசோக்கிற்கு அப்டேட் கொடுத்து விடுவாள்.
அசோக்கும் அசுவாரசியமாய் அதை கேட்டுக் கொள்வான்..!!அப்போதுதான் ஒரு நாள்..அது ஒரு சண்டே மதியம்..!! எல்லோருக்கும் விடுமுறை..!! திவ்யா அவளுடைய அறையில் முடங்கியிருந்தாள்.
அக்காவின் வீட்டிற்கு வந்து மதிய உணவு அருந்தியிருந்த அசோக், ஹாலில் அமர்ந்து.. சித்ராவிடமும், கார்த்திக்கிடமும் தன் ஆபீசில் நடந்த சுவாரசியமான சம்பவம் ஒன்றை.. சொல்லிக்கொண்டிருந்தான்.
“அசோக்.. ஒரு நிமிஷம் இங்க வாயேன்..!!”திவ்யாவின் குரல் கேட்டு அசோக் திரும்பி பார்த்தான்.
திவ்யா தனது அறையில் இருந்து தலையை மட்டும் வெளியே நீட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
‘என்ன..??’ என்பது போல அசோக் சைகையால் கேட்டான்.
‘இங்க வா…!!!’ என்பது போல அவள் சைகையால் பதிலளித்தாள்.
வேறு வழியில்லாமல் அசோக் எழுந்தான்.
கார்த்திக்கிடமும், சித்ராவிடமும் ஒரு அசட்டுப் புன்னகையை உதிர்த்துவிட்டு.. திவ்யாவின் அறையை நோக்கி நடந்தான்.
“என்ன திவ்யா..?” என்றான் அவளுடைய அறைக்குள் நுழைந்ததுமே.
“அவர் ஆன்லைன் வந்திருக்கார்டா.. பேசப் போறேன்.. நீ என் பக்கத்துல இரேன்…!!”“ப்ச்.. நான் எதுக்கு திவ்யா.. நீ பேசு..!!”“என்னடா இப்படி சொல்ற..? நீதான் என் நலம் விரும்பி.. என் லவ் அட்வைசர்..!! நீயே இப்படி சொன்னா.. எப்படி..? வாடா.. ப்ளீஸ்..!!”அவள் கெஞ்ச, அசோக் நொந்து போனான்.
வேண்டாவெறுப்பாக சென்று அவளுக்கு அருகில் அமர்ந்து கொண்டான்.
திவ்யா மிக உற்சாகமாக திவாகருடன் சேட் செய்ய ஆரம்பித்தாள்.
அவ்வப்போது அசோக்கிடம் திரும்பி ஆலோசனை கேட்டுக்கொண்டாள்.
அசோக்கும் எரிச்சலை அடக்கிக்கொண்டு அவளுக்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தான்.
ஆரம்பத்தில் இருவரும் பொதுவாகத்தான் பேசிக்கொண்டிருந்தார்கள்.
அப்புறம் அந்த திவாகர்தான் மெல்ல ஆரம்பித்தான்.
திவ்யாவுடைய ஃபோட்டோவை இப்போது பார்த்துக் கொண்டிருப்பதாக சொன்னான்.
அவளுடைய அழகை புகழ்ந்தான்.
திவ்யா நேற்று அவனுடைய கனவில் வந்ததாக திடீரென சொன்னான்.
‘மனசே சரியில்ல.. ரெண்டு நாளா சரியா சாப்பிடலை.. தூங்கலை..’ என்று பிதற்றினான்.
அசோக் அவர்கள் பேசுவதை பார்ப்பதும், அப்புறம் எரிச்சலாக எங்கேயோ வெறிப்பதுமாக இருந்தான்.
அப்போதுதான் திவ்யா உற்சாகமான குரலில் கத்தினாள்.
Thoppul Nakkum Tamil Sex Stories– தொடரும்
ஆதாரம்:இணையம்