இருண்ட

கண்ணாமூச்சி ரே ரே 9

🇮🇳 தமிழ்
வேகம்: 1.0x
நிலை: தயார்
×

இயக்க அமைப்பு உதவி

நீங்கள் ஏற்கனவே Chrome/Edge ஐப் பயன்படுத்தினாலும், இன்னும் இயக்க முடியவில்லை என்றால், உங்கள் தொலைபேசி/PC அமைப்புகளைச் சரிபார்க்கவும்.
நீங்கள் கேட்க விரும்பும் மொழியைப் பயன்படுத்தி, TTS இன்ஜின் செயலில் இருப்பதை உறுதி செய்யவும்.

Android மற்றும் பிற OS பயனர்களுக்கு

Android, Harmony, Lineage, Ubuntu Touch, Sailfish, ColorOS / FuntouchOS, hyperOS போன்ற பயனர்களுக்கு
மெனு அணுகல்: அமைப்புகளைத் திற > அணுகல்தன்மை > உரையிலிருந்து பேச்சு வெளியீடு.
அது இல்லை என்றால், அமைப்புகள் > மேலே உள்ள தேடல் பெட்டி > "text-to-speech" அல்லது "text" என உள்ளிடவும்
பிறகு உரையிலிருந்து பேச்சு அல்லது அதை ஒத்த ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
மொழியைச் சேர்க்க, கியர் ஐகானைக் கிளிக் செய்யவும் ⚙ > குரல் தரவை நிறுவு உங்களுக்குத் தேவையான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.

iOS பயனர்களுக்கு

அமைப்புகள் > அணுகல்தன்மை > பேசப்படும் உள்ளடக்கம் என்பதற்குச் செல்லவும்
அல்லது அமைப்புகள் > மேலே உள்ள தேடல் பெட்டி > "பேசப்படும் உள்ளடக்கம்" என உள்ளிட்டு என்டர் செய்யவும்
மொழியைச் சேர்க்க குரல்கள் என்பதைத் தேர்ந்தெடுத்து குரலைத் தேர்ந்தெடுக்கவும்

PC MacOS பயனர்களுக்கு

மெனு அணுகல்: Apple மெனுவைக் கிளிக் செய்யவும் () > கணினி அமைப்புகள் > அணுகல்தன்மை > பேசப்படும் உள்ளடக்கம்.

Windows பயனர்களுக்கு

Windows 10 & 11
மெனு அணுகல்: தொடக்கத்தைத் திற > அமைப்புகள் > நேரம் & மொழி > பேச்சு.
Windows 7 & 8
கட்டுப்பாட்டு பலகம் > அணுகல் எளிமை > பேச்சு அங்கீகாரம் > உரையிலிருந்து பேச்சு
Windows XP
தொடக்கம் > கட்டுப்பாட்டு பலகம் > ஒலிகள், பேச்சு மற்றும் ஆடியோ சாதனங்கள் > பேச்சு
Windows 2000 & ME
தொடக்கம் > அமைப்புகள் > கட்டுப்பாட்டு பலகம் > பேச்சு
Linux, ChromeOS, FreeBSD போன்ற பிற வகை PC பயனர்களுக்கு.
Google, Bing போன்ற தேடுபொறிகளில் உரையிலிருந்து பேச்சு வசதியை இயக்குவதற்கான அமைப்புகளைத் தேடவும்

குறிப்பு தற்போது, இந்தப் பக்கம் உங்கள் சாதனத்தின் இன்ஜினுக்கு ஏற்ப செயல்படுகிறது.
எனவே உருவாக்கப்படும் ஒலி உங்கள் சாதனத்தின் TTS இன்ஜினைப் பின்பற்றுகிறது.

கண்ணாமூச்சி ரே ரே 9

. Sex Stories In Tamil – அவளது மனநிலையை உடனடியாய் புரிந்து கொண்ட சிபி.. தனது கையை அவளிடம் இருந்து விலக்கிக்கொண்டான்..!!“பார்த்து வா ஆதிரா..!!”என்று புன்னகையுடன் சொல்லிவிட்டு முன்னால் நடந்தான்..!! கணவன் நடந்து செல்வதையே ஆதிரா ஒரு காதல் பார்வை பார்த்தாள்.. கழுத்தில் தொங்கிய தாலியை ஒருமுறை பெருமிதமாக பார்த்துக் கொண்டாள்.. கால் தந்த வேதனையை உதடுகடித்து பொறுத்தவாறே வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தாள்..!!யாருடைய வாழ்விலுமே திருமணம் என்பது ஒரு முக்கியமான நிகழ்வு.. அந்த நிகழ்வே ஆதிராவின் நினைவில் இருந்து தொலைந்து போயிருந்தது..!! அம்னீஷியாவால் பாதிக்கப்பட்டவளிடம் அவளுக்கு திருமணமாகிவிட்ட செய்தியை பூவள்ளி உரைத்தபோது.. அதிர்ந்துதான் போனாள் முதலில்..!! நம்பிக்கை அற்றவளாய் மாங்கல்யத்தையே மலங்க மலங்க பார்த்தாள்..!! ஆனால்.. அது அவளுக்கு ஒருவித இன்ப அதிர்வாகத்தான் இருந்தது.. சிறு வயதில் இருந்தே சிபி மீது அவளுக்கு இருந்த காதல்தான் அதன் காரணம்..!!“பெரியவளாகி என்ன பண்ணப் போற..??” வீட்டுக்கு வரும் உறவினர்களின் கேள்விக்கு,“ஐ.
ஏ.
எஸ் படிச்சு கலக்டர் ஆகப் போறேன்..!!” என்று குட்டி தாமிரா பதில் சொன்னால்,“அத்தானை கட்டிக்கிட்டு பொண்டாட்டியாகப் போறேன்..!!” என்பாள் எட்டு வயது ஆதிரா.
தாய்தந்தையரை இழந்து தாய்மாமாவின் வீட்டில் தஞ்சம் புகுந்திருந்த சமயத்தில்.. தாரை தாரையாய் கண்ணீர் வடித்துக்கொண்டே இருப்பான் சிறுவன் சிபி..!! அந்நிய உணர்வோடு அனைவரையும் மிரட்சியாக பார்ப்பான்.. ஆறுதலாய் அவனுடைய கண்ணீர் துடைக்க நீளும் ஆதிராவின் கரங்கள்..!!“அழாதீங்க அத்தான்.. உங்களுக்குத்தான் நாங்கல்லாம் இருக்கோம்ல..??”அப்போதிருந்தே அவன் மீது ஒரு பரிவு கலந்த பாசம்.. பள்ளியில் அவன் முதல் மாணவனாக திகழ, அவன் மீது ஒரு மதிப்பு..!! தாமிராவை அவர்களுடன் சேர்த்து கொண்டு.. மூவரும் ஒருவர் கையை அடுத்தவர் பற்றி வளையம் அமைத்துக்கொண்டு.. ஆகாயத்தை அண்ணாந்து பார்த்து..“கிறுகிறு மாம்பழம்.. கிய்யா கிய்யா மாம்பழம்..!! கிறுகிறு மாம்பழம்.. கிய்யா கிய்யா மாம்பழம்..!!”என்று திரும்ப திரும்ப பாடியவாறே கிறுகிறுவென சுழலுவார்கள்..!! தலை சுற்றலை தாக்கு பிடிக்கமுடியாமல் தரையில் சரிந்து.. மல்லிகைச் சிதறலாய் மூவரும் வெள்ளைச் சிரிப்பை சிந்துவார்கள்..!! ஆதிராவுக்கு அப்போது சிபி மீது ஒரு சினேக உணர்வு பிறக்கும்..!!அவனது பெண்மைத்தனமான வட்ட முகத்தில்.. அரும்பு மீசை வளர ஆரம்பித்த சமயத்தில்.. அவனிடம் மிளிர்ந்திட்ட அந்த வசீகரம்.. ஆதிராவின் மனதை சொக்கிப்போக வைக்கும்..!! பட்டப் படிப்புக்கென சிபி வெளியூர் பயணிக்கையில்.. அவனுக்கு அருகிலேயே இருந்திட முடியாதா என்பது போல.. இவளுக்குள் ஒரு ஏக்க உணர்வு எழும்..!! பரீட்சை விடுமுறைக்கென அவன் அகழி திரும்பியிருக்கையில்.. அவனுக்கு அருகிருக்க இவளுக்கு வாய்ப்பிருந்தும்.. இயல்பாக நடந்திட முடியாத மாதிரியாய் ஒருவித வெட்க உணர்வு..!!இப்படி எல்லாவித உணர்வுகளும் அவளுக்குள் கொஞ்சம் கொஞ்சமாய் சேர்ந்து.. அவள் வளர வளர, அந்த உணர்வுகளும் அவளுடனே வளர்ந்து.. அவள் பருவம் எய்திய காலத்தில் ஒரு அசுர உருவம் கொண்டு அவளுக்குள் நின்றது.. அந்த உருவத்திற்கு காதல் என்றே நாம் பெயரிட வேண்டும்..!! சிபியிடம் இதுவரை வெளிப்படையாக சொல்லாவிடிலும்.. சிறுவயதில் இருந்தே அவன் மீதான காதலை அவள் வளர்த்து வந்தது என்னவோ நிஜமான நிஜம்..!!அந்த காதலால்தான்.. நினைவில் இல்லையென்றாலும், அவனுடனான திருமணத்தை அவளால் இனியதொரு அதிர்வாக எடுத்துக் கொள்ள முடிந்தது..!! அதே காதலால்தான்.. மருத்துவமனையில் இருந்து திரும்பிய அன்றைய இரவில்.. இருவரும் ஒருபடுக்கையை பகிர்ந்துகொள்ள நேர்ந்த சமயத்தில்.. தயக்கத்துடன் அவன் முதலில் இவளது கை பற்றிக் கொள்ள.. தானாகவே இவள் பிறகு அவனது மார்பில் தலை சாய்த்துக் கொண்டாள்..!!ஆனால்.. தனக்கு திருமணம் நடந்த விஷயத்தை போல.. தங்கையின் விஷயத்தை அவ்வளவு எளிதாக ஆதிராவால் எடுத்துக்கொள்ள முடியவில்லை..!! காலில் தைத்த முள், நடக்க நடக்க இன்னும் ஆழமாக உள்ளிறங்குமே.. அதேமாதிரி.. அந்த விஷயம் நாளாக நாளாக அவளுடைய புத்தியில் ஆழமாக ஆணி திருகிக் கொண்டிருந்தது..!!“தா..தாமிராக்கு என்னம்மா ஆச்சு.. சொல்லும்மா..!!” தவிப்புடன் தாயிடம் கேட்டாள் ஆதிரா.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த சமயத்தில்..!!“எ..என்னாச்சுன்னு தெரியலடா.. காணாம போயிட்டா..!! எங்க போனான்னே தெரியாம.. மாயமா மறைஞ்சு போயிட்டா..!!”“என்னம்மா சொல்ற நீ..?? எ..எப்படி.. எப்படி திடீர்னு காணாம போவா..??”ஆதிராவின் கேள்விக்கு பூவள்ளியால் உடனடியாக பதில் சொல்ல முடியவில்லை.. ஆதங்கத்துடன் இவளையே ஒரு பார்வை பார்த்தாள்.. அப்படியே கண்களை சுருக்கி நெற்றியை பிசைந்தாள்.. உள்ளத்தில் எழுந்த துக்கத்தை உதடுகள் கடித்து அடக்க முயன்றாள்.. அதையும் மீறி அவளுடைய கண்களில் கண்ணீர் தளும்பியது..!!“சொல்லும்மா.. என்ன நடந்துச்சுன்னு சொன்னாத்தான எனக்கும் தெரியும்..??” ஆதிரா பொறுமையில்லாமல் கேட்க,“குறிஞ்சி அவளை கொண்டு போய்ட்டாடி.. போதுமா..??” பூவள்ளி வெடுக்கென்று சொன்னாள்.
குறிஞ்சி என்ற பெயரை கேட்டதுமே ஆதிராவின் முகத்தில் குப்பென்று ஒரு திகைப்பு.. அம்மாவின் முகத்தையே மிரட்சியான விழிகளுடன் பார்த்தாள்.. குரல் தெளிவில்லாமல் குழறலாக கேட்டாள்..!!“கு..குறிஞ்சியா..????”“ஆமாம்..!! நம்ம வனக்கொடியே கண்ணால பாத்திருக்கா.. அவதான் உன் தங்கச்சியை கடைசியா பாத்தவ..!! அங்க தொட்டு இங்க தொட்டு.. கடைசில நம்ம தாமிராவையும்..!!”கண்களில் வழிந்த நீரை துடைத்துக்கொண்டே சொன்னாள் பூவள்ளி..!! வனக்கொடி என்பது, அகழியில் அவர்களுடைய வீட்டில் பணிபுரியும் ஐம்பது வயது பணிப்பெண்.. சிபி, ஆதிரா, தாமிரா என மூவரையும் சிறு வயதில் இருந்தே கவனித்துக் கொண்டவள்..!!“அம்மா..!!”“சொல்லுடா..!!“எ..என்ன நடந்துச்சுன்னு எனக்கு கொஞ்சம் தெளிவா சொல்லேன்.. ப்ளீஸ்..!! வனக்கொடி என்ன பாத்தாங்க..??”ஆதிரா அவ்வாறு கேட்கவும், பூவள்ளி நீளமாக ஒரு பெருமூச்சை சிந்தினாள்.. சில வினாடிகள் அமைதியாக இருந்தாள்.. பிறகு தொண்டையை ஒருமுறை செருமிக்கொண்டு மெல்ல பேச ஆரம்பித்தாள்..!! அவள் பேச பேச.. ஆதிரா முகத்தில் பலவித உணர்ச்சிகளுடன்.. அவற்றையெல்லாம் கவனமாக கேட்டுக் கொண்டாள்..!!பூவள்ளி பேசி ஓய்ந்த பிறகும்.. அவள் சொல்ல நினைத்ததெல்லாம் சொல்லி முடித்த பிறகும்.. ஆதிராவின் மனம் அவள் சொன்ன விஷயங்களையே நெடுநேரம் அசை போட்டுக் கொண்டிருந்தது..!! நம்புவதற்கே கடினமான ஒரு சில விஷயங்கள்.. நானும் இதைத்தான் இத்தனை நாளாய் நம்பியிருந்தேனா என்று அவளுக்குள் ஒரு கேள்வி வேறு..!! எந்த ஒரு முடிவுக்கும் தெளிவாக அவளால் வர இயலவில்லை..!!“வனக்கொடி சொன்னதை கேட்டுட்டு நாம சும்மா இருந்துட்டோமா.. தாமிராவை தேடி கண்டுபிடிக்க எதுவும் பண்ணலயா..??”“என்ன பண்ணிருக்கனும்னு சொல்ற..??”“போலீஸ்ல..??”“எல்லாத்தையும் மறந்துட்டியா நீ..?? போலீஸ்லயும்தான் கம்ப்ளயின்ட் பண்ணினோம் ஆதிரா..!! அவங்களாலயும் எதும் செய்ய முடியல.. வனக்கொடியை துருவி துருவி கேள்வி கேட்டதோட சரி..!!”அதற்கு மேலும் அம்மாவை துருவி துருவி கேட்க ஆதிராவுக்கு இஷ்டம் இல்லை.. அமைதியாக ‘ம்ம்’ கொட்டினாள்..!!“ம்ம்..!!”“ஏதோ நம்ம கெட்ட நேரம்.. தாமிராவை இழந்துட்டோம்.. அங்கயே இருந்து உன்னையும் இழந்துடுவோமோன்னு எங்களுக்கு பயம் வந்துடுச்சு.. அதான்டா எல்லாரும் சிபியோட கெளம்பி மைசூர் வந்துட்டோம்..!!”“ம்ம்..!!”மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பிறகும்.. சில நாட்கள்.. ஆதிராவுக்கு புத்தி குழப்பமாகவும், மன அழுத்தமாகவுமே கழிந்தன..!! ஒருவருடமாக வாழ்ந்த வீட்டின் ஒவ்வொரு மூலையையும்.. புதிதாக பார்ப்பது போலவே மிரட்சியுடன் பார்த்தாள்..!! வீட்டில் அவளுடைய பொருட்களை வைத்திருந்த இடமெல்லாம் மறந்து போயிருந்தன.. விரலில் முளைத்திருந்த சிபி அளித்த மோதிரம் வித்தியாசமாக காட்சியளித்தது..!! பேஸ்ட், ப்ரஷ், சோப்பு, உள்ளாடைகள் முதற்கொண்டு.. எதை தேடிக் கண்டுபிடிப்பதானாலும் அம்மாவின் துணை தேவைப்பட்டது..!!“மதியம் வந்துடுவேன்.. எதாவதுனா கால் பண்ணு..!!”வேலை விஷயமாக வெளியில் கிளம்பியிருந்த சிபி.. ஆதிராவின் கையில் ஒரு செல்ஃபோனை திணிக்க.. அவள் அந்த செல்ஃபோனை இப்படியும் அப்படியுமாய் புரட்டி புரட்டி பார்த்தவாறே.. கணவனிடம் குழப்பமாக கேட்டாள்..!!“யா..யாரோட ஃபோன் இது..??”“உன்னோடதுதான்டா..!!”“நா..நான்.. நான் நோக்கியால வச்சிருந்தேன்.. இது..??”“ஓ.. அதுவும் மறந்து போச்சா..?? அந்த ஓல்ட் மாடல் நோக்கியாவை ஒரு வருஷம் முன்னாடியே நீ தொலைச்சுட்ட.. மைசூர் வந்ததுல இருந்து இந்த மொபைல்தான் யூஸ் பண்ணிட்டு இருக்குற..!! இது லேட்டஸ்ட் ஸ்மார்ட்ஃபோன்.. டச் ஸ்க்ரீன்..!!”“ம்ம்..!! இதென்ன இவ்ளோ பெருசா இருக்கு.. இதை எப்படி அன்லாக் பண்றது..??”பரிதாபமாக கேட்ட மனைவியை பார்க்க.. சிபிக்கு சிரிப்பதா அழுவதா என்று புரியவில்லை..!! வெளியில் செல்ல தயாராக இருந்தவன்.. அப்படியே ஆதிராவின் அருகில் அமர்ந்து.. மேலும் ஐந்து நிமிடங்கள் செலவழித்து.. அந்த செல்ஃபோனை இயக்கும் முறை பற்றி அவளுக்கு விளக்கி முடித்தே கிளம்பினான்..!!இந்த மாதிரியான மறதி குழப்பம் ஒருபுறம் இருக்க.. வேறு மாதிரியான மன அழுத்தம் இன்னொரு புறம்..!! அகழி பற்றியும் அவளுடைய தங்கை பற்றியுமான நினைவுகளே அந்த மாதிரியான அழுத்தத்துக்கு காரணம்..!! எவ்வளவு நேரந்தான் மாத்திரையின் வீரியத்தில் மயங்கி கிடப்பது..?? விழித்திருக்கையில் எல்லாம் பலவித சிந்தனைகளுடன்.. அவளுடைய மனம் ஒருவித அழுத்தத்திலேயே தத்தளித்தது..!!மர்மமான முறையில் மனிதர்கள் காணாமல் போவது.. அகழிக்கும் புதிதல்ல.. ஆதிராவுக்கும் புதிதல்ல..!! நூறு வருடங்களாகவே அகழியில் இது மாதிரியான சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.. ஆதிராவும் அதுபற்றியெல்லாம் நிறையவே கேள்விப் பட்டிருக்கிறாள்..!! குழந்தைகள்.. இளம்பெண்கள்.. இல்லத்தரசிகள்.. சில முதியவர்கள் கூட.. திடீர் திடீரென காணாமல் போய்விடுவார்கள்..!! காணாமல் போன நபர்களில் இதுவரை ஒருவரைக் கூட காவல்துறையால் மீட்டுக் கொடுக்க இயலவில்லை..!!குறிஞ்சிதான் இதற்கெல்லாம் காரணம் என்பது அகழி மக்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை..!! நூறு வருடங்களாக.. அடுத்தடுத்து வந்த சந்ததியினருக்கு.. குறிஞ்சியின் கதை ஒட்டுமொத்தமாக திரிக்கப்பட்டே உரைக்கப்பட்டிருந்தது..!! புவனகிரியும், அகழி மக்களும் குறிஞ்சிக்கு இழைத்த அநீதி சுத்தமாக மறைக்கப்பட்டிருந்தது..!! குறிஞ்சி என்பவள் ஒரு பில்லி சூனியக்காரி எனவும்.. அவளுடைய சித்து விளையாட்டுக்களால் ஊருக்கு பல இன்னல்கள் நேர்ந்தது எனவும்.. ஆத்திரமடைந்த ஊர்மக்கள் அவளை தீயிட்டு கொளுத்தினர் எனவும்.. அப்படியும் அடங்காமல் இன்னும் ஆவியாக அலைகிறாள் எனவும்தான்.. இப்போதிருக்கிற அகழி மக்கள் குறிஞ்சியின் கதையை அறிவர்..!!“செவப்பு அங்கி போத்திருப்பா.. உச்சந்தலைல இருந்து உள்ளங்கால் வரை அங்கிதான்.. நடக்குறாளா மெதக்குறாளா கூட தெரியாது..!! இங்க நிக்கிற மாதிரி இருக்கும்.. கண்ணு மூடி கண்ணு தெறக்குறதுக்குள்ள அங்ங்ங்க நிப்பா..!!”“காட்டுக்குள்ள உக்காந்து தனியா அழுதுகிட்டு இருந்தா.. கைல ஏதோ கொழந்தை கணக்கா இருந்துச்சு.. அதை கொஞ்சிக்கிட்டே அழுதுகிட்டு இருந்தா..!!”“சிங்கமலை உச்சில நின்னவ.. சிரிச்சுக்கிட்டே தலைகுப்புற ஆத்துல குதிச்சுட்டாளப்பா..!! என் ரெண்டு கண்ணாலயும் பாத்தேனப்பா..!!”“தாகமா இருக்கு தண்ணி குடு.. தாகமா இருக்கு தண்ணி குடுன்னு.. பின்னாடியே வந்தா..!! நான் கொடத்தை கீழ போட்டுட்டு திரும்பிகூட பாக்காம ஒரே ஓட்டமா ஓடியாந்துட்டேன்..!!”இதுபோல.. குறிஞ்சியை கண்ணால் பார்த்த கதைகளும் ஊருக்குள் ஏராளம்.. ஆதிராவும் அந்தக்கதைகளில் பலவற்றை அறிவாள்..!! Pundai Ottai Sex Stories In Tamil– தொடரும்
ஆதாரம்:இணையம்