இருண்ட

ஐ ஹேட் யூ பட் – 36

🇮🇳 தமிழ்
வேகம்: 1.0x
நிலை: தயார்
×

இயக்க அமைப்பு உதவி

நீங்கள் ஏற்கனவே Chrome/Edge ஐப் பயன்படுத்தினாலும், இன்னும் இயக்க முடியவில்லை என்றால், உங்கள் தொலைபேசி/PC அமைப்புகளைச் சரிபார்க்கவும்.
நீங்கள் கேட்க விரும்பும் மொழியைப் பயன்படுத்தி, TTS இன்ஜின் செயலில் இருப்பதை உறுதி செய்யவும்.

Android மற்றும் பிற OS பயனர்களுக்கு

Android, Harmony, Lineage, Ubuntu Touch, Sailfish, ColorOS / FuntouchOS, hyperOS போன்ற பயனர்களுக்கு
மெனு அணுகல்: அமைப்புகளைத் திற > அணுகல்தன்மை > உரையிலிருந்து பேச்சு வெளியீடு.
அது இல்லை என்றால், அமைப்புகள் > மேலே உள்ள தேடல் பெட்டி > "text-to-speech" அல்லது "text" என உள்ளிடவும்
பிறகு உரையிலிருந்து பேச்சு அல்லது அதை ஒத்த ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
மொழியைச் சேர்க்க, கியர் ஐகானைக் கிளிக் செய்யவும் ⚙ > குரல் தரவை நிறுவு உங்களுக்குத் தேவையான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.

iOS பயனர்களுக்கு

அமைப்புகள் > அணுகல்தன்மை > பேசப்படும் உள்ளடக்கம் என்பதற்குச் செல்லவும்
அல்லது அமைப்புகள் > மேலே உள்ள தேடல் பெட்டி > "பேசப்படும் உள்ளடக்கம்" என உள்ளிட்டு என்டர் செய்யவும்
மொழியைச் சேர்க்க குரல்கள் என்பதைத் தேர்ந்தெடுத்து குரலைத் தேர்ந்தெடுக்கவும்

PC MacOS பயனர்களுக்கு

மெனு அணுகல்: Apple மெனுவைக் கிளிக் செய்யவும் () > கணினி அமைப்புகள் > அணுகல்தன்மை > பேசப்படும் உள்ளடக்கம்.

Windows பயனர்களுக்கு

Windows 10 & 11
மெனு அணுகல்: தொடக்கத்தைத் திற > அமைப்புகள் > நேரம் & மொழி > பேச்சு.
Windows 7 & 8
கட்டுப்பாட்டு பலகம் > அணுகல் எளிமை > பேச்சு அங்கீகாரம் > உரையிலிருந்து பேச்சு
Windows XP
தொடக்கம் > கட்டுப்பாட்டு பலகம் > ஒலிகள், பேச்சு மற்றும் ஆடியோ சாதனங்கள் > பேச்சு
Windows 2000 & ME
தொடக்கம் > அமைப்புகள் > கட்டுப்பாட்டு பலகம் > பேச்சு
Linux, ChromeOS, FreeBSD போன்ற பிற வகை PC பயனர்களுக்கு.
Google, Bing போன்ற தேடுபொறிகளில் உரையிலிருந்து பேச்சு வசதியை இயக்குவதற்கான அமைப்புகளைத் தேடவும்

குறிப்பு தற்போது, இந்தப் பக்கம் உங்கள் சாதனத்தின் இன்ஜினுக்கு ஏற்ப செயல்படுகிறது.
எனவே உருவாக்கப்படும் ஒலி உங்கள் சாதனத்தின் TTS இன்ஜினைப் பின்பற்றுகிறது.

ஐ ஹேட் யூ பட் – 36

. Tamil Kamaveri – ப்ரியா நினைத்துக்கொண்ட மாதிரி அவ்வளவு எளிதாக அசோக்கிடம் மனம்விட்டு பேசி விட முடியவில்லை.
அவர்கள் இருவரும் தனித்திருக்கும் நேரமே வாய்க்கவில்லை.
அசோக் அந்த மருத்துவமனையில் ஐந்து நாட்கள் இருந்தான்.
அந்த ஐந்து நாட்களும் ப்ரியா காலையில் ஒருமுறை, மாலையில் ஒருமுறை அவனை சென்று பார்த்து வருவாள்.
ஆனால் எந்த நேரமும் அவனுடன் யாரவது ஒருவர் உடனிருப்பார்கள்.
மனதில் நினைத்தை சுதந்திரமாக பேசிக்கொள்ள முடியாமல் போகும்.
“இப்போ எப்படிடா இருக்கு..?? பரவாலையா..??” என்று ஃபார்மலாகத்தான் கேட்க முடியும்.
அதற்கு அவனும்“ம்ம்..?? இருக்கு இருக்கு..!!” என்பான் முகத்தை முறைப்பாக வைத்துக்கொண்டு.
“ஸாரிடா..!!” ப்ரியா கிசுகிசுப்பான குரலில் கெஞ்சலாக சொல்வாள்.
“ப்ச்..!!” அசோக் சலிப்பாக சொல்லிவிட்டு முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொள்வான்.
தினமும் காலையிலே கோவிலுக்கு சென்று அசோக்கின் பெயரில் அர்ச்சனை செய்து, அவன் நெற்றியில் வந்து திருநீறு பூசுகிற ப்ரியாவை செல்விக்கு மிகவும் பிடித்து போனது.
மாலையில் ஆபீஸை விட்டு கிளம்ப எவ்வளவு நேரம் ஆனாலும், ஆஸ்பத்திரிக்கு வந்து கொஞ்ச நேரமாவது அவர்களுடன் செலவழித்து சென்றது செல்வியை கவர்ந்துவிட்டது.
ப்ரியா வந்துவிட்டாலே, அவளை அருகில் அமர்த்தி வைத்து, அவளுடைய கையை வாஞ்சையாக தடவிக் கொடுத்தவாறே, ஏதாவது ஸ்னேஹமாக பேசிக்கொண்டிருப்பாள்.
ஆறாம்நாள் காலை.. அசோக் ஹாஸ்பிட்டலில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டான்.
வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டான்.
‘வீட்டுக்கு அடிக்கடி வாம்மா..!!’ என்று சொன்ன செல்வியின் நட்பு கிடைத்ததால், ப்ரியா அசோக்கின் வீட்டுக்கு செல்வதிலும் எந்த தடையும் இருக்கவில்லை.
ஆஸ்பத்திரிக்கு விட்டது போலவே அசோக்கின் வீட்டுக்கும் தினம் இரண்டு முறை விசிட் விட்டாள்.
ஆனால் அவர்கள் தனித்து பேசிக்கொள்ளத்தான் சந்தர்ப்பம் கிட்டவில்லை..!! அசோக்கின் மனதிலோ வெறுப்பு.. ப்ரியாவின் மனதிலோ ஏக்கம்.. வெளிப்படுத்திக்கொள்ளத்தான் வாய்ப்பு அமையவில்லை.. காத்திருந்தனர் இருவரும்..!!அசோக் வீட்டுக்கு சென்ற மூன்றாம் நாள் காலை..!! அன்று விடுமுறைதான்.. ப்ரியா சற்று தாமதமாகவே தனது வீட்டில் இருந்து அசோக்கை பார்த்துவர கிளம்பினாள்..!! அசோக்கின் வீட்டை அடைந்தபோது மணி ஒன்பதரை ஆகி இருந்தது..!! வீட்டுக்குள் நுழைந்தவள்.. ‘இது அசோக்கின் வீடுதானா..?’ என்று ஒருகணம் குழம்பிப் போக நேர்ந்தது..!! ஏதோ சந்தைக்கடைக்குள் நுழைந்தாற்போல சலசலவென்று ஒரே சத்தம்..!! இருபது.. இருபத்தைந்து பேர்கள்.. அசோக்கின் உறவினர்கள்.. விபத்தில் சிக்கிய அசோக் வீடு திரும்புவதற்காக காத்திருந்தவர்கள்.. அவன் வீடு திரும்பியதும் கிராமத்தில் இருந்து கிளம்பி வந்திருந்தனர்..!! இப்போது ஹாலில் கும்பலாக அமர்ந்து ஆளாளுக்கு ஏதேதோ கதையடித்துக் கொண்டிருந்தார்கள்..!! அசோக்கை மட்டும் அந்த கூட்டத்தில் காணோம்..!! அவர்களை பார்த்து ப்ரியா சற்றே திகைத்துப்போய் நின்றிருக்க..“இதோ வந்துட்டால..?? இவதான் ப்ரியா..!!” என்று செல்விதான் முதலில் இவளை கவனித்து கத்தினாள்.
அவ்வளவுதான்..!! உக்காந்திருந்த ஏழெட்டுப் பெண்கள் உடனே எழுந்து வந்து ப்ரியாவை பிடித்துக் கொண்டார்கள்.
‘நீதானாம்மா.. வா.. வா..’ என்று அவளை அழைத்து சென்று அவர்களுக்கு நடுவில் அமர்த்தி வைத்துக் கொண்டனர்.
இந்த திடீர் சூழ்நிலையை சற்றும் எதிர்பாராத ப்ரியா திருதிருவென விழித்தாள்.
ஒருமாதிரி மிரட்சியாக எல்லோரையும் பார்த்தாள்.
அதை யாரும் புரிந்து கொள்ளாமல் ஆளாளுக்கு அவளுடைய கன்னத்தை தடவி பிய்த்து எடுத்தனர்.
ஏதேதோ கேள்வி கேட்டு துளைத்தெடுத்தனர்.
“செவசெவன்னு சினிமாக்காரி மாதிரில இருக்குறா..!!” என்று கமென்ட் அடித்தாள் ஒரு கிழவி.
“ஏம்மா.. இந்த தலைக்கறில சின்ன வெங்காயம், மொளகா வத்தல் போட்டு பெரட்டி எடுத்தா.. எனக்கு ரொம்ப உசுரு.. தாத்தாவுக்கு வச்சு குடுப்பியா..??” என்று கேட்டது ஒரு பெருசு.
“உங்களுக்கு அஜித் புடிக்குமா.. விஜய் புடிக்குமா..??” என்றாள் ஒரு ஆறு வயது சிறுமி.
“இது என்னடி அதிசயமா இருக்கு..?? வளையலை போய் காதுல மாட்டிருக்காக..?? இதுதான் பெங்களூர் மாடலாக்கும்..??” ப்ரியாவின் காது வளையத்தை பிடித்து இழுத்தாள் ஒரு பெண்.
“ஏத்தா.. என் பேரனை கட்டிக்க உனக்கு சம்மதந்தானா..??” இதை கேட்டது அசோக்கின் பாட்டி.
ப்ரியா இன்னும் மிரட்சி தெளியாமலே இருக்க, செல்வியே அதற்கு பதில் சொன்னாள்.
“ம்க்கும்.. இந்தப்புள்ளையா வேணாஞ்சொல்லுச்சு..?? உன் பேரப்புள்ளைதான் உச்சானிக்கொம்புல ஏறி ஒக்காந்திருக்காப்புல.. அவன்ங்கிட்ட போய் கேக்க வேண்டியதான..??”“அடிப்போடி.. அவன்ங்கிட்ட போய் என்னத்த கேக்க சொல்றவ..?? பொண்ணு பாக்கவான்னு கேட்டதுக்கே.. ‘போறியா.. இல்ல.. பொதைகுழில எறக்கிப்புடவா’ன்ல கேட்டான்..??”“அப்புறம் என்ன.. வாயை மூடிக்கிட்டு ச்சும்மா கெட..!!”இப்போது அசோக்கின் அம்மா எழுந்து வந்து ப்ரியாவுக்கு அருகில் அமர்ந்து கொண்டாள்.
ப்ரியாவின் கன்னத்தை பிடித்து வாஞ்சையாக தடவியவாறே, மலர்ந்த முகத்துடன் கேட்டாள்.
“வீட்ல அப்பா, தம்பிலாம் சவுக்கியமாம்மா..??”“ம்ம்.. ச..சவுக்கியம்..!!”“நீயும் என் புள்ளை வேல பாக்க அதே கம்பெனிலதான் வேல பாக்கியாக்கும்..??“ம்ம்.. ஆ..ஆமாம்..!!”“செல்விதான் சொன்னா..!! அசோக்கு அடிபட்ட அன்னைக்கு நீ எப்படி துடிச்சு போயிட்டேன்னு.. அன்னைக்கு பூரா அவன் கூடவே இருந்து பாத்துக்கிட்டியாமே..?? என் புள்ளை மேல உனக்கு அவ்வளவு பிரியமாம்மா..??”“ம்ம்..!!”ப்ரியா அவஸ்தையாக நெளிந்தவாறே சொன்னாள்.
ஒருமுறை பார்வையை சுழற்றி செண்பகத்தை தேடினாள்.
அவளோ இங்கே நடப்பது எதையுமே கண்டுகொள்ளாமல், அசோக்கை பார்க்க வந்தவர்கள் அவனுக்கு கொண்டுவந்திருந்த பலாச்சுளைகளை, ‘லபக் லபக்’ என்று வாய்க்குள் திணித்து அசைபோட்டுக் கொண்டிருந்தாள்.
ப்ரியா இப்போது சற்றே எரிச்சலாக செண்பகத்தை பார்த்தாள்.
‘ச்சே.. என்ன பெண் இவள்..?? அவளுடைய காதலனை பிடித்திருக்கிறதா என்று இங்கே ஆளாளுக்கு என்னை மொய்க்கிறார்கள்.. கல்யாணப்பேச்சு பேசுகிறார்கள்.. இவள் என்னவென்றால் கவலையே இல்லாமல் பலாப்பழம் விழுங்குகிறாள்..??’“என்னம்மா.. அப்படி பாக்குற..??” அசோக்கின் அம்மா அன்பாய் கேட்க,“ஒ..ஒண்ணுல்ல ஆண்ட்டி.. அ..அசோக்.. அசோக் எங்க..??” ப்ரியா திணறலாக கேட்டாள்.
“அப்படியே காத்து வாங்கிட்டு வரேன்னு மொட்டை மாடிக்கு போனான்..!! ஏன்மா.. அவனை பாக்கணுமா..??”“ம்ம்..!!”“சரி போ.. மேலதான் இருக்கான்.. போய்ப்பாரு..!!”‘விட்டால் போதும்..’ என்பது போல ப்ரியா படக்கென எழுந்து கொண்டாள்.
அவளுடைய முதுகுக்குப்பின், அவளை கிண்டல் செய்து எல்லோரும் கெக்கேபிக்கே என்று கனைக்க, இவள் அதை கண்டுகொள்ளாமல் வெளியே வந்தாள்.
படியேறி மொட்டை மாடி சென்றாள்.
தூரத்தில் முதுகு காட்டி நின்றவாறு பூங்காவை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அசோக் கண்ணில் பட்டான்.
மெல்ல நடந்து அவனை நெருங்கினாள்.
ப்ரியா வந்ததை அசோக் கவனிக்கவில்லை.
அவனுக்கு அருகில் சென்ற ப்ரியா, ஓசை ஏதும் எழுப்பாமல், கைப்பிடி சுவற்றில் ஊன்றியிருந்த அவனது வலது கையை, தனது கையால் இதமாக பற்றி ஒரு அழுத்தம் கொடுத்தாள்.
உடனே படக்கென திரும்பி பார்த்த அசோக், ப்ரியா என்று தெரிந்ததும் வெடுக்கென தனது கையை உருவிக் கொண்டான்.
சற்றே சீற்றமாக கேட்டான்.
“ப்ச்.. என்ன..??”“என் மேல கோவம் இன்னும் போகலையா..??”“உன் மேல கோவப்பட நான் யாரு..??” அசோக்கின் வார்த்தைகள் ப்ரியாவை வன்மையாக தாக்கின.
“ஏண்டா இப்படிலாம் பேசுற..??”“இனிமே எல்லாம் அப்படித்தான்..!! என்ன விஷயம்னு சொல்லு..!!”அசோக் கடுமையாக சொன்னான்.
வெறுப்பு கொப்பளிக்கும் அவன் முகத்தையே ப்ரியா பரிதாபமாக பார்த்தாள்.
சில வினாடிகள் தயங்கியவள், அப்புறம் மெல்ல ஆரம்பித்தாள்.
“கீ..கீழ.. அவங்க எல்லாம் என்னன்னவோ பேசுறாங்க அசோக்..!!”“என்ன பேசுறாங்க..??”“நம்ம கல்யாணப் பேச்சை திரும்ப ஆரம்பிச்சுட்டாங்க.. உன்னை கட்டிக்க சம்மதமான்னு எங்கிட்ட கேக்குறாங்க..!!”“ஓஹ்..!! அவங்களுக்கு வேற வேலையே கெடயாது.. அவங்க எய்ம்லாம் ஏதோ ஒரு கழுதையையோ குரங்கையோ புடிச்சு எனக்கு கட்டி வச்சிடணும்.. அவ்ளோதான்.. ச்ச..!!” அசோக் சலிப்பாக சொல்ல,“என்னது..???” ப்ரியா முகத்தை சுளித்தவாறு அவனை பார்த்தாள்.
“ஹ்ம்ம்.. அதுக்கு நீ என்ன சொன்ன..??”“நான் என்னத்த சொல்றது..?? நீதான் அவங்ககிட்ட போய் சொல்லணும்..!!”“நானா..?? நான் என்ன சொல்லணும்..??”“இங்க பாரு அசோக்.. இனிமேயும் நீ காலம் கடத்துறது கொஞ்சம் கூட சரி இல்ல.. அல்ரெடி ரொம்ப லேட்..!! போய் அவங்ககிட்ட உன் மனசுல இருக்குறதை பளிச்சுன்னு சொல்லிடு..!!”“ப்ச்..!! என்ன சொல்றேன்னே எனக்கு ஒன்னும் புரியல..!!”“ஹையோ.. ‘செண்பகத்தைத்தான் நான் கட்டிக்கப்போறேன்’னு.. அவங்ககிட்ட போய் சொல்லுன்னு சொல்றேன்..!!”ப்ரியா சொன்ன விஷயத்தை சரியாக புரிந்து கொள்ளவே அசோக்கிற்கு சில வினாடிகள் பிடித்தன.
பிறகு புரிந்ததும் எரிச்சலாக கேட்டான்.
“என்ன உளர்ற..?? செண்பகத்தை எதுக்கு நான் கட்டிக்கணும்..??”“அவளைத்தான நீ லவ் பண்ற..??”“உனக்கென்ன லூசா..?? அவளை நான் லவ் பண்றேன்னு உனக்கு யாரு சொன்னது..??” அசோக் முறைக்க, இப்போது ப்ரியா நெற்றியை சுருக்கினாள்.
“செ..செண்பகத்தை லவ் பண்றேன்னு.. நீ..நீதான அன்னைக்கு என் அப்பாகிட்ட..” ப்ரியா தடுமாற்றமாய் சொல்லி முடிக்கும் முன்பே அசோக் புரிந்து கொண்டான்.
“ப்ச்.. நான் லவ் பண்றேன்னு மட்டுந்தான் சொன்னேன்.. அவராத்தான் ‘அன்னைக்கு உங்ககூட வந்த பொண்ணா’ன்னு கேட்டாரு..!! அந்த நேரம் பாத்து.. நீ வேற இந்தப்பக்கம் அவசரப் படுத்தின.. நானும் கால் கட் பண்ற அவசரத்துல ஆமாம்னு சொல்லிட்டேன்..!!” என்று அவன் படபடவென சொல்ல,“ஓ..!!”அதிர்ச்சியில் ப்ரியாவுக்கு வாய் ‘ஓ’வென பிளந்து கொண்டது.
ஒரு கையால் அந்த வாயை மூடிக்கொண்டாள்.
விழிகளை அகலமாய் விரித்து, உறைந்து போனவளாய் அசோக்கையே பார்த்தாள்.
அவன் சொன்னதை இன்னும் நம்ப முடியாதவளாகவே சிலவினாடிகள் திகைப்பாய் பார்த்தாள்.
அப்புறம் சற்றே திணறலாக கேட்டாள்.
“அ..அப்போ நீ செண்பகத்தை லவ் பண்ணலையா..??”“ம்ஹூம்..!!’“ஐயோ.. என்னடா நீ..??? நீ அவளை லவ் பண்றேன்னு நெனச்சுல நான் எல்லாம் பண்ணிட்டேன்.. தேவை இல்லாம உன் மேல கோவத்தை காட்டிட்டேன்.. வேணுன்னே வெறுப்பை கொட்டிட்டேன்.. இந்த ஆக்சிடன்ட்க்கு கூட..”ஏதோ ஒரு அவசரத்தில் படபடவென பேசிவிட்ட ப்ரியா, பட்டென நாக்கை கடித்துக் கொண்டாள்.
உடனே அமைதியாகிப் போனாள்.
அவஸ்தையாய் அசோக்கின் முகத்தை ஏறிட்டாள்.
ஆனால் அவள் சொன்னதை கேட்டு அதிர்ச்சியுற்ற அசோக், அந்த வார்த்தைகளை பிடித்துக் கொண்டான்.
“ம்ம்.. சொல்லு ப்ரியா.. இந்த ஆக்சிடன்ட்கு கூட..??” அசோக் கூர்மையாக கேட்க, ப்ரியா இப்போது சுதாரித்துக் கொண்டாள்.
“அ..அசோக்.. ப்ளீஸ்.. நான் உனக்கு ஆரம்பத்துல இருந்து சொல்றேன்..!!”“இல்ல.. இதை மொதல்ல சொல்லு.. இந்த ஆக்சிடன்ட்கு கூட..?? என்ன பண்ணின..??”“அ..அசோக்.. ப்ளீஸ்..!!” ப்ரியா கெஞ்சினாள்.
“சொல்லுடி..!!” அசோக் கத்தினான்.
ப்ரியாவுக்கு வேறு வழி இருக்கவில்லை.
“அன்னைக்கு வேணுன்னேதான் அப்படி பண்ணினேன்.. அது ஒன்னும் க்ரிட்டிக்கல் இஷ்யூலாம் இல்ல.. பொய் சொல்லித்தான் உன்னை உடனே ஆபீஸ் கெளம்பி வர சொன்னேன்..!!”ப்ரியா சொல்ல சொல்லவே, அசோக்கின் மனதுக்குள் அவள் மீது ஒரு ஆத்திரம் குபுகுபுவென பொங்க ஆரம்பித்தது.
அவள் சொன்னதை நம்பி.. பைக்கை எடுத்துக்கொண்டு பறந்து.. லாரியை முந்தி செல்ல நினைத்து.. வேகத்தால் கட்டுப்பாட்டை இழந்து.. லாரி மீது மோதி.. ரோட்டோரமாய் தூக்கி வீசப்பட்டது.. அவனுடைய கண்முன் படமாக ஓடியது..!!“ஓ..!! நெனச்சேன்..!!” என்றான் வெறுப்புடன்.
“ப்ளீஸ்டா அசோக்.. நான் ஏன் அப்படிலாம் செஞ்சேன்னு புரிஞ்சுக்கோ.. எல்லாத்துக்கும் காரணம் இருக்கு..!!”“என்ன காரணம் இருக்கு..?? உனக்கு உடம்பு பூரா கொழுப்புன்றதை தவிர..??”“ஹையோ.. நான்..” ப்ரியா சொல்ல முடியாமல் தவித்தாள்.
“ம்ம்.. சொல்லு..!!”தன் காதலை எப்படி எப்படி எல்லாம் அசோக்கிடம் சொல்லவேண்டும் என்று ப்ரியா எத்தனையோ நாள் கனவு கண்டிருக்கிறாள்.
எந்தெந்த வார்த்தைகள் எல்லாம் உபயோகித்து அலங்காரத்துடன் சொல்லவேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறாள்.
ஆனால்.. அந்த வார்த்தைகள் எல்லாம் இப்போது அவளுக்கு கைகொடுக்காமல் போக,“நா..நான் உன்னை லவ் பண்றன்டா..!!” என்றாள் அலங்காரமற்ற வார்த்தைகளால்.. சற்றே பரிதாபமாக..!!அசோக்கும் எத்தனையோ நாள் ப்ரியாவின் வாயிலிருந்து இந்த வார்த்தைகளை கேட்க ஏங்கியிருக்கிறான்.
அவள் தன் காதலை சொல்லும்போது, தன் மனம் எப்படி எல்லாம் பூரித்துப் போகும் என்று கற்பனை வளர்த்திருக்கிறான்.
ஆனால்.. அந்த நேரத்தில் ப்ரியாவின் மீது அவனுக்கிருந்த அளவற்ற ஆத்திரம்.. அவள் காதல் சொன்ன மகிழ்ச்சியை மங்கிப் போக செய்திருந்தது..!! சீறினான்..!!“ஓ..!! லவ் பண்ணினா என்ன வேணா பண்ணுவியா..?? ஏதோ நல்ல நேரம்.. கையோட போச்சு..!! உசுரு போயிருந்தா..??”“எனக்கு புரியுதுடா.. நான் செஞ்சது தப்புதான்..!! என்னை மன்னிச்சுடு.. ப்ளீஸ்..!!” பரிதாபமாக சொன்னவாறு ப்ரியா அசோக்கின் கையை பற்றினாள்.
அவன் வெடுக்கென அவளுடைய கையை உதறினான்.
“ச்சீ.. கையை விடு..!! என் கண் முன்னாடியே நிக்காத.. போயிடு..!!”“ப்ளீஸ் அசோக்.. நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளு..!!”“என்ன சொல்லப் போற..??”“நான் உன் மேல உயிரையே வச்சிருக்கேன்டா..!! ஆறு வருஷத்துல இந்த லவ் எப்போ ஆரம்பிச்சதுன்னு கூட எனக்கு தெரியல.. கொஞ்சம் கொஞ்சமா உள்ள வந்து.. இப்போ என் மனசு பூரா நீதான் இருக்குற..!! நீ எனக்கு சொந்தமானவன்னு நான் முடிவே பண்ணிட்டேன் அசோக்.. அதான் செண்பகம் நமக்குள்ள வந்ததை என்னால தாங்கிக்க முடியல..!! அவ மேல பொறாமை.. பொசசிவ்னஸ்..!! அதான் இப்படிலாம் நடந்துக்கிட்டேன்.. எல்லாத்துக்குமே உன் மேல இருந்த லவ்தாண்டா காரணம்..!!” ப்ரியா இரக்கமாக சொல்ல,“பொய்..!! எல்லாத்துக்கும் உன்னோட ஈகோதான் காரணம்.. நான் நெனச்சா என்ன வேணா பண்ணுவேன்ற உன் திமிர்தான் காரணம்..!! பண்றதெல்லாம் பண்ணிட்டு.. இப்போ லவ் மேல பழியை போடுறியா..?? இதுல என்னை ஈகோ புடிச்சவன்னு கிண்டல் பண்றது..?? என் ஈகோலாம் சும்மா வெளையாட்டுத்தனமாதான் இருக்கும்.. இப்படி கையை முறிச்சு ஹாஸ்பிட்டல் அனுப்பாது..!! இன்னைக்கு நீ டெக்லீடா இருக்குறேன்னா அதுக்கு காரணம் நான்.. ஆனா நீ.. அந்த அதிகாரத்தை வச்சுக்கிட்டு.. என் உசுருக்கே உலை வச்சிட்ட.. இல்ல..??” அசோக் சூடாக கேட்டான்.
“இல்லடா.. சத்தியமா இல்ல.. நான் அப்படிலாம் நெனைக்கவே இல்ல..!!”“நடிக்காத..!! ‘உன்னை டீமே விட்டே தூக்குறேன் பாரு’ன்னு வெரல் சொடுக்கி சவால் விட்டவதான நீ..?? ‘எனக்கும் நேரம் வரும்.. அப்பா நான் யாருன்னு காட்டுறேன்’னு சொன்னவதான நீ..?? இன்னும் கொஞ்சம்னா இந்த உலகத்தை விட்டே தூக்கிருப்ப..!!”“ஹையோ.. உனக்கு புரியலை.. அது வேற.. இது வேற..!!”“என்ன வேற வேற..?? எனக்கு எல்லாம் ஒண்ணாத்தான் தெரியுது..!!”“இப்படி புரிஞ்சுக்கவே மாட்டேன்னு அடம் புடிச்சா நான் என்ன பண்ணட்டும்..?? நான் பண்ணினது தப்புதான்னு நான் ஒத்துக்கிட்டேன்.. நான் செஞ்ச தப்பை திருத்திக்க எனக்கு ஒரு சான்ஸ் குடுக்க மாட்டியா..?? என்னை கொஞ்சம் பேச விடு.. ப்ளீஸ்..!!!” ப்ரியா அந்த மாதிரி அழுகுரலில் கேட்கவும், அசோக் இப்போது சற்றே ஆத்திரம் தணிந்தான்.
“சொல்லு..!!”“நான் உனக்கு ஒரு ப்ராமிஸ் பண்ணி தர்றேன்.. ஓகேவா..??”“என்ன..??”“உனக்கு ஆக்சிடன்ட் ஆனது தெரிஞ்சதுமே.. என் ஈகோ செத்துப் போச்சு அசோக்..!! இனிமே சத்தியமா அந்தமாதிரி நடந்துக்க மாட்டேன்.. எந்த வகையிலையும் உன் மேல வெறுப்பு காட்ட மாட்டேன்.. ஆபீசுக்கு உள்ளேயும் சரி.. ஆபீசுக்கு வெளிலயும் சரி.. சத்தியமா உனக்கு இனி எந்த கஷ்டமும் கொடுக்க மாட்டேன்டா..!! இட்ஸ் எ ப்ராமிஸ்.. என்னை நம்பு.. ப்ளீஸ்..!!”ப்ரியா அசோக்கின் தலை மீது கைவைத்து உறுதியான குரலில் சொன்னாள்.
அவள் சொன்னதைக்கேட்டு அசோக் எந்த உணர்ச்சியும் காட்டாமல் நின்றிருந்தான்.
இப்போது ப்ரியா அசோக்கின் தலை மீது இருந்த கையை மெல்ல கீழிறக்கி, அவனுடைய நெற்றியை மென்மையாக வருடினாள்.
கலைந்திருந்த அவனது தலை முடியை காதோரத்திற்கு ஒதுக்கிவிட்டாள்.
பிறகு அவனது கன்னத்தை கனிவாக தாங்கிப்பிடித்தவாறு, பரிதாபமான குரலில் சொன்னாள்.
“நீ எனக்கு வேணுண்டா அசோக்..!! நீ என்னை லவ் பண்ணாட்டாலும்.. என் லைஃப் லாங் நீ எனக்கு வேணும்.. ஒரு ஃப்ரண்டா..!! நான் என்னை மாத்திக்கிட்டேண்டா.. நான் இதுவரை செஞ்சதுக்காக என்னை நீ வெறுத்து ஒதுக்கிடாத ப்ளீஸ்.. என்னால அதை தாங்கிக்க முடியாது.. நீ எனக்கு எப்போவும் வேணும்..!!”ப்ரியாவின் கெஞ்சலில் அசோக் சற்றே நெகிழ்ந்து போனான்.
அன்று ஸ்குவாஷ் கோர்ட்டில் அவளிடம் அடிபட்டுவிட்டு, அப்புறம் அவள் ஒத்தடம் தந்தபோது.. அவனுக்கு எந்த மாதிரி ஒரு உணர்வு இருந்ததோ.. அதே மாதிரியான ஒரு உணர்வு இப்போது மெகா சைஸில் அவன் மனதை நிறைத்திருந்தது..!! ‘இவளிடம் ஒத்தடம் பெறுவது இதமாகத்தான் இருக்கிறது.. ஆனால் ஒத்தடத்துக்கு முன் இவள் அடித்த அடியின் வலி.. அதை விட அதிகமாக இருக்கிறதே..??’“சரி விடு.. இதை இத்தோட விட்ரலாம்..!!” Pundai Tamil Kamaveri– தொடரும்
ஆதாரம்:இணையம்