இருண்ட

அசத்த போறது அசோக் 1

🇮🇳 தமிழ்
வேகம்: 1.0x
நிலை: தயார்
×

இயக்க அமைப்பு உதவி

நீங்கள் ஏற்கனவே Chrome/Edge ஐப் பயன்படுத்தினாலும், இன்னும் இயக்க முடியவில்லை என்றால், உங்கள் தொலைபேசி/PC அமைப்புகளைச் சரிபார்க்கவும்.
நீங்கள் கேட்க விரும்பும் மொழியைப் பயன்படுத்தி, TTS இன்ஜின் செயலில் இருப்பதை உறுதி செய்யவும்.

Android மற்றும் பிற OS பயனர்களுக்கு

Android, Harmony, Lineage, Ubuntu Touch, Sailfish, ColorOS / FuntouchOS, hyperOS போன்ற பயனர்களுக்கு
மெனு அணுகல்: அமைப்புகளைத் திற > அணுகல்தன்மை > உரையிலிருந்து பேச்சு வெளியீடு.
அது இல்லை என்றால், அமைப்புகள் > மேலே உள்ள தேடல் பெட்டி > "text-to-speech" அல்லது "text" என உள்ளிடவும்
பிறகு உரையிலிருந்து பேச்சு அல்லது அதை ஒத்த ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
மொழியைச் சேர்க்க, கியர் ஐகானைக் கிளிக் செய்யவும் ⚙ > குரல் தரவை நிறுவு உங்களுக்குத் தேவையான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.

iOS பயனர்களுக்கு

அமைப்புகள் > அணுகல்தன்மை > பேசப்படும் உள்ளடக்கம் என்பதற்குச் செல்லவும்
அல்லது அமைப்புகள் > மேலே உள்ள தேடல் பெட்டி > "பேசப்படும் உள்ளடக்கம்" என உள்ளிட்டு என்டர் செய்யவும்
மொழியைச் சேர்க்க குரல்கள் என்பதைத் தேர்ந்தெடுத்து குரலைத் தேர்ந்தெடுக்கவும்

PC MacOS பயனர்களுக்கு

மெனு அணுகல்: Apple மெனுவைக் கிளிக் செய்யவும் () > கணினி அமைப்புகள் > அணுகல்தன்மை > பேசப்படும் உள்ளடக்கம்.

Windows பயனர்களுக்கு

Windows 10 & 11
மெனு அணுகல்: தொடக்கத்தைத் திற > அமைப்புகள் > நேரம் & மொழி > பேச்சு.
Windows 7 & 8
கட்டுப்பாட்டு பலகம் > அணுகல் எளிமை > பேச்சு அங்கீகாரம் > உரையிலிருந்து பேச்சு
Windows XP
தொடக்கம் > கட்டுப்பாட்டு பலகம் > ஒலிகள், பேச்சு மற்றும் ஆடியோ சாதனங்கள் > பேச்சு
Windows 2000 & ME
தொடக்கம் > அமைப்புகள் > கட்டுப்பாட்டு பலகம் > பேச்சு
Linux, ChromeOS, FreeBSD போன்ற பிற வகை PC பயனர்களுக்கு.
Google, Bing போன்ற தேடுபொறிகளில் உரையிலிருந்து பேச்சு வசதியை இயக்குவதற்கான அமைப்புகளைத் தேடவும்

குறிப்பு தற்போது, இந்தப் பக்கம் உங்கள் சாதனத்தின் இன்ஜினுக்கு ஏற்ப செயல்படுகிறது.
எனவே உருவாக்கப்படும் ஒலி உங்கள் சாதனத்தின் TTS இன்ஜினைப் பின்பற்றுகிறது.

அசத்த போறது அசோக் 1

. Tamil Kamaveri – நான்தான் அந்த அசோக்..!! படித்தது பி.
ஏ.
ஆனால் முடித்தது பி.
ஏ கிடையாது.
வெறும் ப்ளஸ்டூ தான்.
அரியர்கள் அதிகமாகிப் போக, பி.
ஏவை அம்போ என்று விட்டுவிட்டேன்.
சொந்த ஊர் மதுரைக்கு அருகே சோழவந்தான்.
அப்பா அம்மாவுக்கு ஒரே பிள்ளை.
ஒரு தம்பி இருந்தான்.
சின்ன வயதிலேயே தவறிவிட்டான்.
விவசாயம்தான் தொழில்.
நிலபுலம் கொஞ்சம் இருக்கிறது.
நெல் பயிர் செய்கிறோம்.
விவசாயத்தையும் நான் உருப்படியாக பார்ப்பதில்லை.
அப்பாதான் பார்த்துக் கொள்கிறார்.
ஒற்றைப் பிள்ளை என்பதால் ரொம்ப செல்லம்.
நான் செய்வதெல்லாம், நன்றாக தின்ன வேண்டியது.. என்னுடைய பல்சரை எடுத்துக்கொண்டு, நண்பர்களுடன் சோழவந்தான் சந்து பொந்தெல்லாம் சுற்றி வர வேண்டியது.. குளத்தங்கரையில் உட்கார்ந்து கொண்டு போற வர சிட்டுகளை சைட் அடிக்க வேண்டியது.. எவனாவது ஏமாந்தவன் சிக்கினால் அடியை போடவேண்டியது.. ‘ரவுடிப்பய..’ என்று கடந்து செல்லும் பெண்கள் ரகசியமாக சொல்லுவதை, காது குளிர கேட்டுக் கொள்ள வேண்டியது.. காலரை தூக்கி விட்டுக்கொள்ள வேண்டியது..!! ஏதாவது பிரச்னையில் சிக்கி, இதுவரை நான்கைந்து முறை போலீஸ் பிடித்து போயிருக்கிறது.
ஆனால் எஃப்.
ஐ.
ஆர் போடுவதற்கு முன் அப்பா வந்து ஸ்டேஷனில் ஆஜர் ஆகி விடுவார்.
கதை ஆரம்பிக்கின்ற இன்று மதியம், நான் அப்போதுதான் ஊர் சுற்றிவிட்டு வீட்டை அடைந்தேன்.
பல்சரை வெளியே விட்டுவிட்டு, வீட்டுக்குள் நுழைந்தேன்.
அப்பா ஆளை காணோம்.
அம்மாதான் இருந்தாள்.
என்னை பார்த்ததுமே பரபரப்பாக சொன்னாள்.
“உன் அத்தைக்காரி வந்திருக்காடா..!!”“எந்த அத்தை..?”“எத்தனை அத்தை இருக்கா உனக்கு..?”“ம்ம்.. என்ன.. திடீர்னு வந்திருக்கா..? சொல்லாம கொள்ளாம..?”“தெரியலை.. இப்போதான் வந்தா.. உன் ரூம்லதான் உக்காந்திருக்கா.. நீ போய் பேசிட்டு இரு.. நான் குடிக்க ஏதாவது எடுத்துட்டு வர்றேன்..!!”நான் என் ரூமை நோக்கி நடந்தேன்.
அத்தையை பார்ப்பதற்கு முன் அவளை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்.
அவள் பேர் அமிர்தவல்லி.
அப்பாவின் ஒரே தங்கை.
சின்ன வயதிலேயே கணவனை இழந்தவள்.
இரண்டு பெண் பிள்ளைகள் அவளுக்கு.
மூத்தவள் வசுந்தரா.
இளையவள் சுஜித்ரா.
மூத்தவள் டிக்ரீ படித்து முடித்துவிட்டு, காலேஜில் டீச்சராக இருக்கிறாள்.
இளையவள் இப்போதுதான் ப்ளஸ் டூ படிக்கிறாள்.
ரெண்டு பேருமே லட்டு மாதிரி இருப்பாள்கள்..!! அத்தையின் அழகு அப்படியே பிள்ளைகளுக்கும்..!!சுஜி பிறந்த கொஞ்ச நாட்களில்தான் மாமா ஆக்சிடண்டில் உயிர்விட்டார்.
அப்புறம் ஒரு ஐந்தாறு வருடங்கள் அத்தை இரண்டு பிள்ளைகளோடும் எங்கள் வீட்டில்தான் காலம் தள்ளினாள்.
எப்போதும் ஒருமாதிரி விரக்தியாகவே இருப்பாள்.
திடீரென்று ஒருநாள் நான் மெட்ராஸ் போகிறேன் என்றாள்.
ஏதாவது கடை வைத்து பிழைத்துக் கொள்கிறேன் என்று கிளம்பினாள்.
பத்து வருடத்திற்கு முன்பு மூலக்கடையில் ஒரு இட்லிக்கடை ஆரம்பித்தாள்.
இப்போது மெட்ராசில் அவளுக்கு சொந்தமாய் பத்து ரெஸ்டாரன்ட்கள் இருக்கின்றன.
பலகோடி ரூபாய் சொத்து இருக்கிறது.
என்னென்ன கோல்மால் வேலை எல்லாம் செய்தாளோ..? ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்..!!“வா அத்தை.. எப்போ வந்த..?” நான் கேட்டுக்கொண்டே அறைக்குள் நுழைய அத்தை என்னை ஏறிட்டு புன்னகைத்தாள்.
“இப்போதான் அசோக்கு.. நல்லாருக்கியா..?”“ம்ம்.. நல்லாருக்கேன் அத்தை.. புள்ளைகளை கூட்டிட்டு வரலையா..? தனியா வந்திருக்க..?”“புள்ளைகளுக்கு லீவ் கெடைக்கலை கண்ணு.. உங்களை பாத்து நாளாச்சேன்னு அத்தை மட்டும் கெளம்பி வந்தேன்.. ஏன் நான் மட்டும் வரக்கூடாதா..?”“இல்லை.. இந்த மாதிரி நீ திடுதிப்புன்னு கெளம்பி வந்ததில்லையே.. அதான் கேட்டேன்..!!”“நீ சொல்றதும் சரிதான்..!! ஆமாண்டா கண்ணா.. அத்தைக்கு உன்னால ஒரு வேலை ஆகணும்.. அதுக்காகத்தான் வந்திருக்கேன்..!!”“அதான பாத்தேன்..? சும்மால்லாம் நீ இந்தப்பக்கம் வரமாட்டியே..? என்ன மேட்டரு..?”நான் சற்றே ஏளனமாக சொல்ல, அத்தை அமைதியானாள்.
கொஞ்ச நேரம் என் முகத்தை அப்படியே குறுகுறுவென பார்த்தவள், அப்புறம் மெல்லிய குரலில் சொன்னாள்.
“அசோக்கு.. அத்தை ஒரு விஷயம் சொல்றேன்.. அது நம்ம ரெண்டு பேருக்குள்ளதான் இருக்கணும்..!! சரியா..?”“என்னத்தை.. பேச்சுலாம் பயங்கரமா இருக்கு.. என்ன பிரச்னை..?”“இந்த வசு சிறுக்கி இருக்கால்ல..?”“ம்ம்..”“அவ ஒருத்தனை லவ் பண்றா அசோக்கு..!!”“என்னத்தை சொல்ற..? நம்ம வசுவா..? ஹாஹா.. கொழந்தை அத்தை அவ..!! உன்கிட்ட யாராவது தப்பா சொல்லிருப்பாங்க..!!”“போடா கூறு கெட்டவனே..!! அவளே என்கிட்டே சொன்னான்றேன்..?”“அவளே சொன்னாளா..? அந்த அளவுக்கு பெரியாளாயிட்டாளா அவ..?”“ஆமாம் அசோக்கு.. சரியான அடங்காபிடாரி..!!”‘ஆமாம்.. உன் மக உன்னை மாதிரிதான இருப்பா..?’ என நான் மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.
அத்தை தொடர்ந்தாள்.
“நான் அவளுக்காக ஒரு பஞ்சு மில்லு ஓனரு பையனை பாத்திருக்கேன்..!! இவ எவனோ ஒரு பரதேசிப் பயலை லவ் பண்ணிக்கிட்டு.. நான் பாத்த மாப்பிள்ளையை கட்டிக்க முடியாதுன்னு சொல்றா..!!”“ஓஹோ..?? ம்ம்.. சரி.. இப்போ அதுக்கு நான் என்ன பண்ணனும்னு சொல்ற..?”“அவ லவ் பண்றவனை கையை காலை முறிச்சு போடணும் அசோக்கு.. வசு இருக்குற பக்கமே அவன் தலை வச்சு படுக்க முடியாதபடி பண்ணனும்..!!”“பாத்தியா..? இத்தனை நாளா என் நெனப்பே இல்லாம இருந்துட்டு.. இப்போ இந்த அடிதடி வேலைக்கு மட்டும்.. என்னை கூப்பிடுற பாத்தியா..?”“ச்சேச்சே.. அப்டிலாம் இல்லடா அசோக்கு.. நம்ம குடும்பத்துலயே நீதான் என்னை மாதிரி கொஞ்சம் தைரியமான ஆளு.. அதான் அத்தை உன்கிட்ட சொல்றேன்.. மத்தபடி அத்தைக்கு எப்போவுமே உன்மேல பிரியந்தான்..!!”‘நம்ம குடும்பத்துலயே உருப்புடாத ரவுடிப்பய நீதான்..’ அப்படித்தான் அத்தை மனதுக்குள் என்னைப் பற்றி நினைத்திருப்பாள் என்று எனக்கு நன்றாகவே தெரியும்.
ஆனால் அதை வெளியே காட்டிக்கொள்ளவில்லை.
“சும்மா நடிக்காதத்தை.. எல்லாம் எனக்கு தெரியும்.. அதுசரி.. உன்கிட்டதான் இந்த அடிதடிக்குலாம் ஆளு இருக்குமே.. எல்லாத்தையும் விட்டுட்டு எங்கிட்ட வந்திருக்க..?”“மத்த விஷயம் மாதிரி இது இல்லை அசோக்கு.. நம்ம குடும்ப மேட்டரு..!! வெளில தெரிஞ்சா அசிங்கமாயிடும்.. அதான்..!!”“ம்ம்.. சரி.. நீ எங்கிட்ட இதுவரை எதுவும் ஹெல்ப் கேட்டதில்லை.. அதனால பண்றேன்..!! அந்த பையன் அட்ரஸ் கொடு..!! நான் பாத்துக்குறேன்..!!”“அந்த பையன் யாரு.. அவன் பேரு என்ன.. ஊரு என்ன.. எல்லாம் நீதான் கண்டுபுடிக்கணும்..!!”“என்னத்தை வெளையாடுரியா..? வசு அதெல்லாம் உன்கிட்ட சொல்லலையா..?”“அவ சரியான அழுத்தகாரிடா..!! சொல்ல மாட்டேன்றா..!! யாருன்னு சொன்னா.. அவனை நான் ஏதாவது பண்ணிடுவேனொன்னு பயப்படுறா..!!”“ம்ம்ம்.. அப்டியும் நீ விடமாட்டேன்ற..? பொண்ணு வாழ்க்கையை கெடுக்குறதுக்கு.. பொட்டியை தூக்கிட்டு மெட்ராஸ்ல இருந்து வந்துட்ட..?”“போடா அறிவு கெட்டவனே..!! நான் பாத்திருக்குற மாப்ளை கோடீஸ்வரன்டா.. அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சு குடுக்குறதுக்குத்தான் இப்டி பண்றேன்.. மொதல்ல அதை புரிஞ்சுக்கோ நீ..!!”“ம்ம்.. சரி.. பண்றேன்..!! எனக்கு என்ன சாலரி..?”“சாலரியா..?”“ஆமாம்.. நான் எதோ சப்பை மேட்டர்னு நெனச்சேன்.. ஆளையே நான்தான் கண்டுபுடிக்கனுன்னு சொல்றியே..? ரொம்ப வேலை இருக்கும் போல இருக்கே..? எனக்கு ஒரு அமவுண்ட் பிக்ஸ் பண்ணிடு..!!”“ம்ம்.. சரிடா.. அந்த பூந்தமல்லி ஹோட்டலை உன் பேர்ல எழுதி வச்சிடுறேன்..!! போதுமா..?”“நெஜமாவா அத்தை சொல்ற..? நம்பலாமா..?”“ஏண்டா.. அத்தை மேல நம்பிக்கை இல்லையா..?”“ஹாஹா.. உன்னல்லாம் நம்ப முடியாது அத்தை..? எத்தனை பேருக்கு நீ அல்வா கொடுத்திருப்ப..? சும்மாவா அந்த ஒத்தை இட்லிக்கடை பத்து ஹோட்டலா மாறிருக்கும்..?”“ச்சேச்சே.. அதெல்லாம் மத்தவங்களுக்கு அசோக்கு..!! நீ என் அண்ணன் புள்ளை.. உன்னை ஏமாத்துவனா..?”“ம்ம்.. சரி நம்புறேன்..!! அந்த பையன் யாருன்னு கண்டுபுடிச்சு.. அவன் கையை காலை உடைச்சு.. அவனை நம்ம வசு பக்கம் வர விடாம பாத்துக்குறேன்.. போதுமா..?”“போதுண்டா..!! அப்போ இன்னைக்கே அத்தையோட கெளம்பி மெட்ராஸ் வா.. மேட்டரை முடிச்சதும்.. ரிஜிஸ்ட்ரேஷன் வச்சுக்கலாம்..!!”“இன்னைக்கே வந்தா வசுவுக்கு சந்தேகம் வரும் அத்தை.. நீ கெளம்பு.. நான் ரெண்டு நாள் கழிச்சு பொறுமையா வர்றேன்..!!”“ம்ம்.. அதுவும் சரிதான்..!!” அத்தை சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, இரண்டு கைகளிலும் காபி கப்போடு அம்மா அந்த அறைக்குள் நுழைந்தாள்.
சிரித்த முகத்துடன் என்னிடம் கேட்டாள்.
“அத்தையும் மருமகனும் குசுகுசுன்னு.. அப்டி என்ன ரகசியம் பேசுறீங்க..?”நான் தலையை லேசாக சாய்த்து, ஓரக்கண்ணால் அம்மாவை பார்த்தேன்.
அப்புறம் கேலியான குரலில் கேஷுவலாக சொன்னேன்.
“ம்ம்ம்ம்.. நானும் அத்தையும் சேர்ந்து.. ஒரு பேங்க்கை கொள்ளையடிக்க போறோம்.. அதுக்குத்தான் ப்ளான் போட்டுக்கிட்டு இருக்கோம்..!!”அம்மா கண்களை இடுக்கி, உக்கிரமாக என்னை முறைத்தாள்.
அப்புறம் வலது கையில் இருந்த காபிகப்பை டேபிளில் வைத்துவிட்டு, என்னுடைய நடு மண்டையில் ‘நங்ங்ங்..!!!’ என்று ஒரு குட்டு வைத்தாள்.
நான் வலியில் கத்த, அத்தை வடிவேலு காமடி பார்த்த மாதிரி சிரித்தாள்.
அப்புறம் ஒரு இரண்டு நாட்கள் கழித்து நான் சென்னையில் காலடி எடுத்து வைத்தேன்.
அத்தையின் வீடு அண்ணா நகரில் இருக்கிறது.
வீடு என்று கூட சொல்ல முடியாது.
பங்களா..!!! நான் சென்ற அதிகாலை நேரத்தில் அத்தைதான் வந்து கதவு திறந்து விட்டாள்.
எனக்கு மாடியில் ஒரு அறை ஒதுக்கி இருப்பதாகவும், அங்கே தங்கிக் கொள்ளுமாறும் சொன்னாள்.
அந்த அறைக்குள் நுழைந்ததுமே, பயணக்களைப்பில் கொஞ்ச நேரம் நன்றாக தூங்கிவிட்டேன்.
அப்புறம் ஒரு எட்டு மணிபோல எழுந்தேன்.
பாத்ரூம் சென்று ஷவரில் குளித்தேன்.
வெளியே வந்து வேறு உடைகள் அணிந்துகொண்டேன்.
டக் இன் செய்து, பெல்ட் மாட்டிக்கொண்டேன்.
கொண்டு வந்திருந்த பேக்கை திறந்து, கூலிங் க்ளாஸ் எடுத்து அணிந்து கொண்டபோது வசு அறைக்குள் நுழைந்தாள்.
டார்க் பிரவுன் நிறத்தில் ஒரு காட்டன் புடவை கட்டிக்கொண்டு, ப்ரெஷாக.. புதுமலர் போல.. தேவதை மாதிரி.. நுழைந்தாள்.
என்னை பார்த்ததுமே சிரிப்பை அடக்க முடியாமல், அழகாக குலுங்கி குலுங்கி சிரித்தாள்.
வயிற்றை ஒரு கையால் பிடித்துக்கொண்டு, விழுந்து விழுந்து சிரித்தாள்.
நான்தான் சற்று எரிச்சலாக கேட்டேன்.
“ஏய்.. ஏய்.. இரு.. இரு..!! ஏன் இப்போ இப்டி லூசு மாதிரி கனைக்கிற..?”“பின்ன..? என்ன ட்ரெஸ் அத்தான் இது..? பிங்க் கலர் ஷேர்ட்.. க்ரீன் கலர் பேன்ட்..?? இதுல கூலிங் க்ளாஸ் வேற..? நீங்க இப்டி ட்ரெஸ் போட்டா.. அவர் கோவிச்சுக்க மாட்டாரா..?”“எவரு..?”“அவர்தான்.. ராமராஜன்..!!”“ஒய்.. என்னப்பத்தி என்ன வேணா சொல்லு.. என் தலைவரை பத்தி பேசாத..!!”“ஓஹோ..? அவர்தான் உங்க தலைவரா..? ஓகே ஓகே.. உங்களை பாத்தாலே தெரியுது..!! ம்ம்ம்.. எப்போ வந்தீங்க..?”“ஜஸ்ட் இன்கமிங்..!! நவ் அவுட்கோயிங்..!!”“ஹாஹா… ம்ம்ம்ம்… அதுசரி.. என்ன திடீர்னு மெட்ராஸ் பக்கம்..?”“ஏன்.. நாங்க மெட்ராஸ் வரக்கூடாதா..? ஒரு பிசினஸ் விஷயமா வந்தேன்..!!”“ஓஹோ.. இந்த அடிதடி, ரவுடிசம்லாம்.. இப்போ பிசினஸ் லிஸ்ட்ல சேர்த்துட்டாங்களா..?” அவள் நக்கலாக கேட்க, நான் கடுப்பானேன்.
“உனக்கு.. கொழுப்பு ரொம்ப ஜாஸ்தியாயிடுச்சுடி.. உன் அம்மா சொன்னது சரிதான்..!!” நான் அப்படி சொன்னதும் வசுவின் முகம் பட்டென்று மாறியது.
சிரிப்பை அப்படியே நிறுத்தினாள்.
என் முகத்தை கூர்மையாக பார்த்தபடி கேட்டாள்.
“அம்மா என்னத்தான் சொன்னா என்னை பத்தி..? சொல்லுங்கத்தான்..!!” அவள் கேட்க, நான் தடுமாறினேன்.
‘உளறிட்டனா.. உளறிட்டனா..’ என என்னை நானே மனதுக்குள் திட்டிக் கொண்டேன்.
Tamil Kamaveri Hot Stories– தொடரும்NEXT PART
ஆதாரம்:இணையம்