. Sex Stories In Tamil – மறுநாள் காலை பக்ருவுடன் கருப்புபாண்டியை கப்பலிற்குத் தேவையான பொருட்கள் வாங்க அனுப்பி விட்டு நானும் மாறதேவனும் தீவின் கிழக்கு நோக்கிச் செல்ல ஆரம்பித்தோம்.
என் நோக்கம் மாறதேவனுக்கு புரிந்திருக்க வேண்டும்.
” நண்பா அவர்களிடம் நம் கப்பலை பழுதுபார்க்க மரங்களை வாங்கச்செல்வதாகத்தானே கூறினாய்….. ஆனால் தற்போது நீ செல்வதைப் பார்த்தால் இளவரசியைப் பார்க்கச் செல்வது போலல்லவா இருக்கிறது….
உண்மையைச் சொல் ” என்று கேட்டான்.
” உண்மைதான், முதலிலேயே இளவரசியைப் பார்க்கப் போகிறேன் என்று கூறியிருந்தால் நீங்கள் எல்லோரும் சேர்ந்து என்னைத் தடுத்திருப்பீர்கள், அதனால்தான் உண்மையை மறைத்தேன் ” என்றேன்.
” ஆனால் கழுகுத்தேவா இதனால் பல வீண் பிரச்சனைகள் ஏற்படும் ” என்று எச்சரித்தான் மாறதேவன்.
” இந்த உருவிலேயே சென்றால்தான் பிரச்சனைகள் ஏற்படும், மாறு வேடத்தில் சென்று சந்தித்தால் எந்த்ப் பிரச்சனைகளும் நேராது ” என்று கூறினேன்.
அதனால் இருவரும் பெண்கள் போல மாறு வேடம் போட்டுக் கொண்டு முகத்தை துணியால் மறைத்துக் கொண்டு தொடர்ந்து சென்றோம்.
சில காத தூரம் சென்றதும் ஒரு குடிசை மட்டும் காட்டுப் பகுதியை அண்மித்து இருப்பதைக் கண்டோம்.
அக் குடிசையின் வெளியே 10,15 கொள்ளையர்கள் மது அருந்திக் கொண்டும், போதையில் பாடிக்கொண்டும் இருந்தனர்.
அக் குடிசையில்தான் இளவரசி சிறை வைக்கப் பட்டிருக்கிறாள் எனபது தெளிவாகப் புரிந்தது.
மெதுவாகச் சென்று குடிசையின் வெளி வாசலை அடைந்தோம்.
எங்களைக் கண்ட ஒரு கொள்ளையன் ” ஏய் யார் நீங்கள், இங்கு எதற்காக வந்தீர்கள் ” என்று அதட்டினான்.
குரலை மாற்றி பேசக் கூடிய மாறதேவன் ” இளவரசிக்கு பழங்கள் கொண்டுவந்தோம் ” என்று பெண் குரலில் பேசி பழங்களைக் காட்டினான்.
” சரி சரி பழங்களை சீக்கிரம் கொடுத்து விட்டு போய்விடுங்கள் ” என்று சொன்னான் அந்தத் தடியன்.
நாங்கள் குடிசையில் நுழையும் போது அந்தக் கொள்ளையர் கூட்டத்தில் இருந்த ஒருவன் ” வர வர பெண்கள் கூட ஆண்களைப் போல கட்டுமஸ்தானவர்கள் ஆகி விட்டார்கள் ” என்று கூறினான்.
அதை அடுத்து அந்தக் கூட்டத்தில் இருந்து சிரிப்பொலி பலமாகக் கிளம்பியது.
இதையெல்லாம் சட்டை செய்யாமல் குடிசையின் உள்ளே சென்றோம்.
அங்கு ஒரு பெண் சமையல் வேலைகளில் மும்முரமாக இருந்தாள்.
ஆனால் அவளிடம் அரச குமாரி ஒருத்திக்கு இருக்க வேண்டிய இலட்சணங்கள் எதுவும் இல்லாததால் அவள் அரச குமாரி அல்ல என்ற முடிவுக்கு வந்தோம்.
அப்போது எங்கள் இருவரையும் கண்ட அவள் நீங்கள் யார் என்று கேட்டாள்.
” நாங்கள் கலிங்கர்கள், உங்களைக் காப்பாற்ற இங்கு வந்தோம் ” என்று கூறி எங்கள் வேடத்தைக் கலைத்தோம்.
எங்களைக் கண்டு அவள் அதிர்ச்சி அடைந்தாலும் காப்பாற்ற வந்தவர்கள் என்பதால் கூச்சல் எதுவும் போடாமல் இருந்தாள்.
பின்னர் குடிசையின் பின் புறம் அழைத்துச் சென்றாள்.
அங்கு எங்களை நிற்கச் சொல்லிவிட்டு சென்று இளவரசியை அழைத்து வந்தாள்.
இளவரசியைக் கண்டதுமே என் சித்தத்தைப் பறி கொடுத்தேன்.
மான் போன்ற விழிகள், தாமரை போன்ற செவ்விய உதடுகள், சற்றே பெருத்த முலைகள், கொடி போன்ற இடை, கீழே சற்று அகலமாக அவள் கால்கள், முலைகளின் மேல் கொடி போல இருந்த கருங் கூந்தல் என தேவலோக கன்னிகை போல இருந்தாள்.
அவளை நான் மேலிருந்து கீழாக ரசிப்பதைக் கண்டு என் கவனத்தை திசை திருப்ப ” யார் நீங்கள் ” என்று கேட்டாள்.
மெல்ல அவள் அருகில் சென்று அவள் கண்களோடு என் கண்களை உறவாட விட்டு பேச ஆரம்பித்தேன்.
” நாங்கள் கலிங்கர்கள், நீங்கள் இங்கு சிறைபட்டு இருப்பதை அறிந்து உங்களை மீட்க வந்தோம் ” என்று கூறினேன்.
அவளிடம் இருந்து பதில் ஏதும் இல்லை.
ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே சிறிது நேரம் நின்றோம்.
என் அருகில் வந்த மாறதேவன் என் தோள்களைப் பிடித்து உலுக்கிய பின்னர்தான் சுய உணர்வை அடைந்தேன்.
மாற்றான் ஆன என் கண்களோடு உறவாடியதை நினைத்து அவள் கன்னங்கள் சிறிது சிவந்தன.
பின் என்னைப் பார்க்காமல் வேறு பக்கம் பார்த்தவாறு ” வீரரே அது அத்தனை சுலபம் இல்லை.
உங்களைப் போல் முன்னரும் சில வீரர்கள் வந்தனர் ஆனால் துஸ்லாவின் வாளிற்கு இரையாகிப் போனார்கள் ” என்று சொன்னாள்.
” ஆனால் நாங்கள் அவர்களைப் போலல்ல, விரைவில் உங்களைக் காப்பாற்றுவோம் ” என்று சொன்னான் மாறதேவன்.
” மகிழ்ச்சி, ஆனால் 7 நாட்களுக்குள் நீங்கள் எங்களைக் காப்பாற்ற வேண்டும் இல்லையேல் அனைத்தும் முடிவடைந்து விடும், இந்த 7 நாட்களுக்குள் இளவரசி அந்த முரடனை திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஒப்புக் கொள்ளாவிடின் 8 வது நாள் இவரை ருசித்து விட்டு பழங்குடிகளுக்கு நரபலியாகக் கொடுத்து விடுவேன் என்று மிரட்டி விட்டுச் சென்றிருக்கிறான் துஸ்லா ” என்று குரலில் பயம் தொனிக்கக் கூறினாள் இளவரசியின் தோழி.
” கவலைப்பட வேண்டாம்.
நாளை காலை இதற்கு ஒரு தீர்வோடு உங்களைச் சந்திக்கிறோம் ” என்று கூறிவிட்டு மீண்டும் மாறு வேடத்தில் அங்கிருந்து புறப்பட்டோம்.
பக்ருவின் மாளிகையை நெருங்கியதும் மாறு வேடத்தைக் கலைத்து விட்டுச் சென்றோம்.
பக்ருவின் வீட்டில் தோத்தா கிழவனும் கருப்புபாண்டியும் எங்களுக்காக காத்திருந்தனர்.
அவர்களிடம் நடந்தவற்றைக் கூறினேன்.
முதலில் அதைக் கேட்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தாலும் பின்னர் எனக்கு உதவுவதாக வாக்களித்தனர்.
பின்னர் பக்ரு வந்தான்.
அவனிடமும் நடந்ததைக் கூறினேன்.
” உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை ” என்று கேட்டான்.
என் மனதை அவளிடம் பறி கொடுத்ததையும், அவர்களைக் காப்பாற்றுகிறேன் என்று வாக்குக் கொடுத்ததையும் சொன்னேன்.
ஒரு வழியாக அவனும் எனக்கு உதவி செய்வதாகக் கூறினான்.
அவர்களைக் காப்பாற்றுவதற்கான யோசனையில் இறங்கினோம்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு திட்டங்களைச் சொன்னார்கள்.
நீண்ட யோசனையின் பின்னர் நான் ஒரு திட்டத்தைக் கூற ஆரம்பித்தேன்.
துஸ்லா உயிரோடு இருக்கும் போது நான் அவளைக் காப்பாற்ற முயற்சி செய்தால், அதனால் பல வீண் பிரச்சனைகள் ஏற்படும்.
அதனால் துஸ்லா இறப்பதைத் தவிர வேறு வழியில்லை.
அதிலும் துஸ்லாவை நாம் கொலை செய்தால் பசல்கரும் துஸ்லாவின் வீரர்களும் சும்மா விடமாட்டார்கள்.
அதனால் இன்று இரவு துஸ்லாவிற்கு எம் வீரன் ஒருவனை அனுப்பி நன்றாக மதுவை குடிக்க செய்வோம்.
பின் துஸ்லா முழு போதையில் இருக்கும் போது அவனை பழங்குடிகளின் இருப்பிடத்திற்கு அருகில் விட்டு விடுவோம்.
மீதியைப் பழங்குடிகள் பார்த்துக் கொள்வார்கள்.
துஸ்லாவின் மரணத்திற்குப் பின் பசல்காரிடம் சென்று வைஷ்ணவி என் காதலி என்பேன்.
அவன் வைஷ்ணவியிடம் கேட்பான் அவளும் ஆம் என்பாள், அவளும் ஒத்துக் கொண்ட பின் பசல்கர் பிரச்சனை ஏதும் செய்யாமல் இளவரசியை என்னோடு அனுப்பி வைப்பான்.
காரணம் கொஞ்சம் நீதி தெரிந்தவன் பசல்கர்.
ஒரு வேளை துஸ்லாவின் வீரர்கள் என்னை எதிர்த்தால் நாம் எதுவும் செய்ய வேண்டியதில்லை, பசல்காரே பார்த்துக் கொள்ளுவான்.
இது தான் என் திட்டம்.
இதன்படி அனைத்தும் நடந்தால் எல்லாம் வெற்றிதான் என்றேன்.
என் திட்டத்தை அனைவரும் ஆமோதித்தார்கள்.
Koothi Nondum Sex Stories In Tamil– தொடரும்NEXT PART.
ஆதாரம்:இணையம்