இருண்ட

ஐ ஹேட் யூ பட் – 31

🇮🇳 தமிழ்
வேகம்: 1.0x
நிலை: தயார்
×

இயக்க அமைப்பு உதவி

நீங்கள் ஏற்கனவே Chrome/Edge ஐப் பயன்படுத்தினாலும், இன்னும் இயக்க முடியவில்லை என்றால், உங்கள் தொலைபேசி/PC அமைப்புகளைச் சரிபார்க்கவும்.
நீங்கள் கேட்க விரும்பும் மொழியைப் பயன்படுத்தி, TTS இன்ஜின் செயலில் இருப்பதை உறுதி செய்யவும்.

Android மற்றும் பிற OS பயனர்களுக்கு

Android, Harmony, Lineage, Ubuntu Touch, Sailfish, ColorOS / FuntouchOS, hyperOS போன்ற பயனர்களுக்கு
மெனு அணுகல்: அமைப்புகளைத் திற > அணுகல்தன்மை > உரையிலிருந்து பேச்சு வெளியீடு.
அது இல்லை என்றால், அமைப்புகள் > மேலே உள்ள தேடல் பெட்டி > "text-to-speech" அல்லது "text" என உள்ளிடவும்
பிறகு உரையிலிருந்து பேச்சு அல்லது அதை ஒத்த ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
மொழியைச் சேர்க்க, கியர் ஐகானைக் கிளிக் செய்யவும் ⚙ > குரல் தரவை நிறுவு உங்களுக்குத் தேவையான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.

iOS பயனர்களுக்கு

அமைப்புகள் > அணுகல்தன்மை > பேசப்படும் உள்ளடக்கம் என்பதற்குச் செல்லவும்
அல்லது அமைப்புகள் > மேலே உள்ள தேடல் பெட்டி > "பேசப்படும் உள்ளடக்கம்" என உள்ளிட்டு என்டர் செய்யவும்
மொழியைச் சேர்க்க குரல்கள் என்பதைத் தேர்ந்தெடுத்து குரலைத் தேர்ந்தெடுக்கவும்

PC MacOS பயனர்களுக்கு

மெனு அணுகல்: Apple மெனுவைக் கிளிக் செய்யவும் () > கணினி அமைப்புகள் > அணுகல்தன்மை > பேசப்படும் உள்ளடக்கம்.

Windows பயனர்களுக்கு

Windows 10 & 11
மெனு அணுகல்: தொடக்கத்தைத் திற > அமைப்புகள் > நேரம் & மொழி > பேச்சு.
Windows 7 & 8
கட்டுப்பாட்டு பலகம் > அணுகல் எளிமை > பேச்சு அங்கீகாரம் > உரையிலிருந்து பேச்சு
Windows XP
தொடக்கம் > கட்டுப்பாட்டு பலகம் > ஒலிகள், பேச்சு மற்றும் ஆடியோ சாதனங்கள் > பேச்சு
Windows 2000 & ME
தொடக்கம் > அமைப்புகள் > கட்டுப்பாட்டு பலகம் > பேச்சு
Linux, ChromeOS, FreeBSD போன்ற பிற வகை PC பயனர்களுக்கு.
Google, Bing போன்ற தேடுபொறிகளில் உரையிலிருந்து பேச்சு வசதியை இயக்குவதற்கான அமைப்புகளைத் தேடவும்

குறிப்பு தற்போது, இந்தப் பக்கம் உங்கள் சாதனத்தின் இன்ஜினுக்கு ஏற்ப செயல்படுகிறது.
எனவே உருவாக்கப்படும் ஒலி உங்கள் சாதனத்தின் TTS இன்ஜினைப் பின்பற்றுகிறது.

ஐ ஹேட் யூ பட் – 31

. Sex Stories In Tamil – “அவன் வேலை பாக்குற கம்பனிலதான் நானும் வேலை பாக்குறேன்னு அவன்கிட்ட சொல்லிட்டீங்களா டாடி..??”“இல்லம்மா.. அதை சொல்றதுக்குள்ளதான்.. அவரோட லூஸு பாஸ் கூப்பிடுறான்னு ஓடிப் போயிட்டாரு.. ஒரே தமாஷ் போ.. ஹாஹா..!!” எரிகிற தீயில் எண்ணெய் வார்ப்பது போல, வரதராஜன் சொல்லிவிட்டு சிரித்தார்.
“என்னது..?? லூஸு பாஸா…??” ஏற்கனவே அசோக் மீது இருந்த கோவத்துடன், இப்போது உச்சபட்சத்தில் ஒரு கடுப்பும் சேர்ந்து கொள்ள, ப்ரியா கத்தினாள்.
“ஆமாம்மா.. அந்த தம்பியோட பாஸ் ஏதோ ஒரு லூஸாம்.. அந்த பொண்ணுக்கு எப்போவாவதுதான் மூளை ஒழுங்கா வேலை செய்யுமாம்..!! அவர் சொன்னதை கேட்டு.. அவ்வளவு கஷ்டத்திலயும் எனக்கு சிரிப்பு வந்துடுச்சுமா..!! ஹாஹா..!!”மகளின் மனநிலை புரியாமல் வரதராஜன் சிரிக்க, ப்ரியாவால் அதற்கு மேலும் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
காலை ஆத்திரமாக கட் செய்தாள்.
செல்போனை தூக்கி ஓரமாய் விட்டெறிந்தாள்.
இரு கைகளையும் டேபிளில் பரப்பி, படக்கென அதிலேயே தன் தலையை கவிழ்த்து படுத்துக் கொண்டாள்.
அவளுடய நெஞ்சம் குமுற ஆரம்பிக்க, கண்களில் நீர் பொங்கிக்கொண்டு வந்தது.
‘ஓ…!!’ என வாய் விட்டு அலறி அழ வேண்டும் போலிருந்தது அவளுக்கு.
ஆபீஸாக போயிற்றே என்று அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டாள்.
‘லூஸா நான்..?? ஆமாண்டா.. லூஸுதான்.. உன் மேல இவ்வளவு காதல் வச்சிருக்கேன்ல.. என்னைப்பாத்தா உனக்கு லூஸாத்தான் தெரியும்..!! ஏண்டா இப்படி செஞ்ச..?? என்னை விட அந்த பூசணிக்காயைத்தான் உனக்கு புடிச்சிருக்கா..?? புடிச்சிருந்தா வீட்டுல சொல்லி கல்யாணம் பண்ணிக்க வேண்டியதுதான..?? ஏன் பொண்ணு பாக்க சொல்லி.. என் மனசுல ஆசையை கெளப்பி விட்ட..??’நேற்றிலிருந்து மத்தாப்பாய் பூரித்துக்கொண்டிருந்த ப்ரியாவின் மனம், இப்போது புஸ்வானமாய் அணைந்து நமத்துப் போயிருந்தது.
‘செண்பகம் அவனுடைய அண்ணியின் தங்கைதானே.. அவளை காதலித்தால் வீட்டில் சொல்லி திருமணம் செய்துகொள்ளாமல்.. ஏன் தயங்குகிறான்..?? அதில் என்ன பிரச்னை அவனுக்கு..??’ என்று ஒரு கேள்வி எழுந்தது.
உடனே ‘எங்க வீட்டுக்கும் என் அண்ணி வீட்டுக்கும் பெரிய தகராறு..’ என்று அசோக் எப்போதோ சொன்னதும், ‘என் அண்ணனும் அண்ணியும் இருக்காங்களே.. சுத்தமா என் மனசை புரிஞ்சுக்கவே மாட்டாங்க’ என்று அவன் சற்றுமுன் சொன்னதும் நினைவுக்கு வர, அந்தக் கேள்விக்கும் அவளுக்கு பதில் கிடைத்து போனது.
‘இவனுடைய விளையாட்டு.. எனக்கு வேதனையாக முடிந்து போனது..’ என்று நினைத்துக் கொண்டாள்.
தான் இத்தனை நாளாய் கண்ணும் கருத்துமாய்.. பார்த்து பார்த்து பயிர் செய்த காதல் தோட்டம்.. இப்போது புயலில் சிக்கி உருக்குலைந்து போனதாய் அவளுக்கு தோன்றியது..!! சிறு வலியை கூட தாங்காத அவளது இதயம்.. இப்போது திராவகம் வீசப்பட்டு பொசுங்குவது போல துடிதுடித்தது..!! ‘அசோக் தனக்கில்லை..!!’ என்று அவள் நினைக்க நினைக்க.. அழுகை பொத்துக்கொண்டு வந்தது..!!கண்களில் வழிந்த நீரை புஜத்திலேயே துடைத்துவிட்டு நிமிர்ந்தபோதுதான், அசோக் அவளுடைய அறைக்குள் நுழைந்தான்.
இவள் முகத்தை சகஜமாக மாற்றிக்கொள்ள முயல, அவன் உதட்டில் புன்னகையும், குரலில் கேலியுமாய் கேட்டான்.
“ஹேய் லூஸு.. என்னை அங்க வெயிட் பண்ண சொல்லிட்டு.. நீ என்ன இங்க வந்து படுத்து தூங்கிட்டு இருக்குற..??”அவ்வளவுதான்..!! அந்த ‘ லூஸு’ என்ற வார்த்தை ப்ரியாவுக்கு சுர்ரென ஒரு ஆத்திரத்தை கிளப்பிவிட்டது.
பட்டென சேரில் இருந்து எழுந்தாள்.
முகமெல்லாம் கோவத்தில் சிவந்து போக, அசோக்கை பார்த்து சீற்றமாய் சொன்னாள்.
“மைன்ட் யுவர் டங்..!!!! இனிமே என்னை லூஸுன்னு சொன்ன.. மரியாதை கெட்டுப் போயிடும்..!!”ப்ரியாவின் சூடான வார்த்தைகளில்.. அவ்வளவு நேரம் புன்முறுவலுடன் இருந்த அசோக்கின் முகம்.. பட்டென சுருங்கிப் போனது..!! ‘என்ன ஆயிற்று இவளுக்கு திடீரென..?’ என்று குழப்பமுற்றவனாய், தடுமாற்றமாக கேட்டான்.
“ஹேய்.. என்னாச்சு உனக்கு.. ஏன் இப்போ டென்ஷன் ஆகுற..?? நான் எப்போவும் கூப்பிடுறதுதான..??”“இனிமே கூப்பிடாத..!! இந்த லூஸு, ஸ்டுபிட்லாம் ஆபீசுக்கு வெளில வச்சுக்கோ..!! இங்க நான் உன் பாஸ்.. அதுக்கு உண்டான மரியாதையை குடுக்கணும்..!! இல்லனா உன்னைப்பத்தி நான் மேனேஜ்மன்ட்ல கம்ப்ளயின்ட் பண்ண வேண்டி இருக்கும்.. அண்டர்ஸ்டாண்ட்..??”ப்ரியா ஆத்திரத்துடன் ஆட்காட்டி விரலை காட்டி.. அவனை எச்சரிப்பது போல சொல்ல சொல்லவே.. அசோக்கின் முகம் கொஞ்சம் கொஞ்சமாய் இறுக ஆரம்பித்தது..!! சற்றுமுன் ஆசையும் ஏக்கமுமாய் பார்த்த அதே ப்ரியாவின் முகத்தை, இப்போது வெறுப்பாக முறைத்தான்.
கண்களை இடுக்கி அவளை உஷ்ணமாக பார்த்தவன், பற்களை கடித்தவாறு சொன்னான்.
“ஓ..!! TL மேடத்துக்கு மரியாதை வேணுமா..?? குடுத்துட்டா போச்சு..!!” என்றவாறு கைகளை மார்புக்கு குறுக்காக பணிவுடன் கட்டிக்கொண்டான்.
குரலில் ஒரு போலி மரியாதையை கூட்டிக்கொண்டு..“மன்னிச்சுடுங்க மேடம்.. இனி உங்களை நான் லூஸுன்னு கூப்பிட மாட்டேன்.. அப்படி கூப்பிட்டா நான்தான் இனிமே லூஸு..!! போதுமா..??” என்றான்.
அவனுடைய செய்கை ப்ரியாவுக்கு அழுகையை தூண்டுவதாய் இருந்தது.
கட்டுப்படுத்திக் கொண்டாள்.
தலையை கவிழ்த்துக்கொண்டு அமைதியானாள்.
அவளுடைய அமைதியை பார்த்து, அசோக்கே தொடர்ந்து பேசினான்.
“எங்கிட்ட ஏதோ தனியா பேசணும்னு சொன்னீங்களே.. அது மட்டும் என்னன்னு சொல்லிடுங்க மேடம்..!! சொல்லிட்டா.. நான் என் எடத்துக்கு போய் என் வேலையை பார்ப்பேன்..!!”அசோக் கேலியான குரலில் கேட்க, ப்ரியா இப்போது அப்படியே தளர்ந்து போனாள்.
ஒருவித தடுமாற்றத்துடன் சேரில் மெல்ல அமர்ந்து கொண்டாள்.
அசோக்கின் முகத்தை ஏறிட்டு பரிதாபமாக ஒரு பார்வை பார்த்தாள்.
‘இதோ.. கேட்கிறான்.. என்ன சொல்வது இப்போது..?? நேற்றிலிருந்து எத்தனை எத்தனை வார்த்தைகளை புரட்டி புரட்டி போட்டு.. வாக்கியங்களை பார்த்து பார்த்து மாலை போல கோர்த்து கோர்த்து வைத்திருந்தேன்..?? அதிலிருந்து ஒற்றை வார்த்தையை இப்போது இவனிடம் கூற இயலுமா..?? இதோ.. கேட்கிறான்.. என்ன சொல்வது இப்போது..??’ மனதில் புரண்ட உணர்ச்சி அலைகளை, ப்ரியா கட்டுப்படுத்திக் கொண்டவாறே..“டைம் ஷீட் என்டர் பண்ணிட்டியா..??” என்றாள் உணர்ச்சி செத்துப்போன குரலில்.
“அதை கேட்கவா தனியா கூட்டிட்டு போன..??”“ம்ம்.. ஆமாம்..!!”“இல்ல.. நீ ஏதோ மறைக்கிற..??”“ப்ச்.. நான்தான் சொல்றன்ல..?? அதை கேக்கத்தான் கூட்டிட்டு போனேன்..!! சொல்லு.. என்டர் பண்ணிட்டியா..??”“இல்ல.. இன்னும் பண்ணல..!!”“மொதல்ல அதைப்போய் பண்ணு.. பாலா உடனே பண்ண சொன்னாரு..!!”“அதுக்கென்ன இப்போ அவசரம்.. ஃப்ரைடே பண்ணினா பத்தாது..??” அசோக்கின் கேள்வியில் ப்ரியா இப்போது பொறுமை இழந்தாள்.
“டூ வாட் ஐ ஸே..!!” என்று எரிச்சலாக கத்தினாள்.
இப்போது அசோக் முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு ப்ரியாவையே சில வினாடிகள் முறைத்துப் பார்த்தான்.
அப்புறம்,“திருந்தவே மாட்டேல நீ..?? ச்ச..!!”என்று வெறுப்பாக கத்திவிட்டு திரும்பி விடுவிடுவென நடந்தான்.
ஆத்திரத்துடன் கதவை பிடித்து இழுத்து, அந்த அறையை விட்டு வெளியேறினான்.
அவன் செல்வதையே ஏக்கமாக பார்த்துக் கொண்டிருந்த ப்ரியாவுக்கு, அழுகை முட்டிக்கொண்டு வந்தது.
கண்களில் நீர் திரையிட.. கை நீட்டி.. டேபிள் மீதிருந்த அந்த வாட்சை எடுத்தாள்..!! பதிக்கப்பட்ட கற்களுடன் பளீரென்று பளிச்சிட்ட அந்த வாட்சை பரிதாபமாக பார்த்தாள்..!!அத்தியாயம் 19ஆபீஸில் அன்று முழுவதும் ப்ரியா ஒரு விரக்தி மனநிலையுடனே இருந்தாள்.
அவளுடைய அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தாள்.
ஈடுபாடு இல்லாமலே கீ போர்ட் தட்டி கோட் அடித்தாள்.
அவ்வப்போது அவளையும் மீறி கண்ணோரமாய் கண்ணீர் வழியும்.
உடனே புறங்கையால் துடைத்துக்கொண்டு, மூக்கை விசும்பிக்கொள்வாள்.
தலையை உயர்த்தி, தூரமாய் அமர்ந்து தீவிரமாய் வேலை பார்த்துக் கொண்டிருக்கிற அசோக்கை ஏக்கமாய் பார்ப்பாள்.
அன்று மதிய உணவுக்கு கூட டீமோடு சேர்ந்து செல்லவில்லை அவள்..!! சென்றிருப்பாள்.. அவளை அழைக்க வந்தது வேறு ஆளாய் இருந்திருந்தால்..!!“நாங்கலாம் லஞ்ச்க்கு போறோம்க்கா.. வர்றீங்களா..??” என்று புன்னகையுடன் வந்து கேட்ட செண்பகத்தை எரிச்சலாகத்தான் அவளால் ஏறிட்டு பார்க்க முடிந்தது.
“இ..இல்ல.. எனக்கு பசியில்ல.. நீங்க போங்க.. நான் அப்புறமா சாப்பிட்டுக்குறேன்..!!” என்றுதான் அவளால் சொல்ல முடிந்தது.
மாலையில்தான் அலுவல் சம்பந்தமாக அசோக்கிடம் ஏதோ கேட்க வேண்டி இருந்தது.
எழுந்து செல்ல மனசில்லை.
கம்யூனிகேடர் திறந்து பார்த்தாள்.
‘ASHOK AWAY’ என்று காட்டியது.
சில வினாடிகள் அந்த கம்யூனிகேடரையே கடுப்புடன் முறைத்தவள், அப்புறம் சேரில் இருந்து எழுந்து கொண்டாள்.
அறையை விட்டு வெளியேறி அசோக்கின் இடத்திற்கு சென்றாள்.
மானிட்டருக்கு தலையை கொடுத்தவாறு அமர்ந்திருந்த ஹரியிடம் இறுக்கமான குரலில் கேட்டாள்.
“எங்க போயிட்டான்..??”“ஸ்குவாஷ் ஆட போறேன்னுட்டு போனான் ப்ரியா..!!” ஹரி மானிட்டரில் இருந்து பார்வையை நகரத்தாமலே சொன்னான்.
‘ஸ்குவாஷா..?? யார் கூட..??’ என்று கேட்க வாயெடுத்த ப்ரியா, பிறகு கேட்காமலேயே நிறுத்தினாள்.
தலையை சுழற்றி ஒரு பார்வை பார்த்தாள்.
டீமில் அனைவரும் அவரவர் இடத்தில் இருந்தார்கள்.. அசோக்கையும் செண்பகத்தையும் தவிர..!! அவர்கள் இரண்டு பேருந்தான் ஜோடியாக சென்றிருக்கிறார்கள் என்பது எளிதாக அவளுக்கு புரிந்து போனது.
உடனே.. என்னவென்று சொல்ல முடியாத ஒரு எரிச்சலில் அவளுடைய உடல் திகுதிகுவென எரிய ஆரம்பித்தது..!! காலியாக இருந்த அசோக்கின் இருக்கையையே கொஞ்ச நேரம் வெறித்து பார்த்தாள்.
அப்புறம் ஒரு முடிவுக்கு வந்தவளாய், அவளுடைய அறைக்கு விடுவிடுவென நடந்தாள்.
அறைக்குள் நுழைந்தவள், கப்போர்ட் திறந்து அந்த பேகை எடுத்துக் கொண்டாள்.
வெளியே வந்து.. மீண்டும் ‘டக்.. டக்.. டக்..’ என வேகமாய் நடந்து அந்த தளத்தின் அடுத்த மூலைக்கு சென்றாள்.
அங்கிருந்த ட்ரஸிங் ரூம் புகுந்து தாழிட்டுக்கொண்டாள்.
அணிந்திருந்த புடவையை பரபரவென அவிழ்த்து எறிந்தாள்.
பேக் திறந்து அந்த கருப்பு நிற டி-ஷர்ட்டையும், வெள்ளை நிற ஷார்ட்சையும் எடுத்து அவசரமாய் உடுத்திக் கொண்டாள்.
கால்களுக்கு ஷூ அணிந்து, லேஸை பிடித்து சரக்கென இழுத்தாள்.
ஹேர்பாண்ட் எடுத்து கூந்தலுக்கு மாட்டி.. முடிக்கற்றையை ‘பட் பட்’ என்று கீழே பிடித்து இழுத்து.. டைட் ஆக்கிக் கொண்டாள்.
தனது இறுக்கமான முகத்தை கண்ணாடியில் ஒருமுறை பார்த்துக் கொண்டாள்.
ஸ்குவாஷ் ராக்கெட்டை கையில் எடுத்து.. வலது காலை சற்றே பின்னுக்கு உயர்த்தி.. அந்தக்கால் ஷூவை ராக்கெட்டால் ரெண்டு தட்டு தட்டிவிட்டு.. புயலாய் கிளம்பினாள்..!!அதே நேரம்.. ஸ்குவாஷ் கோர்ட்டில்.. அசோக் செண்பகத்திற்கு அந்த விளையாட்டை கற்றுத் தருகின்ற பேரில்.. அவளைப்போட்டு பாடாய் படுத்திக் கொண்டிருந்தான்..!!“ஏண்டி.. பால் வர்றப்போ அதை திரும்ப அடிக்கனும்னு சொன்னா.. விட்டுட்டு பப்பரக்கான்னு பாத்துக்கிட்டு நிக்கிற..??” அசோக் பற்களை கடித்தவாறு கேட்டான்.
“ட்ரை பண்ணேன் மாமா.. முடியலை..!!” செண்பகம் பரிதாபமாக சொன்னாள்.
“ஓடிப்போய் எடுக்கணும்.. நீ அசைஞ்சு அசைஞ்சு போறதுக்குள்ள.. அது அஞ்சு தடவை பவுன்ஸ் ஆயிடுது..!!”“ஓடத்தான் செஞ்சேன்.. அது அப்டீக்கா போகுது.. நான் என்ன பண்ணுவேன்..??”“அப்டீக்கா போகாம.. ‘என்னை அடிங்க ப்ளீஸ்..’னு உன்னை தேடியா வரும்..??”“போங்க மாமா.. எனக்கு இந்த கேம் பிடிக்கல.. வேற ஏதாவது உக்காந்துட்டு வெளையாடுற கேம் ஆடலாம்..!!”“உக்காந்துக்கிட்டா..?? ஏன்.. படுத்து கொட்டாவி விட்டுக்கிட்டே வெளையாடுற மாதிரி ஏதாவது கேம் ஆடலாமே..??”“அப்படியுமா கேம் இருக்கு..??”“அப்படியே அறைஞ்சன்னா பாத்துக்கோ..!! பால் எடுத்து போடுடி.. சர்வீஸ் போடுறேன்.. உன் எடத்துக்கு போ..!!”“வேணாம் மாமா.. வெளையாண்டது போதும்..!!”“என்னது.. போதுமா..?? ஆரம்பிச்சு அஞ்சு நிமிஷம் கூட ஆகல.. அதுக்குள்ளே போதும்னு சொல்ற..??”“அஞ்சு நிமிஷம் கூட ஆகல.. ஆனா அதுக்குள்ள எனக்கு எப்படி வேர்த்து ஊத்துது பாருங்க..!! டயர்டாயிடுச்சு மாமா.. முடியல..!!”“இங்க பாரு செம்பு.. உன் உடம்பு எளைக்கிறதுக்கு இதை விட நல்ல வழி.. வேற எதுவும் இல்ல..!! சொல்றதை கேளு.. டெயிலி ஒரு மணி நேரம் என்கூட ஸ்குவாஷ் ஆடு.. ஹன்சிகா மாதிரி பொதுபொதுன்னு இருக்குறவ, அனுஷ்கா மாதிரி சிக்குன்னு மாறிடுவ..!! போ.. இன்னும் கொஞ்ச நேரம்..!!”“ஹன்சிகாக்கு என்ன கொறைச்சலு..??” செண்பகம் அவளுடைய இடத்துக்கு நகர்ந்துகொண்டே மெல்லிய குரலில் கேட்டாள்.
“எதுவும் கொறைச்சலுன்னு சொல்லல.. எல்லாம் நெறைச்சலுன்னுதான் சொல்றேன்.. போ போ..!!” அசோக் கேலியாக சொல்லிக்கொண்டே சர்வீஸ் போட தயாரானான்.
அப்புறம் கொஞ்ச நேரத்திற்கு இருவரும் தீவிரமாக, மன ஈடுபாட்டுடன் ஸ்குவாஷ் ஆடிக்கொண்டிருந்தார்கள்.
செண்பகம்தான் தனது கனத்த தேகத்தை தூக்கிக்கொண்டு ஓடி விளையாட மிகவும் கஷ்டப்பட்டாள்.
அசோக் அவளை ஐந்து நொடிக்கொரு முறை திட்டிக்கொண்டும், கேலி செய்துகொண்டுமே லாவகமாக பந்தடித்துக் கொண்டிருந்தான்.
வேண்டும் என்றே, அவள் அங்கும் ஓடி சென்று பந்தை அடிக்கும் வகையில் அவளை அலையவிட்டான்.
ஆட்ட சுவாரசியத்தில் அவர்கள் இருவரும் மூழ்கிப் போயியிருந்த நேரத்தில்தான், ப்ரியா அங்கு வந்து சேர்ந்தாள்.
கண்ணாடி கதவுக்கு வெளியே நின்றவாறு, அவர்கள் இருவரும் விளையாடுவதையே சிறிது நேரம் முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
முன்பு இதே கோர்ட்டில்.. அவளும் அசோக்கும்.. வளர்ந்துவிட்ட குழந்தைகளாய்.. சிரிப்பும் கேலியுமாய்.. நேரம் போவதே தெரியாமல் விளையாடிய நினைவுகள் எல்லாம் இப்போது அவளுக்கு வந்தது..!! இன்று அவள் இடத்தில் இன்னொருத்தி அவனுடன் சேர்ந்து விளையாடுவதை பார்த்து.. அவளுடைய காதல் மனம் பொறுமியது..!! ஒருவித பொறாமை உணர்வுதான்.. தவறென்று அவளுடைய மூளை கண்டித்தாலும்.. அவளது மனம் அந்த கட்டளைக்கு கட்டுப்பட மறுத்தது..!!கைவிரல்களை மடக்கி அந்த கண்ணாடி கதவை ‘லொட்.. லொட்..’ என்று தட்டினாள்.
செண்பகம்தான் முதலில் அந்த சப்தம் கேட்டு திரும்பி பார்த்தாள்.
ப்ரியாவை பார்த்து லேசாக ஆச்சரியமுற்றவள், அப்புறம் கதவை நோக்கி நடந்து வந்தாள்.
இப்போது அசோக்கும் திரும்பி பார்த்தான்.
ப்ரியா வந்திருப்பதை உணர்ந்ததும் சற்றே குழப்பமாய் நெற்றி சுருக்கினான்.
செண்பகம் கதவை திறந்துவிட ப்ரியா உள்ளே நுழைந்தாள்.
நுழைந்தவள் அசோக்கை திரும்பி கூட பார்க்காமல், செண்பகத்திடம் இறுக்கமான குரலில் கேட்டாள்.
“உன்கிட்ட ஒரு பி.
ஓ.
ஸி பண்ணிக்காட்ட சொல்லி கேட்டிருந்தனே.. என்னாச்சு..??” ப்ரியாவின் இந்த திடீர் கேள்வியை எதிர்பாராத செண்பகம்,“அ..அது.. அது பண்ணிட்டு இருக்கேன்க்கா..!!” தடுமாற்றமாய் சொன்னாள்.
“குடுத்த வேலையை முடிக்காம இங்க வந்து ஜாலியா வெளையாடிட்டு இருக்கியா..?? இங்க பாரு செண்பகம்.. நீ இன்னும் ப்ரோபேஷன் பீரியட்லதான் இருக்குற.. நீ வொர்க் பண்ற விதம் சாடிஸ்ஃபாக்ட்ரியா இருக்குன்னு நான் ரிப்போர்ட் குடுத்தாத்தான்.. உன் வேலையை கன்ஃபார்ம் பண்ணுவாங்க.. ஞாபகம் இருக்குல..??” ப்ரியாவின் குரல் மிரட்டலாய் ஒலிக்க,“இ..இருக்குக்கா.. நா..நாளைக்கு முடிச்சுர்றேன்..!!” செண்பகம் நிஜமாகவே மிரண்டு போய் சொன்னாள்.
“நாளைக்கா..?? எனக்கு இன்னைக்கு வேணும்..!!”“இ..இன்னைக்கேவா..??”“ஆமாம்.. கெளம்பு.. போ.. போய் வேலையை பாரு..!!”செண்பகம் ப்ரியாவின் முகத்தையே மருட்சியாக ஒரு பார்வை பார்த்தாள்.
ஏமாற்றம் அப்பிய முகத்துடன் அசோக்கை ஒருமுறை திரும்பி பார்த்துக் கொண்டாள்.
பிறகு பிரியாவை ஏறிட்டு,“ச..சரிக்கா..!!” என்று மெல்ல தலையாட்டினாள்.
கதவு திறந்து செண்பகம் தயங்கி தயங்கி வெளியேற, கண்களை இடுக்கியவாறு அவள் முதுகையே ப்ரியா வெறித்துக் கொண்டிருந்தாள்.
அவள் சென்றதும்தான் தலையை சுழற்றி அசோக்கின் முகத்தை கூர்மையாக ஒரு பார்வை பார்த்தாள்.
அவனோ இவளை எரித்துவிடுவது போல முறைத்துக் கொண்டிருந்தான்.
இவள் பார்த்ததும் அவனும் ‘ச்ச..’ வெறுப்பை உமிழ்ந்துவிட்டு, கோர்ட்டை விட்டு வெளியேறும் எண்ணத்துடன் கதவு நோக்கி நடக்கலானான்.
அவன் ப்ரியாவை கடக்கிற சமயத்தில், அவள் எள்ளலான குரலில் கேட்டாள்.
Sunni Oombum Sex Stories In Tamil– தொடரும்.
ஆதாரம்:இணையம்