இருண்ட

ஆண்மை தவறேல் – 16

🇮🇳 தமிழ்
வேகம்: 1.0x
நிலை: தயார்
×

இயக்க அமைப்பு உதவி

நீங்கள் ஏற்கனவே Chrome/Edge ஐப் பயன்படுத்தினாலும், இன்னும் இயக்க முடியவில்லை என்றால், உங்கள் தொலைபேசி/PC அமைப்புகளைச் சரிபார்க்கவும்.
நீங்கள் கேட்க விரும்பும் மொழியைப் பயன்படுத்தி, TTS இன்ஜின் செயலில் இருப்பதை உறுதி செய்யவும்.

Android மற்றும் பிற OS பயனர்களுக்கு

Android, Harmony, Lineage, Ubuntu Touch, Sailfish, ColorOS / FuntouchOS, hyperOS போன்ற பயனர்களுக்கு
மெனு அணுகல்: அமைப்புகளைத் திற > அணுகல்தன்மை > உரையிலிருந்து பேச்சு வெளியீடு.
அது இல்லை என்றால், அமைப்புகள் > மேலே உள்ள தேடல் பெட்டி > "text-to-speech" அல்லது "text" என உள்ளிடவும்
பிறகு உரையிலிருந்து பேச்சு அல்லது அதை ஒத்த ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
மொழியைச் சேர்க்க, கியர் ஐகானைக் கிளிக் செய்யவும் ⚙ > குரல் தரவை நிறுவு உங்களுக்குத் தேவையான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.

iOS பயனர்களுக்கு

அமைப்புகள் > அணுகல்தன்மை > பேசப்படும் உள்ளடக்கம் என்பதற்குச் செல்லவும்
அல்லது அமைப்புகள் > மேலே உள்ள தேடல் பெட்டி > "பேசப்படும் உள்ளடக்கம்" என உள்ளிட்டு என்டர் செய்யவும்
மொழியைச் சேர்க்க குரல்கள் என்பதைத் தேர்ந்தெடுத்து குரலைத் தேர்ந்தெடுக்கவும்

PC MacOS பயனர்களுக்கு

மெனு அணுகல்: Apple மெனுவைக் கிளிக் செய்யவும் () > கணினி அமைப்புகள் > அணுகல்தன்மை > பேசப்படும் உள்ளடக்கம்.

Windows பயனர்களுக்கு

Windows 10 & 11
மெனு அணுகல்: தொடக்கத்தைத் திற > அமைப்புகள் > நேரம் & மொழி > பேச்சு.
Windows 7 & 8
கட்டுப்பாட்டு பலகம் > அணுகல் எளிமை > பேச்சு அங்கீகாரம் > உரையிலிருந்து பேச்சு
Windows XP
தொடக்கம் > கட்டுப்பாட்டு பலகம் > ஒலிகள், பேச்சு மற்றும் ஆடியோ சாதனங்கள் > பேச்சு
Windows 2000 & ME
தொடக்கம் > அமைப்புகள் > கட்டுப்பாட்டு பலகம் > பேச்சு
Linux, ChromeOS, FreeBSD போன்ற பிற வகை PC பயனர்களுக்கு.
Google, Bing போன்ற தேடுபொறிகளில் உரையிலிருந்து பேச்சு வசதியை இயக்குவதற்கான அமைப்புகளைத் தேடவும்

குறிப்பு தற்போது, இந்தப் பக்கம் உங்கள் சாதனத்தின் இன்ஜினுக்கு ஏற்ப செயல்படுகிறது.
எனவே உருவாக்கப்படும் ஒலி உங்கள் சாதனத்தின் TTS இன்ஜினைப் பின்பற்றுகிறது.

ஆண்மை தவறேல் – 16

. Sex Stories In Tamil – “ப்ச்.. உனக்கு புரியலை..!! நான் சொன்ன அந்த எயிட்டி செவன்.. மொத்த பொண்ணுகளோட கவுன்ட்.. அவங்க எல்லாமே கால்கேர்ல்ஸ் கிடையாது..!!” அசோக் அப்படி சொல்ல, நந்தினிக்கு இப்போது தெளிவாக புரிந்தது.
“ஓ..!!! இதுல நெறைய உட்பிரிவுகள் வேற இருக்குதோ..??” என்று இளக்காரமாக சொன்னாள்.
“ஆமாம்..!!”“ம்ம்ம்ம்… கார்ல்கேல்ஸ் சரி.. மத்தவங்கல்லாம் எப்படி..?”“எப்படின்னா..?”“ஐ மீன்.. எப்படி வருவாங்க..?? அப்படியே உங்க பேச்சுல உருகி.. உங்க அழகுல மயங்கி.. உங்க கட்டுமஸ்தான உடம்பை பாத்து கெறங்கி.. அப்டியா..?? ஜஸ்ட் ஃபார் ப்ளெஷர்.. நாட் ஃபார் மனி..!! ம்ம்..??” நந்தினியின் குரலில் ஒரு எள்ளல் தொனித்தது.
“ஹேய்.. நீ என்னை கலாய்க்கிறேன்னு புரியுது.. பரவால..!! ஆனாலும் இதுலாம் கொஞ்சம் ஓவர் நந்தினி.. நான் ஏதோ போதைல கொஞ்சம் உளறிட்டேன்.. அதை வச்சு நீ இந்த பேச்சு பேச கூடாது..!!”“போதைல உளற மட்டுமா செஞ்சிங்க..?” அவசரத்தில் சொல்லிவிட்ட நந்தினி அப்புறம் நாக்கை கடித்துக் கொண்டாள்.
“வேற என்ன செஞ்சேன்..?” அசோக் இப்போது நெற்றியை சுருக்கியவாறு கேட்டான்.
“வே..வேணாம்.. விடுங்க..”“ஹேய்.. சொல்லு நந்தினி.. வேற என்ன செஞ்சேன்..?”“வேணாம்னு சொல்றேன்ல..?”“ப்ச்.. இதுல என்ன இருக்கு..? கமான்.. சொல்லு..” அசோக் அவளை வற்புறுத்த, நந்தினி தயங்கி தயங்கி சொன்னாள்.
“எ..என் இ..இடுப்பு மேல கை போட்டீங்க..”“ஓஹோ..?? ஸாரி நந்தினி..” அசோக்கின் குரலில் நிஜமாகவே ஒரு வருத்தம் தெரிந்தது.
“பரவால.. தெரியாமத்தான..?”நந்தினி சாந்தமாக சொல்ல, அசோக்கின் பார்வை இப்போது அவளது முகத்தில் இருந்து இடம் மாறியது.
நந்தினியின் இடுப்பில் சென்று நிலைத்தது.
புடவை மறைக்காத நந்தினியின் இடுப்பு.. அழகாக.. குழைவாக.. கவர்ச்சியாக.. பாலையும், சந்தனத்தையும், பட்டரில் கலந்து பூசி விட்டது மாதிரி..!! இப்போது காலைச்சூரியனின் மஞ்சள் வெயில் பட்டு, தகதகவென தங்கம் மாதிரி ஜொலித்தது..!!ஒரு சில வினாடிகள்தான் அசோக் நந்தினியின் இடை அழகை ரசித்திருப்பான்.
அதற்குள் அவன் பார்வை சென்ற இடத்தை கவனித்த நந்தினி, சரக்கென தன் புடவை தலைப்பை இழுத்து, திறந்திருந்த இடுப்பை மறைத்துக் கொண்டாள்.
ஏமாற்றமாய் நிமிர்ந்த அசோக்கை பார்த்து எள்ளலான குரலில் சொன்னாள்.
“இந்த ஃப்ரண்டை சைட் அடிக்கிற வேலைதான் வச்சுக்க கூடாது..!!”“ஹாஹா.. ஒரு பொண்டாட்டியா உன்கிட்ட எதையும் எதிர்பார்க்க மாட்டேன்னுதான சொன்னேன்.. ஒரு ஃப்ரண்டா உன்னை சைட் அடிக்க மாட்டேன்னு சொல்லவே இல்லையே..?” அசோக் குறும்பாக சொல்ல,“ம்ம்ம்..?? உதை விழும்..!!” நந்தினி முகம் சிவக்க சொன்னாள்.
உதடுகள்தான் அவ்வாறு சொன்னதே ஒழிய, அவளுடைய உள்மனம் வேறு மாதிரி நினைத்தது.
நந்தினி இப்போது ஓரக்கண்ணால் அசோக்கின் முகத்தை ஏறிட்டாள்.
அவனோ குறுகுறுவென இவளுடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனுடைய பார்வையில் இருந்த வசீகரம், நந்தினியை இப்போது செயலிழக்க செய்திருந்தது.
இவளுடைய முகத்தில் ஜொலித்த அழகு, அசோக்கையும் அசைவற்றவனாய் ஆகியிருந்தது.
இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் விழுங்கி விடுவது போல பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
சில வினாடிகள்..!! அப்புறம் அசோக்தான் முதலில் பேசினான்.
“கீழ போலாமா நந்தினி..?”“ஏன்.. வேலை இருக்கா..??”“ஆபீசுக்கு கிளம்பனும்..”“ஓ.. இன்னைக்கே ஆபீசுக்கு போகனுமா..?”“ம்ம்.. கொஞ்சம் வேலை இருக்கு..”“சரி.. போலாம்..”நந்தினி சொன்னதும், அசோக் ஒரு பெருமூச்சை உதிர்த்துவிட்டு திரும்பி நடந்தான்.
நந்தினி உடனே நகராமல் அவனுடைய முதுகையே வெறித்தாள்.
அவ்வளவு நேரம் இழுத்து பிடித்து வைத்திருந்த மூச்சை, இப்போது சீராக வெளியிட்டாள்.
‘இவனுடைய பார்வையில் ஏதோ வசீகரம் இருக்கிறது.. பேச்சில் ஒரு ஸ்னேக உணர்வு பொங்குகிறது..!! இவனுடன் பேசிக்கொண்டே இருக்க வேண்டும் போல ஏன் எனக்கு தோன்றுகிறது..?? இவன் என் அழகை பார்வையால் பருகுவதை, ஏன் என் உள்ளமும் வெட்கமில்லாமல் ரசிக்கிறது..?? இப்போது என்ன நடந்ததென்று என் மனம் மத்தாப்பு கொளுத்தி போட்டது போல பரவசமடைகிறது..??’நந்தினிக்கு புரியவில்லை..!! அவ்வளவு நேரம் அவனுடன் பேசிக்கொண்டிருந்தது அவளுக்கு ஒரு இனம்புரியாத சந்தோஷத்தை கொடுத்திருந்தாலும், ‘கட்டிய கணவனிடம்.. அவன் கட்டிலில் புரண்ட பெண்களை பற்றி.. சிரிப்புடன் பேசுகிற கொடுமையான நிலைமை.. உனக்கு வந்து விட்டதே..’ என்று ஒரு கவலையும்.. அவளுடைய மனதின் ஒரு மூலையில்.. குதித்துக் கொண்டுதான் இருந்தது..!!“ஏய்… என்ன அங்கேயே நின்னுட்ட..?” அசோக் திரும்பி கேட்கவும்,“ம்ம்.. வந்துட்டேன்..” நந்தினியும் அவனுடன் சேர்ந்து நடக்க ஆரம்பித்தாள்.
அத்தியாயம் 13அசோக்கும் நந்தினியும் படிக்கட்டில் இறங்கிக் கொண்டிருந்தார்கள்.
அசோக் மீண்டும் ஐபாட் இயர் ஃபோனை காதுக்கு கொடுத்திருந்தான்.
ஆனால் இப்போது மிதமான வால்யூம் வைத்திருந்தான்.
காதுக்குள் ஒலித்த பாடலுக்கு லேசாக தலையசைத்தவாறே அவன் கீழிறங்க, கணவனை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே நந்தினி உடன் நடந்தாள்.
அவர்கள் இருவரும் ஹாலில் பிரவேசித்த போது, வந்தனா வாயில் எதையோ அரைத்துக்கொண்டே எதிர்ப்பட்டாள்.
இவர்களை பார்த்ததும், வாயிலிருப்பதை விழுங்கிவிட்டு புன்னகைத்தாள்.
அசோக்கிடம் உற்சாகமான குரலில் சொன்னாள்.
“ஹாய் அத்தான்.. குட் மார்னிங்..”“குட் மார்னிங் வந்தனா..!! சாப்டாச்சா..??”“ஹாஹா.. இன்னும் இல்ல.. இது சும்மா.. ஒரே ஒரு பூரி மட்டும்.. குருமா இல்லாம..!!”“ஓஹோ..?? ம்ம்ம்ம்.. அப்புறம் உன்கிட்ட ஒன்னு கேக்கனும்னு நெனச்சேன்..”“என்ன..?”“அது என்ன பேரு.. ‘வந்தனா.. போனனா.. வழுக்கி வுழுந்தனா..’ன்னு..??” அசோக்கின் கிண்டலுக்கு வந்தனா சிரித்தாள்.
“ஹாஹா.. தெரியாது..!!”“என்ன தெரியாது..?? நீ வந்தியா போனியான்னு உனக்கே தெரியாதா..??”“ஆஆஆஹ்ஹ்.. முடியலை..!! அது என்ன பேருன்னு எனக்கு தெரியாது.. மீனிங் கூட மீ-க்கு நஹி மாலும்..!! அப்பாதான் எனக்கு அந்த பேரு வச்சாரு.. அவரையே போய் கேளுங்க.. வந்தனா போனனான்னு..!!”“இனிமே எங்க அவரை போய் கேக்குறது.. அவர்தான் வர முடியாத எடத்துக்கு போயிட்டாரே..??”“ம்ம்ம்.. அப்புறம்.. டெயிலி மார்னிங் இந்த மாதிரிதானா.. எக்சர்சைஸா..??”“டெயிலின்னு சொல்ல முடியாது.. பட் மோஸ்ட்லி..”“ம்ம்.. குட் ஹேபிட்..!! அதான் உங்க உடம்பு இந்த மாதிரி நல்லா ட்ரிம்மா இருக்கு..!!”“ஹாஹா.. தேங்க்யூ..!!”அசோக் சிரிக்க, அவ்வளவு நேரம் அவர்கள் பேசும்போது இயல்பாக இருந்த நந்தினி, இப்போது லேசாக முகம் சுளித்தாள்.
ஏனோ அவளால் வந்தனாவின் பேச்சை ரசிக்க முடியவில்லை.
வந்தனாவோ அக்காவின் முகமாற்றத்தை கவனியாது, தொடர்ந்து அசோக்கிடம் பேசினாள்.
“சாங் கேக்குறீங்களா..?”“ம்ம்..”“என்ன சாங் ஓடுது..?”வந்தனா அந்த மாதிரி கேட்கவும் அசோக் உற்சாகமானான்.
அவனுடைய கைகள் இரண்டையும் விரித்து, சினிமாக்களில் காதலன் காதலியை பார்த்து பாடுவது மாதிரி, ஒரு லவ் ஃபீலிங்கோடு வந்தனாவை பார்த்து அந்த நண்பன் பட பாடலை பாடினான்.
“லவ் இஷ்ட ப்ரேம ப்யாரோ ப்யாரோ.. ஒரு காதல் உந்தன் மேலே..!!”அந்த ‘உந்தன் மேலே’ சொன்னபோது அவனுடைய ஆட்காட்டி விரலை வந்தனாவின் முகத்தை நோக்கி நீட்ட, அவள் வாயை பொத்திக்கொண்டு சிரித்தாள்.
அந்த காட்சியை பார்த்த நந்தினிக்கோ காதில் புகை வராத குறைதான்.
தங்கையை பார்த்து காதல் கீதம் பாடிய கணவனை எரிச்சலுடன் பார்த்தாள்.
வந்தனாவோ வாயெல்லாம் பல்லாக அசோக்கிடம் சொன்னாள்.
“வாவ்..!! சூப்பர்ப் சாங்-த்தான்.. எனக்கு ரொம்ப பிடிக்கும்.. தெரியுமா..??”“ஓ.. அப்படியா..?? எனக்கும் ரொம்ப பிடிக்கும்..!!”“நம்ம ரெண்டு பேருக்கும் ஒரே டேஸ்ட்..!!”“ம்ம்.. யெஸ்..!! இந்தா.. நீ கேக்குறியா..?” அசோக் இயர்ஃபோன் கழட்டி, ஐபாடை வந்தனாவிடம் நீட்ட,“இ..இல்லைத்தான்.. வேணாம்..” என்றாள் அவள்.
“ப்ச்.. பரவால.. கேளு..!!”இப்போது வந்தனா இயர்ஃபோன் மாட்டிக்கொண்டு பாடல் கேட்க ஆரம்பித்தாள்.
கண்களை லேசாக மூடிக்கொண்டு, காதுக்குள் ஒலிக்கும் இசைக்கு ஏற்றவாறு மெல்ல தலையை ஆட்டி ரசித்தாள்.
அசோக் வந்தனாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க, நந்தினி அசோக்கை முறைத்துக் கொண்டிருந்தாள்.
சில வினாடிகள் பாடல் கேட்டு ரசித்த வந்தனா, அப்புறம் இயர்ஃபோன் கழட்டியவாறே.. அதே பாடலின் வேறு வரிகளை இப்போது அசோக்கை பார்த்து பாடினாள்.
“ஏனோ தன்னாலே உன் மேலே.. காதல் கொண்டேனே..!! ஏதோ உன்னாலே என் வாழ்வில்.. அர்த்தம் கண்டேனே..!!”அவ்வளவுதான்..!! அவ்வளவு நேரம் அசோக்கை முறைத்துக்கொண்டிருந்த நந்தினி, இப்போது தலையை திருப்பி தங்கையை அதைவிட அதிகமாக முறைக்க ஆரம்பித்தாள்.
அசோக்கும், வந்தனாவுமோ நந்தினியின் முறைப்பை கவனிக்கவே இல்லை.
தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.
அசோக்தான் கேட்டான்.
“உனக்கு ம்யூசிக் கேக்குறது ரொம்ப பிடிக்குமா வந்தனா..?”“ஐயோ.. எனக்கு கொள்ளை ஆசைத்தான்.. உயிர்னு கூட சொல்லலாம்..!!”“குட்.. எந்த மாதிரி ம்யூசிக் கேட்ப..?”“மோஸ்ட்லி தமிழ் ஃபில்ம் ம்யூசிக்தான்..!!”“ஓ..!! சாங்க்ஸ்லாம் எதுல கேட்ப..?”“டிவிலதான்.. சன் ம்யூசிக்..!!”“அச்சச்சோ..!! அது பாட்டு பாக்குறது.. நான் பாட்டு கேக்குறது பத்தி கேட்டேன்..!!”“இல்லத்தான்.. டிவில கேக்குறதோட சரி..!!” வந்தனாவின் குரலில் ஒரு மெல்லிய சோகம்.
“ஓ..!! ம்ம்ம்.. ஓகே.. இந்தா.. இதை நீ வச்சுக்கோ.. இனிமே இதுல பாட்டு கேளு..!!” அசோக் தன் கையிலிருந்த ஐபாடை வந்தனாவின் கையில் திணிக்க, அவள் பதறினாள்.
“ஐயோ.. வேணாத்தான்..”“பச்.. பரவால வந்தனா.. வச்சுக்கோ..!! திஸ் இஸ் மை கிஃப்ட்..!!”“இ..இல்லத்தான்.. வேணாம்..!!”வந்தனா சொல்லிக்கொண்டே அருகில் நின்ற அக்காவை மிரட்சியாக திரும்பி பார்த்தாள்.
அவள் தன்னையே முறைத்துக் கொண்டிருப்பதை அறிந்ததும், மேலும் கொஞ்சம் மிரண்டாள்.
அசோக்கோ எதையும் கண்டுகொள்ளாமல்..“ப்ச்.. அவளை ஏன் பாக்குற..? அவ ஒன்னும் சொல்ல மாட்டா.. ம்ம்.. வாங்கிக்கோ..!!” அசோக் வலுக்கட்டாயமாக வந்தனாவின் கையில் திணிக்க, அவள் இருமனதாக தடுமாறினாள்.
“கமான் வந்தனா.. இதுல என்ன இருக்கு.. சும்மா வாங்கிக்கோ.. இப்போ வாங்கிக்க போறியா.. இல்லையா..?” அசோக் சற்றே கடுமையாக சொல்ல, வந்தனா தயங்கி தயங்கி வாங்கிக் கொண்டாள்.
“தே..தேங்க்ஸ்-த்தான்..” என்றாள் தடுமாற்றமாக.
அவள் சொல்லி முடிக்கும் முன்பே, நந்தினி அசோக்கிடம் எரிச்சலாக சொன்னாள்.
“அவதான் வேணான்னு சொல்றால்ல.. ஏன் அவளை கம்பெல் பண்றீங்க..?”என்றவள் தங்கையின் கையிலிருந்த ஐபாடை வெடுக்கென்று பிடுங்கினாள்.
அவளுடைய முகத்தை ஏறிட்டு கடுமையான குரலில் சொன்னாள்.
இல்லை.. கத்தினாள் என்று கூட சொல்லலாம்.
“ஏய்.. படிக்கிற வேலையை போய் மொதல்ல பாருடி.. பாட்டு கேக்குற வேலைலாம் அப்புறம் பாக்கலாம்.. போ..!!”நந்தினி அந்த மாதிரி கத்த, வந்தனாவுக்கு சட்டென முகம் சுருங்கிப் போயிற்று.
ஓரிரு வினாடிகள் அக்காவையே மிரட்சியாக பார்த்தவள், அப்புறம் திரும்பி நடக்க ஆரம்பித்தாள்.
அசோக்கால் நந்தினியின் அந்த செய்கையை நம்பவே முடியவில்லை.
ஓரிரு வினாடிகள் நந்தினியின் முகத்தையே ஆச்சரியமாய் பார்த்தவன், அப்புறம் விடுவிடுவென நடந்து தனது அறைக்குள் நுழைந்தான்.
நந்தினியும் அவன் பின்னாடியே ஓடினாள்.
அறைக்குள் நந்தினி நுழைந்ததுமே அசோக் சற்று கோபமாக கேட்டான்.
“என்னை அவ்வளவு கேவலமானவனா நெனச்சுட்டல நந்தினி..??”“எ..என்ன சொல்றீங்க.. எனக்கு புரியலை..!!”“நடிக்காத.. எல்லாம் எனக்கு தெரியும்..!! நான் சும்மா ஜாலியா பேசுனதை.. உன் தங்கச்சிக்கு வலை விரிக்கிறதா தப்பா நெனச்சுட்டல..?”“ஐயோ.. எ..என்ன பேசுறீங்க நீங்க.. நான் அப்படிலாம் நெனைக்கலை..”“அப்புறம் ஏன் அப்படி பிஹேவ் பண்ணின..?”“அ..அது..”“ம்ம்.. சொல்லு..”“அவ படிக்கிற பொண்ணு.. அவளுக்கெதுக்கு இதுலாம்..? அவ மைன்ட் டைவர்ட் ஆகும்..!!”“ப்ச்.. பொய்..!! அது காரணம் இல்ல..!!”“இல்ல.. நெஜமாத்தான்..!!”நந்தினி உறுதியான குரலில் சொல்ல, அசோக் இப்போது அமைதியானான்.
கொஞ்ச நேரம் நந்தினியின் கண்களையே குறுகுறுவென பார்த்தான்.
நந்தினி அவனுடைய பார்வையின் வெப்பத்தை தாங்க முடியாமல் தடுமாறினாள்.
அப்புறம் அசோக் சற்றே நிதானமாக தெளிவாக சொன்னான்.
“இங்க பாரு நந்தினி.. நான் பொம்பளை பித்தன்தான்.. நெறைய பொண்ணுகளை தொட்டிருக்கேன்..!! ஆனா.. பாலுக்கும், கள்ளுக்கும் கூட வித்தியாசம் தெரியாத அளவுக்கு.. செக்ஸ் வெறி புடிச்சவன் இல்ல..!!”அசோக் சொல்லிவிட்டு திரும்பி நடந்தான்.
கட்டிலில் கிடந்த டவலை எடுத்து தோளில் போட்டுக்கொண்டு, பாத்ரூமுக்குள் நுழைந்தான்.
அவன் உள்ளே நுழையும் வரை, தலையை குனிந்தவாறு அவனையே ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டிருந்த நந்தினி, அப்புறம் கையிலிருந்த ஐபாடை கட்டிலில் வீசிவிட்டு பொத்தென்று மெத்தையில் அமர்ந்தாள்.
அவளுடைய மூளை இப்போது தீவிரமாக எதையோ யோசிக்க ஆரம்பித்தது.
‘ஏன் இப்படி செய்தேன்..? அசோக் அந்த மாதிரி மோசமானவன் இல்லை என்று என் மனதிற்கு நன்றாகவே தெரியுமே..? என் தங்கையும் கூட அத்தானின் கேலிப்பேச்சுகளை சீரியஸாக எடுத்துக்கொண்டு மனம் கெட்டு போகக்கூடியவள் இல்லையே..? அப்புறமும் ஏன் அப்படி நடந்து கொண்டேன்..?’யோசிக்க யோசிக்க அவளுக்கு ஒரு விஷயம் புரிய ஆரம்பித்தது.
அசோக்கும், வந்தனாவும் அவ்வாறு கொஞ்சி பேசியது அவளுடைய மனதுக்கு ஏனோ பிடிக்கவில்லை.
ஏன் பிடிக்கவில்லை..?? தன் கணவன் தன் கண்முன்பே இன்னொரு பெண்ணை கொஞ்சுகிறானே என்ற பொசஸிவ் உணர்வாக இருக்குமோ..?? நந்தினிக்கு புரியவில்லை..!! திருமணமான ஒரே நாளிலேயே இப்படி ஒரு உரிமை உணர்வு வர வாய்ப்பிருக்கிறதா..?? எது எப்படியோ.. இந்த மாதிரி ஒரு உணர்வை வளர விடுவது நல்லதில்லை என்று அவளுக்கு தோன்றியது.
அசோக் மாதிரி ஒருவனுடைய மனைவிக்கு, அந்த மாதிரி ஒரு உணர்வு, வலியையே கொண்டு வந்து சேர்க்கும் என்று தோன்றியது.
நந்தினி அந்த மாதிரி சிந்தனையில் மூழ்கியிருக்கும்போதே, அசோக் குளித்து முடித்து பாத்ரூமில் இருந்து வெளிப்பட்டான்.
சப்தம் கேட்டு பார்வையை திருப்பிய நந்தினி ஒருகணம் திகைத்து போனாள்.
அசோக் இப்போது இடுப்பில் ஒரு டவலை மட்டும் சுற்றிக்கொண்டு, வெற்று மார்புடன் இருந்தான்.
ஒரு வளர்ந்த ஆண்மகனை அந்த மாதிரி ஒரு கோலத்தில் நந்தினி காண்பது அதுவே முதன்முறை.
பார்த்ததுமே அவளுடைய நெஞ்சுக்கு பக்கென்று இருக்க, படாரென்று பார்வையை திருப்பிக் கொண்டாள்.
அசோக் அதையெல்லாம் கண்டுகொண்டான் இல்லை.
வெகு இயல்பாக வார்ட்ரோப் திறந்து அன்று அணிந்து கொள்ளப் போகும் ஆடையை தேர்வு செய்தான்.
நந்தினியால் வெகுநேரம் தன் மனதை கட்டுப்படுத்த முடியவில்லை.
அவளுடைய கட்டுப்பாடின்றியே அவளது பார்வை அசோக்கின் பக்கம் நகர்ந்தது.
அவனது திரண்ட தோள்களையும், பருத்த புஜங்களையும், அகன்ற மார்பினையும், அதில் வளர்ந்திருந்த சுருள் ரோமங்களையும் வெறித்தது.
பார்க்க பார்க்க அவளுடைய உடலுக்குள் ஒருவித கிளர்ச்சி படர்வதை அவளால் உணர முடிந்தது.
அவள் அங்கிருப்பதை பொருட்படுத்தாமலே, அசோக் வேறு உடைகள் அணிந்து கொண்டான்.
உடலுக்கு ஸ்ப்ரே அடித்துக்கொண்டான்.
சட்டையை டக்-இன் செய்துகொண்டு பெல்ட் மாட்டிக்கொண்டான்.
தலை வாரி ரெடியாகி அவன் கிளம்ப, அதுவரை அவனை ஓரக்கண்ணால் நோட்டமிட்டுக் கொண்டிருந்த நந்தினி, இப்போது கட்டிலில் இருந்து எழுந்தாள்.
அவளை அவன் கடக்க முற்பட்டபோது, மெல்லிய குரலில் சொன்னாள்.
“ஸாரி..!!”“ஸாரியா..?? எதுக்கு..??” அசோக் நின்று கேட்டான்.
“இல்ல.. நான் அந்த மாதிரி உங்களை நெனைக்கலை.. நீங்க ஒருவேளை அந்த மாதிரி நெனச்சிருந்தா.. ஸாரி..!!” அவள் அந்த மாதிரி தலையை குனிந்தவாறு பாவமாக சொல்ல, அசோக் இப்போது மெலிதாக புன்னகைத்தான்.
“பரவால விடு.. நான் அதை அப்போவே மறந்துட்டேன்..” என்றான்.
இப்போது நந்தினியும் அவனை ஏறிட்டு புன்னகைத்தாள்.
“சாப்பிட்டியா நீ..?” அசோக்கின் குரலில் ஒரு கனிவு.
“இ..இல்ல..”“சரி வா.. சாப்பிட போலாம்..” என்றவாறு நகர முயன்ற அசோக்கை,“இ..இருங்க.. ஒரு நிமிஷம்..” என்று நந்தினி அவசரமாய் தடுத்தாள்.
“என்ன..?”“நீ..நீங்க.. இ..இன்னைக்கு எங்கயாச்சும் போவீங்களா..??” திக்கி திணறி கேட்டாள்.
“ம்ம்ம்.. ஆபீசுக்கு போவேன்..” என்றான் அசோக் ‘என்ன கேள்வி இது’ என்பது மாதிரி.
Pavadai Thookum Sex Stories In Tamil– தொடரும்
ஆதாரம்:இணையம்