இருண்ட

ஐ ஹேட் யூ பட் – 19

🇮🇳 தமிழ்
வேகம்: 1.0x
நிலை: தயார்
×

இயக்க அமைப்பு உதவி

நீங்கள் ஏற்கனவே Chrome/Edge ஐப் பயன்படுத்தினாலும், இன்னும் இயக்க முடியவில்லை என்றால், உங்கள் தொலைபேசி/PC அமைப்புகளைச் சரிபார்க்கவும்.
நீங்கள் கேட்க விரும்பும் மொழியைப் பயன்படுத்தி, TTS இன்ஜின் செயலில் இருப்பதை உறுதி செய்யவும்.

Android மற்றும் பிற OS பயனர்களுக்கு

Android, Harmony, Lineage, Ubuntu Touch, Sailfish, ColorOS / FuntouchOS, hyperOS போன்ற பயனர்களுக்கு
மெனு அணுகல்: அமைப்புகளைத் திற > அணுகல்தன்மை > உரையிலிருந்து பேச்சு வெளியீடு.
அது இல்லை என்றால், அமைப்புகள் > மேலே உள்ள தேடல் பெட்டி > "text-to-speech" அல்லது "text" என உள்ளிடவும்
பிறகு உரையிலிருந்து பேச்சு அல்லது அதை ஒத்த ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
மொழியைச் சேர்க்க, கியர் ஐகானைக் கிளிக் செய்யவும் ⚙ > குரல் தரவை நிறுவு உங்களுக்குத் தேவையான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.

iOS பயனர்களுக்கு

அமைப்புகள் > அணுகல்தன்மை > பேசப்படும் உள்ளடக்கம் என்பதற்குச் செல்லவும்
அல்லது அமைப்புகள் > மேலே உள்ள தேடல் பெட்டி > "பேசப்படும் உள்ளடக்கம்" என உள்ளிட்டு என்டர் செய்யவும்
மொழியைச் சேர்க்க குரல்கள் என்பதைத் தேர்ந்தெடுத்து குரலைத் தேர்ந்தெடுக்கவும்

PC MacOS பயனர்களுக்கு

மெனு அணுகல்: Apple மெனுவைக் கிளிக் செய்யவும் () > கணினி அமைப்புகள் > அணுகல்தன்மை > பேசப்படும் உள்ளடக்கம்.

Windows பயனர்களுக்கு

Windows 10 & 11
மெனு அணுகல்: தொடக்கத்தைத் திற > அமைப்புகள் > நேரம் & மொழி > பேச்சு.
Windows 7 & 8
கட்டுப்பாட்டு பலகம் > அணுகல் எளிமை > பேச்சு அங்கீகாரம் > உரையிலிருந்து பேச்சு
Windows XP
தொடக்கம் > கட்டுப்பாட்டு பலகம் > ஒலிகள், பேச்சு மற்றும் ஆடியோ சாதனங்கள் > பேச்சு
Windows 2000 & ME
தொடக்கம் > அமைப்புகள் > கட்டுப்பாட்டு பலகம் > பேச்சு
Linux, ChromeOS, FreeBSD போன்ற பிற வகை PC பயனர்களுக்கு.
Google, Bing போன்ற தேடுபொறிகளில் உரையிலிருந்து பேச்சு வசதியை இயக்குவதற்கான அமைப்புகளைத் தேடவும்

குறிப்பு தற்போது, இந்தப் பக்கம் உங்கள் சாதனத்தின் இன்ஜினுக்கு ஏற்ப செயல்படுகிறது.
எனவே உருவாக்கப்படும் ஒலி உங்கள் சாதனத்தின் TTS இன்ஜினைப் பின்பற்றுகிறது.

ஐ ஹேட் யூ பட் – 19

. Tamil Kamakathaikal – ப்ரியா கூலாக சொல்லிவிட்டு தனது பின்புறத்தை அசைத்து அசைத்து திமிராக நடந்து சென்றாள்.
அவள் செல்வதையே அசோக் வெறுப்பாக பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனுடய மனநிலை புரியாத ஹரி..“என்ன மாப்ள.. உன் ஆளு உன்னையே இந்த ஏறு ஏறிட்டு போகுது..??” என்று கேலியாக கேட்டுவிட,“த்தா.. அவளை இனிமே என் ஆளுன்னு சொன்ன.. செருப்பு பிஞ்சுடும் உனக்கு..!!” என்று அசோக் கோவத்தை அவனிடம் காட்டினான்.
“ம்க்கும்.. எங்கிட்ட மட்டும் நல்லா எகிறு.. அவகிட்ட அப்படியே பம்மு..!!” ஹரியின் கேலியில் இருந்த உண்மை அசோக்கை அடங்கி போக செய்தது.
“வேற என்ன பண்ண சொல்ற..?? பவரும் கண்ட்ரோலும் அவகிட்டல இருக்கு..??” என்றான் வெறுப்பாக.
“ஹ்ம்ம்.. எல்லாம் அந்த பக்கு மண்டையன் செஞ்ச வேலை மாப்ள.. இந்த மக்கு பீஸைலாம் பாஸ் ஆக்கி.. நம்மளலாம் லூஸாக்குறான்..!!” இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே கோவிந்த் இடையில் புகுந்து,“அ..அப்போ இன்னைக்கு தண்ணி இல்லையா பாஸ்..??”என்று பாவமாக கேட்டான்.
உடனே ஹரியும் அசோக்கும் மெல்ல தங்கள் தலையை திரும்பி, அவனை பார்த்து முறைத்தார்கள்.
ஹரிதான் அவனை பார்த்து காட்டமாக சொன்னான்.
“ஏண்டா.. உனக்கு கொஞ்சம் கூட சென்ஸே இல்லையா..?? என்ன பேசுறோம்னு தெரிஞ்சுதான் பேசுறியா..?? மனசாட்சியே இல்லாம எப்படி உன்னால இப்படி பேச முடியுது..?? உன்னல்லாம்…”ஹரி ஏன் அவ்வளவு டென்ஷனானான் என்று புரியாமல் அசோக்கும் கோவிந்தும் விழிக்க, ஹரி இப்போது அசோக்கின் பக்கமாய் திரும்பி, வருத்தமான குரலில் சொன்னான்.
“பாரு மாப்ள இவனை.. என்ன பேசுறான்னு..!! காலைல இருந்து எவ்வளவு கஷ்டப்பட்டு ப்ளான் போட்ருக்கோம்.. கடைசி நேரத்துல நீ வர முடியலைன்றதுக்காக எல்லாத்தையும் கேன்ஸல் பண்றதா..?? எப்படி இவனால இப்படிலாம் நெனைக்க முடியுது..?? சனியன் புடிச்சவன்.. ‘இன்னைக்கு தண்ணி இல்லையா’ன்னு அபசகுனம் புடிச்ச மாதிரி கேட்டுக்கிட்டு இருக்குறான்..??”ஹரி பேச பேசவே அசோக்கிற்கு அவன் மீது ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்தது.
அவனை அப்படியே எரித்துவிடுவது போல உஷ்ணமாக பார்த்தான்.
ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு, பற்களை கடித்தவாறே சொன்னான்.
“த்தா.. ரெண்டு பெரும் என் கண்ணு முன்னாடியே நிக்காதீங்கடா.. நான் கொலைகாரன் ஆகுறதுக்குள்ள இங்க இருந்து ஓடிப் போயிடுங்க..!!”சொல்லிவிட்டு தன் சிஸ்டம் பக்கமாய் திரும்பி, கீ போர்டை படபடவென தட்டினான்.
அசோக்கின் பார்வையில் ஹரி சற்றே மிரண்டு போனான்.
ஆனால் அவன் மனதில் இருக்கும் கோபத்தின் அளவை இன்னும் அறிந்து கொள்ளாதவனாய்..“என்ன மாப்ள.. இதுக்குபோய் இவ்ளோ டென்ஷன் ஆகுற..?? இப்போ என்ன.. உன்னால குடிக்க முடியலை.. அவ்ளோதான..?? கவலையை விடு.. உனக்கும் சேர்த்து நான் இன்னைக்கு குடிச்சுடுறேன்.. ஓகேவா..??”கேட்டுவிட்டு ஹரி இளிக்க, அசோக் அதற்கு மேலும் தன் ஆத்திரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
பட்டென திரும்பி ஹரியை சேரோடு எட்டி உதைத்தான்.
அவன் நிலை தடுமாறிப்போய் தனது டேபிள் மீது சரிந்து, மானிட்டரை கட்டிப் பிடித்துக் கொண்டான்.
அத்தியாயம் 11அந்த வாரத்தில் ஒருநாள்.. அதிகாலைப்பனி சூழ்ந்த பெங்களூரில்.. குளிருக்கு நடுங்கிக்கொண்டே பஸ்ஸில் இருந்து குதித்தாள்.. செண்பக லக்ஷ்மி.. செல்வியின் தங்கை..!!!! அவள் பெங்களூர் வருவது அசோக்கிற்கு முன்பே தெரியாது.
காலையில் படுக்கையிலிருந்து எழுந்தவன், காபிக்காக கிச்சனுக்கு தூக்க கலக்கத்துடனே நடந்து சென்றபோதுதான், டைனிங் டேபிளில் அமர்ந்து இட்லி விழுங்கிக்கொண்டிருந்த செண்பகம் கண்ணில் பட்டாள்.
திடீரென அவளை பார்த்ததும் ஓரிரு வினாடிகள் ஆச்சரியத்தில் திகைத்த அசோக், அப்புறம்..“ஹாய் செம்பு..!!” என்றான் ஆச்சரியமும் தூக்க கலக்கமும் கலந்த மாதிரியான குரலிலேயே.
சிறு வயதிலிருந்தே அவன் அவளை செம்பு என்று அழைப்பதுதான் வழக்கம்.
“ஹாய் மாமா..!!” என்றாள் அவளும் இட்லியை விழுங்கி விட்டு.
சிறு வயதிலிருந்தே அவள் அவனை மாமா என்று அழைப்பதுதான் வழக்கம்.
“எப்போ வந்த..??”“இப்ப்ப்.. ஜஸ்ஸ்.. ஒப்ப்.. அக்க்க்க்…” அதற்குள் அவள் அடுத்த இட்லியை வாயில் தள்ளியிருக்க, அவளிடமிருந்து வார்த்தைகள் இப்போது தெளிவில்லாமல் வெளியே வந்து விழுந்தன.
“என்ன.. சொல்லாமக் கொள்ளாம திடீர்னு வந்திருக்குற..??”அசோக்கின் இந்தக் கேள்விக்காவது தெளிவாக பதில் சொல்லிவிடவேண்டும் என்று, செண்பகம் வாயில் இருந்த இட்லியை அவசர அவசரமாய் அரைத்து விழுங்கினாள்.
அவள் படுகிற அவஸ்தையை காண சகியாத அசோக்,“சரி சரி.. நீ சாப்பிடு.. அப்புறம் பேசிக்கலாம்..!!”என்று சலிப்பாக சொல்லிவிட்டு, மெல்ல நடந்து சென்று கிச்சனுக்குள் நுழைந்தான்.
உள்ளே.. சட்டியின் மூடியை திறந்து இட்லியின் பதம் பார்த்துக் கொண்டிருந்தாள் செல்வி.
இவன் வழக்கமாக விழிக்கும் நேரமும், விழித்ததும் நேராக கிச்சனுக்குத்தான் காபிக்கு வருவான் என்பதும் அவளுக்கு முன்பே தெரியும்.
அதனால் காபி கலந்து தயாராக எடுத்து வைத்திருந்தாள்.
அசோக் உள்ளே நுழைந்ததுமே எந்த உணர்ச்சியும் காட்டாமல், காபி டம்ளர் எடுத்து அவனிடம் நீட்டினாள்.
டம்ளரை கையில் வாங்கிய அசோக், காபியை உறிஞ்சாமல், கண்களை மட்டும் ஒரு ஓரத்திற்கு தள்ளி அண்ணியை குறுகுறுவென பார்த்தபடியே, கம்மலான குரலில் கேட்டான்.
“எப்போ வந்தா..??”“இப்போத்தான்.. ஒரு மணி நேரம் ஆச்சு..!!” செல்வி வேலை கவனத்துடனே பதிலளித்தாள்.
“ஓஹோ..!!”சொன்ன அசோக் இப்போது தலையை மெல்ல நீட்டி வெளியே எட்டிப்பார்த்தான்.
இட்லியை சட்னியில் தொட்டு லபக்கென்று தொண்டைக்குள் போடுகிற செண்பகத்தின் மீது எரிச்சலாய் ஒரு பார்வையை வீசினான்.
இவர்கள் இங்கிருந்து பேசுவது அவளுக்கு கேட்காது என்ற நம்பிக்கையுடன், இந்தப்பக்கம் திரும்பி சற்றே கிண்டலான குரலில் செல்வியிடம் சொன்னான்.
“வந்ததும் வராததுமா.. தட்டு நெறைய இட்லியை போட்டு.. கவக்கு கவக்குன்னு கவ்விக்கிட்டு இருக்குறா..!! உடம்பை கொறைக்கிற மாதிரி ஐடியாவே இல்லையா உங்க தங்கச்சிக்கு..??” அசோக் கேட்க, செல்வி அவனை ஏறிட்டு முறைத்தாள்.
“உன் கொள்ளிக்கண்ணை கொண்டு போய் வேறெங்கயாச்சும் வை.. என் தங்கச்சி மேல வைக்காத..!!”“ஹாஹா.. இல்லன்னாலும்..!! ம்ம்ம்ம்.. என்ன விஷயமா வந்திருக்குறா..??”“இன்டர்வ்யூக்கு..!!”“ஓ..!! எந்த கம்பெனில..??”“உங்க கம்பெனிலதான்..!!” செல்வி இயல்பாக சொல்ல, அசோக் மெலிதாக அதிர்ந்தான்.
“எங்க கம்பெனிலயா..?? நான்தான் அவ பயோ டேட்டா ஃபார்வர்ட் பண்ணவே இல்லையே..??”“ஏன்..?? நீ இல்லைன்னா என்ன.. அவளுக்கு வேற ஆளே கெடைக்காதா..??”செல்வி சொன்னதில் ஒரு உள்க்குத்து இருந்தது.
ஆனால் அசோக் அதையெல்லாம் கவனிக்கவில்லை.
நெற்றியை சுருக்கியவாறு சற்றே ஆர்வமாக கேட்டான்.
“நான் இல்லன்னா.. வேற யாரு ஃபார்வர்ட் பண்ணினது..??”“யாரோ.. அவ கூட படிச்ச பையனாம்..!! அவன் மூலமா அப்ளிகேஷன் அனுப்பிருக்கா.. அவங்களும் இன்டர்வ்யூக்கு வர சொல்லிருக்காங்க.. கெளம்பி வந்திருக்குறா..!! இன்டர்வ்யூ போயிட்டு.. இன்னைக்கு நைட்டே கெளம்பி திரும்ப சென்னை போயிடுவா..!! போதுமா..??”“ஹ்ம்ம்ம்.. ஒருவேளை அவளுக்கு..” அசோக் இழுத்துக்கொண்டிருக்கும்போதே, அவன் கேட்க வந்ததை செல்வி புரிந்து கொண்டாள்.
“வேலை கெடைச்சுட்டா எங்க தங்குவா..?? அதான..??”“ம்ம்ம்ம்..!!”“அதெல்லாம் நீ ஒன்னும் கவலைப்பட வேணாம் சாமி.. அவ வெளிலயே தங்கிக்கிறேன்னு சொல்லிட்டா..!!”அசோக் இப்போது அமைதியானான்.
நெற்றியை கீறிக்கொண்டு சிலவினாடிகள் யோசித்தான்.
‘எப்படியும் இந்த சோத்து சட்டிக்கு நம்ம கம்பனில வேலை கெடைக்கிறதே கஷ்டம்.. அப்படியே ஒருவேளை கெடைச்சாலும்.. வெளில தங்கிக்க போறா.. எப்பயாச்சும் வீட்டுக்கு வருவா.. வந்துட்டு போறா.. வேறெந்த ப்ராப்ளமும் இவளால வர்றதுக்கு சான்ஸ் இல்ல..!!’ – இந்த மாதிரி அவன் மனதில் தோன்றியதும் சற்றே நிம்மதி அடைந்தான்.
இருந்தாலும் மனதின் ஓரமாய் அரித்துக்கொண்டிருந்த அந்த கேள்வியை, இப்போது சற்றே நக்கலான குரலில் அண்ணியிடம் கேட்டான்.
“ஹ்ம்ம்.. அக்காவும் தங்கச்சியும் சேர்ந்து வேற எதுவும் ப்ளான் பண்ணலைல..??” அசோக்கின் நக்கலில் செல்விக்கு சுருக்கென்று கோபம் வந்தது.
“ஏண்டா.. கொழுப்பா உனக்கு..?? நான் ஏதோ அறிவில்லாம ஒருநா.. ‘என் தங்கச்சியை கட்டிக்கிறியா’ன்னு கேட்டுட்டேன்.. அதுக்காக என்ன வேணா பேசுவியா நீ..??”“ப்ச்.. இப்ப என்ன பேசிட்டேன்னு இப்டி டென்ஷனாகுறீங்க.
??”“பின்ன என்ன.. இப்போ எதுக்கு தேவை இல்லாம.. அவளையும் சேர்த்து இதுல இழுக்குற..?? எனக்குத்தான் அந்த ஐடியா இருந்தது.. அவளுக்கு உன்மேல அந்த மாதிரி ஒரு நெனைப்பே இல்ல.. போதுமா..??”படபடவென்று பேசிய செல்வி, சட்டியை திறந்து ஒவ்வொரு இட்லியாக எடுத்து ஹாட்பாக்சுக்குள் போட்டாள்.
அசோக் மீது இருந்த எரிச்சலில் வாய்க்குள்ளேயே முனுமுனுத்தாள்.
“மனசுக்குள்ள பெரிய மன்மதா ராசான்னு நெனைப்பு..!!”“என்னது..?? என்ன சொன்னீங்க..??” அசோக் தன் வலது காதை அவள் பக்கமாய் திருப்பியவாறே கேட்க,“ஆங்..??? காபி ஆறுறதுக்குள்ள அதை குடிச்சு தொலைடா கடன்காரான்னு சொன்னேன்..!!” செல்வி இப்போது அவன் காதே வலிக்கிற அளவுக்கு சத்தமாக சொன்னாள்.
அசோக் படக்கென காதை பொத்திக்கொண்டு, அண்ணியை ஓரிரு வினாடிகள் முறைத்துப் பார்த்தான்.
அப்புறம் காபியை வாய் வைத்து உறிஞ்சியவாறே திரும்பி, தனது அறைக்கு நடந்தான்.
ந்யூஸ் பேப்பர் படித்துக்கொண்டே காபி அருந்தினான்.
பிறகு குளித்து முடித்து வெளியே வந்து.. ஆபீசுக்கு அவன் கிளம்பிக் கொண்டிருக்கையில்.. செல்வி அவனை அழைத்தவாறே அந்த அறைக்குள் நுழைந்தாள்.
“அசோக்கு..!!”“ம்ம்.. என்ன அண்ணி..!!”“நீ ஆபீஸ் போறப்போ.. அப்படியே அவளையும் பைக்ல கூட்டிட்டு போயிடுறியா..??” செல்வி இயல்பாக கேட்டாள்.
“ப்ச்.. என்ன வெளையாடுறீங்களா..?? அதுலாம் என்னால முடியாது.. ஆட்டோல போக சொல்லுங்க அவளை..!!” அசோக் வெறுப்பாக சொன்னான்.
“ஹேய்.. அவளுக்கு பெங்களூர் புதுசுடா.. தனியா போக பயப்படுறா..!! இன்னைக்கு ஒருநாள்தான.. கூட்டிட்டு போயேன்.. ப்ளீஸ்..!!”செல்வியின் குரல் கெஞ்சலாக ஒலித்தது.
அசோக் சற்று தயங்கினான்.
அண்ணியின் முகத்தையே அவஸ்தையாக பார்த்தான்.
பிறகு ‘ஒருநாள்தானே..?’ என்று மனதில் தோன்றவும், வேண்டா வெறுப்பாக ஒத்துக்கொண்டான்.
“சரி சரி.. கூட்டிட்டு போறேன்..!!”“ஹ்ம்ம்.. அப்புறம் இன்னொரு விஷயம்..!!”“என்ன..??”“இன்டர்வ்யூக்கு வர்றால.. உன் கம்பனி பத்தி கொஞ்சம் டீட்டெயில் கேக்கனும்னு சொன்னா..!!”“ம்ம்.. ம்ம்.. எல்லாம் பைக்ல போறப்போ கேட்டுக்கலாம்னு சொல்லுங்க..!! ரெடியாயிட்டாளா அவ..??”“அவ அப்போவே ரெடியாயிட்டா..!! நீ என்ன.. சாப்பிடலையா..??”“இல்ல.. டைமாச்சு.. கெளம்புறேன்.. ஆபீஸ்ல போய் சாப்பிட்டுக்குறேன்..!!”அடுத்த ஐந்தாவது நிமிடம் அசோக்கும் செண்பகமும் வீட்டில் இருந்து கிளம்பினார்கள்.
கிளம்புவதற்கு முன் ராஜேஷ் அசோக்கை தனியாக அழைத்துச்சென்று கிசுகிசுப்பாக சொன்னான்.
“ஒன்னா பைக்ல போறது இருக்கட்டும் அசோக்.. ஆனா.. உங்க ரெண்டு பேருக்குள்ள.. ஒரு கேப் எப்போவும் இருக்கணும்..!! என்ன சொல்றேன்னு புரியுதா..??”“ம்ம்.. புரியுது புரியுது.. அதுலாம் நீ சொல்லவே வேணாம்..!!” அசோக் இறுக்கமாகவே சொன்னான்.
வீட்டில் இருந்து கிளம்பிய இரண்டாவது நிமிடம், தெருமுனையில் இருக்கும் அந்த பெட்டிக்கடையில் இருவரும் நின்றிருந்தார்கள்.
அசோக் குபுகுபுவென புகை விட்டுக் கொண்டிருக்க, செண்பகம் அந்த புகை நாசியில் ஏறிவிடாமல் இருக்க துப்பட்டாவால் மூக்கை பொத்தியவாறு பரிதாபமாக நின்றிருந்தாள்.
அப்படியே அசோக்கை பார்த்து கேட்டாள்.
“நீங்க்க்.. தம்க்கக்ர்த்.. வீக்க்க்.. தெர்ப்ப்க்..”அசோக் இப்போது உடனடியாய் டென்ஷன் ஆகிப் போனான்.
“அப்டியே அறைய போறேன் உன்னை..!! வந்ததுல இருந்து இப்படியே பேசிட்டு இருக்குற.. சைனாக்காரனுக்கு ஜல்ப்பு புடிச்ச மாதிரி..!! கையை எடுத்துட்டு பேசுடி.. செம்பு..!!” என்று எரிச்சலாக சொன்னான்.
“கையை எடுத்தா.. மூக்குல ஸ்மோக் ஏறுது மாமா..!!”“அப்படியா..?? மூக்குல ஒரு சைலன்சர் மாட்டிட்டா சரியா போயிடும்..!!”“என்னது.. சைலன்சரா..??”“அடச்சை.. கொஞ்சம் தள்ளி நின்னு பேசு..!!”“ம்ம்ம்..” சொல்லிக்கொண்டே செண்பகம் சற்று தள்ளி நின்று கொண்டாள்.
“ஹ்ம்ம்.. இப்போ சொல்லு..!! என்ன கேட்க வந்த..??”“இல்ல.. நீங்க தம்மடிகிறது வீட்ல எல்லாருக்கும் தெரியுமான்னு கேட்டேன்..??”“ம்ம்.. ம்ம்.. எல்லாருக்கும் தெரியும்..!! அப்பா, அம்மா, அண்ணன், அண்ணி.. இவங்க நாலு பேருக்கு மட்டும் தெரியாது.. அவங்ககிட்ட மட்டும் சொல்லிடாத..!!” திருட்டு தம் அடிக்கிறேன் என்பதையே கெத்தாக சொன்னான் அசோக்.
“ம்க்கும்.. அப்புறம் வேற யார்கிட்ட போய் நான் இதை சொல்றது..?? தம்புகிட்டயா..??” செண்பகம் சலிப்பாக சொன்னாள்.
“அதுசரி.. அண்ணிகிட்ட ஏதோ.. என் கம்பனி பத்தி கேக்கனும்னு சொன்னியாமே..??”“ம்ம்.. ஆமாம்..!!”“என்ன அது..??”“அ..அது.. அது..” செண்பகம் சற்றே தயங்க,“ம்ம்.. கேளு..!!” அசோக் அவளை தூண்டினான்.
“உ..உங்க கம்பனில..”“ம்ம்.. எங்க கம்பனில..??”“சாப்பாடுலாம் எப்படி..??” செண்பகம் கேட்டுவிட்டு பற்களை காட்ட, அசோக் அவளை கடுப்புடன் முறைத்தான்.
“எப்படின்னா…?? எனக்கு புரியலை..!!”“இல்ல.. அங்க கேண்டீன் இருக்கா.. இல்ல நாமளே சாப்பாடு கொண்டு போகனுமா..??”“ம்ம்..?? கேண்டீன் இருக்கு.. கேஃப்டீரியான்னு சொல்வாங்க..!!”“ஓ..!! ம்ம்ம்.. நம்ம சாப்பாடு கெடைக்குமா.. இல்ல இந்த ஊர் சாப்பாடுதானா..??”“எல்லா ஊர் சாப்பாடும் கெடைக்கும்..!! பதினஞ்சு இருபது ஸ்டால் இருக்கு..!!”“ஹ்ம்ம்.. அப்புறம்….
”“வேறென்ன..??”“இடியாப்பம் கெடைக்குமா அங்க..??” செண்பகம் விழிகளை விரித்து ஆர்வமாக கேட்க, அசோக் இப்போது பொறுமை இழந்தான்.
“ஏண்டி.. நீ சாஃப்ட்வேர் டெவலப் பண்ற வேலைக்கு வந்திருக்கிறியா..?? இல்ல.. சாப்ட்டு உடம்பை டெவலப் பண்ணலாம்னு வந்திருக்கியா..??”“சாஃப்ட்வேர் வேலைக்குத்தான்.. ஏன்..??” செண்பகம் முகம் சுருங்கிப் போனவளாய் சொன்னாள்.
“கேக்குற கேள்விலாம் ஒன்னும் சரி இல்லையே..!! இன்டர்வ்யூல இந்த கேள்விலாம் கேட்பாங்கன்னு உனக்கு யார் சொன்னது..??”“இன்டர்வ்யூக்குலாம் நல்லா ப்ரிப்பேர் ஆகிட்டேன் மாமா.. அதுலலாம் எந்த டவுட்டும் இல்ல..!!”“இடியாப்பம் கெடைக்கலைன்னா என்ன பண்றதுன்னுதான் இன்னும் ப்ரிப்பேர் ஆகலையாக்கும்..??”“ஹ்ம்ம்..!!” செண்பகம் அப்பாவியாக சொல்லிவிட்டு கட்டை விரல் நகத்தை பற்களால் கடித்தாள்.
Pundai Nakkum Tamil Kamakathaikal– தொடரும்ஐ ஹேட் யூ பட் – 19
ஆதாரம்:இணையம்