இருண்ட

இதயப் பூவும் இளமை வண்டும் 107

🇮🇳 தமிழ்
வேகம்: 1.0x
நிலை: தயார்
×

இயக்க அமைப்பு உதவி

நீங்கள் ஏற்கனவே Chrome/Edge ஐப் பயன்படுத்தினாலும், இன்னும் இயக்க முடியவில்லை என்றால், உங்கள் தொலைபேசி/PC அமைப்புகளைச் சரிபார்க்கவும்.
நீங்கள் கேட்க விரும்பும் மொழியைப் பயன்படுத்தி, TTS இன்ஜின் செயலில் இருப்பதை உறுதி செய்யவும்.

Android மற்றும் பிற OS பயனர்களுக்கு

Android, Harmony, Lineage, Ubuntu Touch, Sailfish, ColorOS / FuntouchOS, hyperOS போன்ற பயனர்களுக்கு
மெனு அணுகல்: அமைப்புகளைத் திற > அணுகல்தன்மை > உரையிலிருந்து பேச்சு வெளியீடு.
அது இல்லை என்றால், அமைப்புகள் > மேலே உள்ள தேடல் பெட்டி > "text-to-speech" அல்லது "text" என உள்ளிடவும்
பிறகு உரையிலிருந்து பேச்சு அல்லது அதை ஒத்த ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
மொழியைச் சேர்க்க, கியர் ஐகானைக் கிளிக் செய்யவும் ⚙ > குரல் தரவை நிறுவு உங்களுக்குத் தேவையான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.

iOS பயனர்களுக்கு

அமைப்புகள் > அணுகல்தன்மை > பேசப்படும் உள்ளடக்கம் என்பதற்குச் செல்லவும்
அல்லது அமைப்புகள் > மேலே உள்ள தேடல் பெட்டி > "பேசப்படும் உள்ளடக்கம்" என உள்ளிட்டு என்டர் செய்யவும்
மொழியைச் சேர்க்க குரல்கள் என்பதைத் தேர்ந்தெடுத்து குரலைத் தேர்ந்தெடுக்கவும்

PC MacOS பயனர்களுக்கு

மெனு அணுகல்: Apple மெனுவைக் கிளிக் செய்யவும் () > கணினி அமைப்புகள் > அணுகல்தன்மை > பேசப்படும் உள்ளடக்கம்.

Windows பயனர்களுக்கு

Windows 10 & 11
மெனு அணுகல்: தொடக்கத்தைத் திற > அமைப்புகள் > நேரம் & மொழி > பேச்சு.
Windows 7 & 8
கட்டுப்பாட்டு பலகம் > அணுகல் எளிமை > பேச்சு அங்கீகாரம் > உரையிலிருந்து பேச்சு
Windows XP
தொடக்கம் > கட்டுப்பாட்டு பலகம் > ஒலிகள், பேச்சு மற்றும் ஆடியோ சாதனங்கள் > பேச்சு
Windows 2000 & ME
தொடக்கம் > அமைப்புகள் > கட்டுப்பாட்டு பலகம் > பேச்சு
Linux, ChromeOS, FreeBSD போன்ற பிற வகை PC பயனர்களுக்கு.
Google, Bing போன்ற தேடுபொறிகளில் உரையிலிருந்து பேச்சு வசதியை இயக்குவதற்கான அமைப்புகளைத் தேடவும்

குறிப்பு தற்போது, இந்தப் பக்கம் உங்கள் சாதனத்தின் இன்ஜினுக்கு ஏற்ப செயல்படுகிறது.
எனவே உருவாக்கப்படும் ஒலி உங்கள் சாதனத்தின் TTS இன்ஜினைப் பின்பற்றுகிறது.

இதயப் பூவும் இளமை வண்டும் 107

. mulai kamakadai அண்ணாச்சியம்மா ஏற்படுத்திய தாக்கம்.. சசியை மிக மோசமாக பாதித்தது.
! அவனது ஆழ் மனதில் அமிழ்ந்து கிடந்த.. காலத்தால் அழிக்க முடியாத.. அவனது நினைவடுக்கு.. கிளறப்பட்டது.
!Story : Mukilanஅதன் விளைவு.. அன்றைய இரவு.. சசிக்கு உறக்கமற்ற இரவாக முடிந்தது.
! உறக்கமற்ற இரவைக்கூட அவன் சுலபமாகக் கழித்து விடுவான்.. ஆனால் இரக்கமற்று.. மீண்டும்.. மீண்டும் வந்து உயிரை வதைக்கும்.. உள்ளத்து உணர்வுகளின் அவஸ்தை..ஒரு இரவு முழுவதும் அவன் இதயத்தில் ரத்தம் கசிய வைத்தது..!!அதனால்….
அடுத்த நாள் காலையில் குமுதா எழுப்பிய போதும் எழாமல்.. அல்லது எழ முடியாமல்.. தூங்கினான்.
!!அவன் சுய உணர்வு பெற்று.. உறக்கம் கலைந்தபோது காலை பத்து மணி.
!அப்போதுகூட அவனாக எழவில்லை.
அவன் கண்விழித்தபோது.. குமுதாவின் பெண்.. மது.. அவன் வயிற்றின் மேல்.. இரண்டு பக்கமும் கால் போட்டு உட்கார்ந்து.. அசைந்தாடிக்கொண்டிருந்தாள்.
!அவளது முத்துச்சிப்பி வாய்.. உணவை அசை போட்டுக்கொண்டிருந்தது.
அவள் பக்கத்தில் குமுதா உணவுத் தட்டைக் கையில் பிடித்தவாறு நின்றிருந்தாள்.
!அவன் வயிற்றின்மேல் உட்கார்ந்திருந்த மதுவைக் கையில் பிடித்தவாறு.. ”என்னடா செல்லம்.. பண்ற..?” எனக் கேட்டான் சசி.
” ச்சாப்பிடர..” என வாயசைவுடன் அவன் வயிற்றின்மீதே படுத்தாள்.
குமுதாவைப் பார்த்தான்.
”நீதான் மேல ஏத்தி விட்டியா..?”சிரித்தாள் குமுதா.
”மாமாவ எழுப்புனு சொன்னேன்.. நேரா வந்து உன் வயித்து மேல ஏறி உக்காந்துட்டா..! அவ உக்காந்து எத்தனை நேரம் ஆச்சு தெரியுமா..? நீ இப்பதான் முழிச்சிருக்க..? நானும் ரெண்டு மூணு தடவை எழுப்பி பாத்து.. முடியாம.. விட்டுட்டேன்.. அப்படி என்னடா தூக்கம்.. உனக்கு..? நைட்டெல்லாம் தூங்கலையா..?”மதுவை கீழே நகர்த்தி உட்கார வைத்துவிட்டு.. எரிச்சல் எடுத்த.. கண்களைக் கசக்கிக்கொண்டே மெதுவாக எழுந்தான்.
”ம்..ம்ம்..””ஏன்டா… என்னாச்சு.. திடீர்னு..?””ப்ச்… ஒன்னுல்ல..” என பாத்ரூம் போனான்.
முகத்தில் தண்ணீரை அடித்து அடித்து கழுவினான்.
! குளிர்ந்த நீர் முகத்தில் பட்டதில்.. கண் எரிச்சல் சற்று குறைவானது.
! வெளியே போனான்.
!”காபி குடிக்கறியா.
?” அவனை உற்றுப் பார்த்துக்கொண்டு கேட்டாள் குமுதா.
”ம்..ம்ம்..! குடு..!” சோபாவில் உட்கார்ந்தான்.
மது ஓடிவந்து அவன் மடியில் ஏறி உட்கார்ந்தாள்.
கையில் இருந்த உணவுத் தட்டைக்கொண்டு வந்து அவனிடம் கொடுத்தாள் குமுதா.
”சரியா சாப்பிடவே மாட்டேங்கறா.. இனி இவளுக்கு என்னாச்சுனு தெரியல.. இந்தா.. ஒரு ரெண்டு வாய் ஊட்டிவிடு.. உன்கிட்டன்னா சாப்பிட்டுக்குவா..!”சசிக்கு கடுப்பாகிவிட்டது.
”ஏய்.. லூசு.. போடி எடுத்துட்டு..! ஆளையும்.. அவளையும் பாரு..!!” என்று திட்டினான்.
”ஏன்டா..?” லேசான திகைப்புடன் அவனைப் பார்த்தாள் குமுதா.
”அவ சாப்பிடலேன்னா பேசாம விடு.. என்னாலல்லாம் இப்ப ஊட்ட முடியாது.
.
” என எரிச்சலோடு சொன்னான்.
”முடியாதுனா.. முடியாதுனு சொல்றதுதான..? அதுக்கு ஏன் இப்படி எரிஞ்சு விழற..?” என்றாள்.
அவளை முறைத்துப் பார்த்தான்.
”முதல்ல காபி வெய்.. போ..!!””தரேன்.. அதுக்கும் எரிஞ்சு விழாத.. இவளையாவது மடில வெச்சிருக்கியா இல்ல… எறக்கிரட்டுமா..?” என அவள் சீரியஸாகக் கேடக… சிரித்துவிட்டான் சசி.
”இருக்கட்டும் போ..!””ம்ம்.. நைட்டெல்லாம் தூஙகாம.. முழிச்சிட்டு கெடக்கறது.. அப்பறம் காலைல அரையும் கொறையுமா தூங்கி எந்திரிச்சு… இப்படி வள்.. வள்ளுனு நம்மகிட்ட விழவேண்டியது.
! ஒரு கல்யாணத்தை பண்ணி தொலைனா.. கேக்கறதில்ல…” என அவள் பாட்டுக்கு புலம்பிக்கொண்டே.. கிச்சனுக்குப் போனாள் குமுதா.
!மதுவும் அவன் மடியில் உட்காரவில்லை.
அவனிடமிருந்து இறங்கி.. அவள் அம்மா பின்னால் ஓடினாள்.
சசி ரிமோட்டை எடுத்து டிவி சேனல்களை மாற்றினான்.
அம்மா பின்னால் ஓடிய மது.. ஒரு நீலக்கலர் பிளாஸ்டிக் டம்ளரில் தண்ணீர் குடித்தவாறு வந்தாள்.
தண்ணீர் குடித்த பின்.. டம்ளரைக் கீழே வைத்து விட்டு.. மறுபடியும் அவன் மடிமீது இடம் பிடித்தாள்.
!குமுதா காபியுடன் வந்தாள்.
காபியை அவன் கையில் கொடுத்து விட்டு அவன் பக்கத்தில் உட்கார்ந்தாள்.
”ஏன்டா… என்னாச்சு..?””என்ன..?”” ஒடம்புக்கு ஏதாவது பிரச்சினையா.
?””அதெல்லாம் ஒன்னும் இல்ல..” காபியை உறிஞ்சினான்.
”கடைக்கு போவியா..?””தெரியல..! நீ சாப்பிட்டியா..?””ம்..ம்ம்..! உன்ன எழுப்பி எழுப்பி பாத்தேன்.
நீ எந்திரிக்கவே இல்ல..! உங்க மச்சான்தான் தூங்கினா தூங்கிட்டு போறான் விடுனு சொன்னாரு..! அப்பறம் விட்டுட்டேன்.
!””ஏதாவது சொல்லிட்டு போனாரா..?”” இல்ல… போறயா..?””என்னன்னே தெரியல.. ஒடம்பெல்லாம் அடிச்சு போட்ட மாதிரி.. ரொம்ப டயர்டா இருக்கு..””நைட்ல ஒழுக்கமா தூஙகலேன்னா அப்படித்தான்.. ஆகும்..!! மனசுல ஏதாவது இருந்தா சொல்லு..!!” என்றாள்.
”ம்..ம்ம்.. ஆரம்பிச்சுட்டியா…?” என சலித்துக் கொண்டு சொன்னான் சசி..!!அப்பறம்….
அவன் சாவகாசமாகப் போய் குளித்துவிட்டு வந்து.. குமுதா சுட்டுக்கொடுத்த தோசையை சாப்பிட்டான்.
அவன் சாப்பிடும்போது.. மதுவுக்கும் ஊட்டி விட.. அவள் மறுக்காமல் சாப்பிட்டாள்..!!பதினொரு மணிக்கு மேல்.. சசியின் போன் பாடியது.
எடுத்துப் பார்த்தான்.
‘அழைப்பில்.. காத்து.
!’ என்றது.
பச்சை பட்டனை அழுத்தி காதில் வைத்தான்.
”ஹலோ..?””நண்பா.. நாந்தான்டா..” என்றான் காத்து.
” ஆ.. சொல்லுடா..””எஙகருக்க.. இப்ப..?””வீட்லடா..! ஏன்டா..?””என்ன பண்ணிட்டு இருக்க..?””சும்மாதான்..! நீ.. எங்கருக்க..?””உங்க கடைல.. இருக்கேன்..” என்றான்.
” பழக்கடைலயா.
?””ம்..ம்ம்..!””அஙக என்ன பண்ற.
?”” உன்ன பாக்கலாம்னுதான் வந்தேன்.
! நீ இன்னிக்கு லீவ் போட்டுட்டேனு மச்சி சொன்னாரு..? ஏன்டா ஒடம்பு சரியில்லையா..?””அதெல்லாம் ஒன்னுமில்லடா.. கொஞ்சம்.. டயர்டா இருந்துச்சு..! சரி என்னை பாக்க.. எதுக்கு நீ வந்த..?””சும்மாதான்.. !!””வேலை இல்லையா.
?””வேலை இருந்தா.. உன்ன ஏன் பாக்க வரேன்.
! சரி.. சாப்பிட்டியா.
?””ம்..ம்ம்..! இப்பதான் சாப்பிட்டு.. அப்படியே உக்காந்தேன்..! நீ சாப்பிட்டியா..?””ஆச்சுடா.. சரி.. என்ன ட்ரஸ் போட்றுக்க..?””ஷார்ட்ஸ்ம்.. பனியனும்.
.
ஏன்டா..?””அப்படியே அந்த ஷாட்ஸ மட்டும் உருவி போட்டு ஒரு பேண்ட்ட எடுத்து மாட்டிட்டு வா பாக்கலாம்..!!””எங்கடா..?””பாருக்கு போலாம்..””என்னடா… என்னமோ…” சிரித்தான்.
”நா.. மசக்கடுப்புல இருக்கன்டா.. வா..! நீ வரயா.
? இல்ல நான் வரட்டுமா..?””நானே வரேன்..! எங்க வரது..?”” ஜீ வி க்கு முன்னால நிக்கறேன் வா..!!””சரி நில்லு வரேன்..!!” என அவன் போன் பேசி முடிக்க….
குமுதா கேட்டாள்.
”யார்ரா.. போன்ல..?””காத்து..?””ஏன்..என்னவாம்..?””சும்மாதான்.. வேலை இல்லேன்னு.. என்னை பாக்க கடக்கு போயிருக்கான்..! இப்ப அங்கருந்துதான் போன் பண்ணான்.
!””வரச்சொல்றான் போலருக்கு..?””ம்.. ம்ம்.
.
!””எதுக்கு..?””சும்மாதான்.. ஏதாவது பேசுவான்..!” என்றுவிட்டு எழுந்து போய் உடை மாற்றிப் புறப்பட்டான்.
பத்து நிமிசத்தில் தயாராகி.. மதுவுக்கு டாடா காட்டினான்.
அவளும் டாடா காட்டினாள்.
!!சசி பைககில் ஜீ வி இண்டர்நேசனல் போனபோது.. ஹோட்டல் வாயிலிலேயே நின்றிருந்த காத்து.. தாடியை சுத்தமா எடுத்திருந்தான்.
”அட… தாடியெல்லாம் எடுத்துட்டு.. ஆளு.. பளபளனு இருக்க போலருக்கு.
?”என சிரித்தவாறு கேட்டான் சசி.
அவனும் சிரித்தான்.
பைக்கை நிறுத்திவிட்டு.. கதவைத் திறந்து உள்ளே போனார்கள்.
ஏ ஸி பார்.. உள்ளே மிகவும் குளுமையாக இருந்தது.
இரண்டு டேபிளில் மட்டுமே ஆள் இருந்தது.
கடைசி டேபிளை அடைந்து.. சசி சோபாவில் சாய்ந்தான்.
! காத்து சேரில் உட்கார்ந்தான்.
உள்ளே நுழைந்ததுமே இரண்டு பீர் சொல்லிவிட்டான் காத்து.
இரண்டே நிமிடத்தில் பீர் வந்தது.
! ஓபன் பண்ணிய பீரை.. கூலிங்குடன் எடுத்து உறிஞ்சினான் காத்து.
!”என்னடா ஆச்சு.
?” எனக் கேட்டான் சசி.
பீரைக் கீழே வைத்தான் காத்து.
”காலைலயே சண்டைடா வீட்ல..” என்று தாடையை தடவினான்.
”ஓய்ஃப் கூடவா..?””ம்..ம்ம்..!””ஏன்டா…?””வேனும்னே வம்பிழுத்து சண்டை போடறாடா..! அதான் பளீர் பளீர்னு ரெண்டு அறை விட்டுட்டேன்..” என்று மீண்டும் பீர் குடித்தான்.
”அடப்பாவி… அடிச்சிட்டியா..?””அதெல்லாம் ஒரு பெரிய மேட்டர் இல்லடா.. மறுபடி போய்.. கட்டிப்புடிச்சு ஒரு கிஸ் குடுத்தா.. பிராப்ளம் சால்வ்.. ஆனா.. இந்த டென்ஷன் இருக்கு பாத்தியா… புல்லா… பீ பீ ஏறிக்குதுடா..” என்றான்.
சசியும் பீரை எடுத்து சிப்பிப்பாகப் பருகினான்.
காத்து அவனுடைய குடும்ப நிலவரம்.. தினச்சண்டை என ஒரு பாட்டம் அவன் மனதில் இருந்ததை எல்லாம் கொட்டித்தீர்த்தபோது.. பீர் முடிந்திருந்தது.
மீண்டும் அடுத்த பீர் சொன்னான்..!!பொதுவாக.. நண்பர்களுடனான பேச்சு.. எப்போதும் அர்த்தமுள்ளதாகவே இருக்கும் என்று சொல்லிவிட முடியாது.
அதிலும் சரக்கடித்துவிட்டு பேசும்போது.. அப்படி எந்த ஒரு முகாந்திரமும் தெண்படாது.
! ஆனால் பேச்சு மட்டும் மணிக்கணக்கில் நீளும்..!!அப்படி நடந்த பேச்சு சுவாரசியத்தில் நேரம் போனதே தெரியவில்லை..!! ஒண்ணு முப்பது மணிக்கு பார விட்டு வெளியேறினார்கள்..! பாருக்கு எதிரிலேயே சினிமா தியேட்டர்..!தியேட்டரில் பாகுபலி ஓடிக்கொண்டிருந்தது.
! காத்து பார்க்க வேண்டும் என வற்புறுத்தி அழைத்துப் போனான்..!!அவர்கள் தியேட்டருக்குள் போய் உட்கார்ந்த.. சில நிமிடங்களிலேயே படம் துவங்கியது..!!படத்தின் பிரம்மாண்டம் பற்றின தகவல்களை எல்லாம் நான் ஸ்டாப்பாகஙச் சொன்னான் காத்து.
சசிக்கு அதிகம் பேச வாய்ப்பே கொடுக்கவில்லை.
காத்துதான் நிறைய பேசினான்.
!‘பாவம்..வீட்டில் பேச சுதந்திரம் இல்லை ‘ போல என எண்ணிக்கொண்டான் சசி….
!!தியேட்டரில் உட்கார்ந்த அரைமணி நேரம் கழித்து சசிக்கு போன் வந்தது.
!குமுதா போன் செய்திருந்தாள்.
எடுத்து காதில் வைத்து பேசினான்.
! தியேட்டர் சத்தத்தில் தெளிவாக எதுவும் கேட்கவில்லை..! ஆனாலும் அரைகுறையிக அவள் சொன்னதைக் கேட்ட சசி.. அதிர்ந்து போனான்..! ”அப்பாக்கு… அட்டாக் வந்துருச்சுடா.. தோட்டத்துலருந்து ஆஸ்பத்ரி கொண்டு போறாங்க.. நீ வாடா.. எனக்கு பயமாருக்கு..!!” என போனிலேயே அழுதாள் குமுதா.
சசி உடனே.. விசயத்தைக் காத்துவிடம் சொல்ல… இருவரும் தியேட்டரை விட்டு உடனடியாக வெளியே வந்தனர்.
!சசி மீண்டும் குமுதாவுடன் பேசினான்.
! அவனுடைய அப்பா போனுக்கு கூப்பிட… அவர்கள் தோட்டத்துக்குப் பக்கத்து தோட்டத்துக்காரர் பேசினார்.
! என்ன நிலவரம்..? எந்த ஆஸ்பத்ரி எனக் கேட்டு… அவன் ஆஸ்பத்ரி போனான்..!!ஆஸ்பத்ரி வாசலில்.. காத்து பைக்கை நிறுத்த.. அவன் பின்னால் உட்கார்ந்திருந்த சசி இறங்கினான்.
! வராண்டாவில் தலைவிரி கோலமாக நின்றிருந்த.. சசியின் அம்மா… சசியைப் பார்த்ததும்.. நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறினாள்..!!அந்தக் கதறலிலேயே சசிக்கு எல்லாம் புரிந்து போனது….
அவனது கால்கள்.. தளர்ந்தது….
!!‘அப்பா.. இறந்து விட்டார்….
!!!!’-வளரும்……..!!!!!!!காதைக்கு ஆதரவு காட்டும் அனைத்து நண்பர்களுக்கும்.. என் கனிவான.. வணக்கங்கள்….
!! என்னால் இயன்றவரை கதையை சீக்கிரம் கொடுக்கத்தான் முயற்சி செய்கிறேன்..!! தொடர்ந்து உங்கள் ஆதரவையும் கருத்துக்களையும் காட்டுவீர்கள் என்கிற நம்பிக்கையுடன்………உங்கள்.. முகிலன்…….
!!!!!!!
ஆதாரம்:இணையம்