இருண்ட

நெஞ்சோடு கலந்திடு 5

🇮🇳 தமிழ்
வேகம்: 1.0x
நிலை: தயார்
×

இயக்க அமைப்பு உதவி

நீங்கள் ஏற்கனவே Chrome/Edge ஐப் பயன்படுத்தினாலும், இன்னும் இயக்க முடியவில்லை என்றால், உங்கள் தொலைபேசி/PC அமைப்புகளைச் சரிபார்க்கவும்.
நீங்கள் கேட்க விரும்பும் மொழியைப் பயன்படுத்தி, TTS இன்ஜின் செயலில் இருப்பதை உறுதி செய்யவும்.

Android மற்றும் பிற OS பயனர்களுக்கு

Android, Harmony, Lineage, Ubuntu Touch, Sailfish, ColorOS / FuntouchOS, hyperOS போன்ற பயனர்களுக்கு
மெனு அணுகல்: அமைப்புகளைத் திற > அணுகல்தன்மை > உரையிலிருந்து பேச்சு வெளியீடு.
அது இல்லை என்றால், அமைப்புகள் > மேலே உள்ள தேடல் பெட்டி > "text-to-speech" அல்லது "text" என உள்ளிடவும்
பிறகு உரையிலிருந்து பேச்சு அல்லது அதை ஒத்த ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
மொழியைச் சேர்க்க, கியர் ஐகானைக் கிளிக் செய்யவும் ⚙ > குரல் தரவை நிறுவு உங்களுக்குத் தேவையான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.

iOS பயனர்களுக்கு

அமைப்புகள் > அணுகல்தன்மை > பேசப்படும் உள்ளடக்கம் என்பதற்குச் செல்லவும்
அல்லது அமைப்புகள் > மேலே உள்ள தேடல் பெட்டி > "பேசப்படும் உள்ளடக்கம்" என உள்ளிட்டு என்டர் செய்யவும்
மொழியைச் சேர்க்க குரல்கள் என்பதைத் தேர்ந்தெடுத்து குரலைத் தேர்ந்தெடுக்கவும்

PC MacOS பயனர்களுக்கு

மெனு அணுகல்: Apple மெனுவைக் கிளிக் செய்யவும் () > கணினி அமைப்புகள் > அணுகல்தன்மை > பேசப்படும் உள்ளடக்கம்.

Windows பயனர்களுக்கு

Windows 10 & 11
மெனு அணுகல்: தொடக்கத்தைத் திற > அமைப்புகள் > நேரம் & மொழி > பேச்சு.
Windows 7 & 8
கட்டுப்பாட்டு பலகம் > அணுகல் எளிமை > பேச்சு அங்கீகாரம் > உரையிலிருந்து பேச்சு
Windows XP
தொடக்கம் > கட்டுப்பாட்டு பலகம் > ஒலிகள், பேச்சு மற்றும் ஆடியோ சாதனங்கள் > பேச்சு
Windows 2000 & ME
தொடக்கம் > அமைப்புகள் > கட்டுப்பாட்டு பலகம் > பேச்சு
Linux, ChromeOS, FreeBSD போன்ற பிற வகை PC பயனர்களுக்கு.
Google, Bing போன்ற தேடுபொறிகளில் உரையிலிருந்து பேச்சு வசதியை இயக்குவதற்கான அமைப்புகளைத் தேடவும்

குறிப்பு தற்போது, இந்தப் பக்கம் உங்கள் சாதனத்தின் இன்ஜினுக்கு ஏற்ப செயல்படுகிறது.
எனவே உருவாக்கப்படும் ஒலி உங்கள் சாதனத்தின் TTS இன்ஜினைப் பின்பற்றுகிறது.

நெஞ்சோடு கலந்திடு 5

. Tamil Sex Stories – காதலுக்கும், கவிதைக்கும் என்ன தொடர்பு..? காதல் மயக்கம் கொண்டவர்களில் கணிசமான விழுக்காட்டினர், ஏன் கவிதையிலும் மையல் கொண்டு திரிகின்றனர்..? அசோக்கிற்கு புரியில்லை..!!“அவருக்கு நல்லா கவிதை எழுத தெரிஞ்சிருக்கணும்..!!”திவ்யாவின் வார்த்தைகள் திரும்ப திரும்ப அவனுடைய செவிப்பறையில் வந்து மோதிக்கொண்டிருந்தன.
தான் திவ்யாவை உயிருக்கும் மேலாக காதலித்துக்கொண்டிருப்பதாக கருதிக்கொண்டிருக்கிறான்.
ஆனால் தனக்கு ஏன் கவிதையில் ஈடுபாடு இல்லாமல் போனது என்று அவனுக்கு புரியவில்லை..!! ஒருவேளை தன் காதலில் ஏதும் குறை உள்ளதா..? ச்சே..!! இருக்காது..!! முயலவில்லை.. அதனால்தான் கவிதை முளைக்கவில்லை..!!ஒரு பேப்பரையும் பேனாவையும் எடுத்துக்கொண்டு அமர்ந்துவிட்டான்.
இன்று திவ்யாவை நினைத்து ஒரு கவிதையாவது எழுதிப் பார்த்துவிடவேண்டும்..!! எப்படி ஆரம்பிப்பது..?? அன்பே என்றா.. அடியே என்றா..?? கண்ணே என்றா.. காதலியே என்றா..?? உயிரே என்றா.. உறவே என்றா..?? ஆரம்ப வார்த்தையிலேயே அடுக்கடுக்காய் குழப்பம்..!! நெற்றியை சொறிந்தவாறே நெடுநேரம் அமர்ந்திருந்தான்.
எதுவுமே பிடிபடாமல் போக எரிச்சலுக்கும் இயலாமைக்கும் உள்ளானானான்..!!பேனா பிடித்த அவன் கை சும்மா இராமல், கிறுக்க ஆரம்பித்தது.
திவ்யா என்றும்.. ஐ லவ் யூ என்றும்.. வார்த்தைகளை தாறுமாறாக காகிதத்தில் சிந்தியும் சிதறியும் வைத்தது..!! புத்தகங்களில் காணும் புதுக்கவிதைகளை விட, அவளுடைய பெயர் அழகாக இருப்பதாக, அவனது கண்களுக்கு தோன்றிற்று..!! ‘சரியான அல்பம்டி நீ.. நீயே ஒரு அற்புதமான கவிதை.. எதுக்குடி உன்னை நெனச்சு கவிதை எழுதனும்னு உனக்கு ஒரு அல்ப ஆசை..?’ என்று திவ்யாவிடம் கேட்பதாக மனதுக்குள் சொல்லிப் பார்த்தான்.
சிரிப்பு வந்தது..!!அடுத்த கணமே.. ச்சே..!! ‘கவிதை எழுத தெரியலை.. அதுக்கு இப்படி ஒரு சப்பைக்கட்டா..?’ என்று அவன் மனசாட்சி கேள்வி எழுப்ப.. கடுப்பானான்..!! கிறுக்கிய காகிதத்தை கையில் எடுத்து எரிச்சலுடன் கசக்கி எறிந்தான்.
எறிந்தவன் அடுத்த கணமே அதற்காக வருந்தினான்..!!எறியப்பட்ட காகிதம் வாசலில் நின்ற செல்வாவின் முகத்தில் பட்டு கீழே விழுந்தது.
ஒருகணம் அசோக்கை திகைப்பாய் பார்த்த செல்வா, பின்னர் குனிந்து அந்த பேப்பரை எடுக்க சென்றார்.
அசோக் பதறிப்போய் எழுந்து ஓடினான்.
“அண்ணா.. வேணான்னா.. இருங்க..”“ஏன்.. என்னாச்சு..”“ஒன்னுல்லன்னா.. அதை கொடுங்க..” என்றவாறு செல்வாவின் கையிலிருந்த காகிதத்தை, அசோக் பறிக்க முயன்றான்.
“ஏன் இப்படி பதர்ற..?? அப்போ இதுல ஏதோ மேட்டர் இருக்குது..!! இரு.. என்னன்னு பாக்குறேன்..!!”“ஐயோ.. அண்ணா.. வேணாம்..”“ஏய்.. இருடா..!!”“அண்ணா.. ப்ளீஸ்ண்ணா..”அசோக் கெஞ்சிக்கொண்டிருக்கும்போதே, செல்வா பிடிவாதமாக அந்த காகிதத்தை பிரித்தார்.
கசங்கல் நீக்கி பார்த்தார்.
பார்த்ததுமே அவர் முகத்தில் பல்பு எரிந்த மாதிரி ஒரு பிரகாசம்.
அசோக்கிடம் திரும்பி, அவன் மீது ஏளனமாய் ஒரு பார்வையை வீசியபடியே, எள்ளலான குரலில் சொன்னார்.
“ஹ்ஹ.. நாங்கதான் சொன்னோம்ல..?”“அண்ணா.. அ..அது நீங்க நெனைக்கிற மாதிரி இல்ல..” அசோக்கின் குரல் சற்றே பரிதாபமாக ஒலித்தது.
“ஹேய்.. ‘திவ்யா ஐ லவ் யூ.. திவ்யா ஐ லவ் யூ..’ன்னு கிறுக்கன் மாதிரி கிறுக்கி வச்சிருக்குற..? நான் நெனைக்கிற மாதிரி இல்லனா.. வேற எப்படி..?”“அ..அது.. அது வந்து..”“ம்ம்ம்.. சொல்லு…”“நா..நான் மட்டுந்தான் அவளை விரும்புறேன்.. அந்தப்பக்கம் இருந்து ஒன்னும் கிடையாது..!! ஜஸ்ட் ஒன்சைட்..!!”“ஓஹோ..!! அவகிட்ட உன் லவ்வை சொல்லிட்டியா..?”“இ..இல்ல..”“அப்புறம் எப்படி அந்தப்பக்கம் இருந்து ஒன்னும் கிடையாதுன்னு நீயா சொல்ற..? நான் சொல்றேன்.. நல்லா கேட்டுக்கோ..!! அந்தப் பொண்ணு உன்னைத்தான் லவ் பண்றா.. உன்னைத்தான் லவ் பண்றா..!!”“அட போங்கண்ணா..!! நீங்க வேற.. வயித்தெரிச்சலை கெளப்பாதீங்க..!!! குடுங்க அதை..!!”அசோக் அவர் கையிலிருந்த காகிதத்தை வாங்கிக்கொண்டு சேரில் சென்று அமர்ந்தான்.
டைரிக்குள் அந்த காகிதத்தை வைத்து மூடினான்.
அமைதியாக அவனையே பார்த்துக்கொண்டிருந்த செல்வா, அப்புறம் மெல்ல நடந்து அவனுக்கருகில் சென்றார்.
கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு, டேபிளில் சாய்ந்து கொண்டார்.
அசோக்கையே முறைத்து பார்த்தபடி சொன்னார்.
“எனக்கு உன் மேல கோவம்..”“ஏன்..?”“லவ் பண்ணிட்டு இத்தனை நாளா ‘இல்ல இல்ல’ ன்னு என்னை ஏமாத்திட்டு இருந்தேல்ல..?”“ப்ச்.. டபுள் சைடா இருந்தா கண்டிப்பா சொல்லிருப்பேண்ணா..!! இது.. நான் மட்டுந்தான்.. அதான் உங்ககிட்ட சொல்றதுக்கு எனக்கு கொஞ்சம் தயக்கம்..”“இருந்தாலும்.. உன் மேல எனக்கு கோவம்.. கோவந்தான்..!!”“சரி.. அதுக்கு..???”“உனக்கு தண்டனை கொடுத்தே ஆகணும்..”“என்ன தண்டனை..?”“இன்னைக்கு நீ தண்ணியடிக்கிற..!!” செல்வா சொல்ல, அசோக் பக்கென அதிர்ந்தான்.
“ஐயோ.. அண்ணா..!! அந்த தண்டனை மட்டும் எனக்கு வேணவே வேணாம்..”“நோ நோ..!! நான் முடிவு பண்ணிட்டேன்.. இன்னைக்கு நீ தண்ணியடிச்சே ஆகணும்..”“வெளையாடாதீங்கண்ணா.. எனக்கு இன்னைக்கு தண்ணியடிக்கிற மூடுலாம் இல்ல..”“உனக்கு மூடு இருக்கா இல்லையான்லாம் எனக்கு கவலை இல்ல.. வா.. கெளம்பு..!!”“அண்ணா.. ப்ளீஸ்ண்ணா..”“கெளம்புடா.. எந்திரி.. பேன்ட்டை மாட்டு..”அசோக் கெஞ்ச கெஞ்ச, செல்வா அவன் கையை பிடித்து வலுக்கட்டாயமாக இழுத்து சென்றார்.
தண்ணியடிக்க அசோக்கிற்கு பெரிதாக மூடேல்லாம் தேவையில்லை.
‘எங்க வீட்டு குழாய்ல இன்னைக்கு தண்ணி வரலைடி..’ என்று சாலையை கடக்கும் யாரோ யாரிடமோ பேசிக்கொண்டிருந்தால் கூட.. அது இவன் காதில் வந்து விழுந்துவிட்டால்.. அவ்வளவுதான்..!! அது போதும் அவனுக்கு..!!அப்புறம் ஏன் இவ்வளவு பிடிவாதம் என்கிறீர்களா..? செல்வாவுடன் சேர்ந்து ஒருமுறை தண்ணியடித்திருக்கிறான்.
அதன் பிறகு அந்த தவறை செய்யவே கூடாது என்று ஒரு முடிவு கட்டியிருந்தான்.
அதனால்தான் அந்த தயக்கம்..!! ‘செல்வா அளவுக்கதிகமாக குடித்துவிட்டு ரவுசு செய்வாராக இருக்கும்’ என்று எண்ணி விடாதீர்கள்.
அதுவும் இல்லை.. செல்வாவுக்கு குடிப்பழக்கமே கிடையாது..!! இது வேறு மாதிரி பிரச்னை..!!“ஆஃப் தந்தூரி சிக்கன் வாங்குனா.. போதும்லண்ணா..?”“ஃபுல்லாவே வாங்கிடு அசோக்..!! அதுல என்ன கஞ்சத்தனம்..?? அப்புறம்.. ஃபிஷ் ஃபிங்கர் சாப்பிட்டிருக்கியா நீ..?”“ம்ம்.. சாப்பிட்டிருக்கேண்ணா..!!”“இருந்தாலும் இந்த ஹோட்டல்ல சாப்பிட்டிருக்க மாட்ட… அதுவும் ஒன்னு சொல்லிடு..”“நெறைய ஆர்டர் பண்ற மாதிரி இருக்குண்ணா.. வேஸ்ட்டா போயிட போகுது..”“வேஸ்ட்லாம் ஆவாது.. நீ ஆர்டர் பண்ணு..!!”அசோக் செல்வாவையே பரிதாபமாக பார்த்தான்.
செல்வா அதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை.
அதன்பிறகும் நிறைய உயிரினங்களின் பெயரையும், அவற்றின் உடல் உறுப்புகளின் பெயரையும் சொல்லிக்கொண்டே இருந்தார்.
ஆர்டர் குறித்துக்கொண்டவனின் முகம் அகலமாகிக் கொண்ட சென்றது.
எல்லாவற்றையும் பார்சல் கட்டிக்கொண்டு இருவரும் அறைக்கு திரும்பினார்கள்.
அசோக் ஒருமாதிரி நொந்துபோன குரலில் சொன்னான்.
“சரக்கு நூறு ரூபாய்தான்.. சைடிஷ் எழுநூறு ரூபாய்க்கு வாங்கிருக்குண்ணா..”“இருக்கட்டும் அசோக்.. என்னைக்கோ ஒருநாள் குடிக்கிற.. இதுக்கெல்லாம் கணக்கு பார்க்காத..!! காசு இன்னைக்கு வரும் நாளைக்கு போகும்..!!”“ஓஹோ.. அப்படியா..? உங்க பர்த்டே ட்ரீட் குடுக்குறப்போ.. காசை பத்தி வேற மாதிரி சொன்னீங்களே..?”“என்ன சொன்னேன்..?”“ஆத்துல போட்டாலும் அளந்து போடணும் அசோக்குனு..”“அப்படியா சொன்னேன்..? எனக்கு ஞாபகம் இல்லையே..?”செல்வா அப்பாவியாய் நடிக்க, அசோக்கால் அவரை முறைத்து ஒரு பார்வை மட்டுந்தான் பார்க்க முடிந்தது.
அடுத்தவன் காசு மட்டும் இன்னைக்கு இன்கமிங் நாளைக்கு அவுட்கோயிங்.. ஆனா இவர் காசை மட்டும் கவுன்ட் பண்ணித்தான் காவேரில கடாசுவாரு..!! மனதுக்குள் நொந்து கொண்டான்..!!அறைக்கு திரும்பியதும், கட்டிக்கொண்டு சென்றதை காலி செய்ய ஆரம்பித்தார்கள்.
அசோக் விஸ்கியையும்.. செல்வா சைடிஷையும்..!! என்னவோ.. நாளைக்கே உலகம் அழிந்து விடப்போவது போல.. செல்வா சிக்கனையும், மட்டனையும் கடித்து குதறினார்.
அவர் மிச்சம் வைத்த பீஸ்களை கடித்தபடியே அசோக் விஸ்கியை விழுங்கினான்.
இறுதியாக ஒரு மடக்கு விஸ்கியும், ஒரே ஒரு சிக்கன் பீஸும் மிச்சம் இருந்தது.
அசோக் அந்த ஒரு மடக்கையும் உள்ளே ஊற்றிவிட்டு தேடியபோது, அந்த சிக்கன் பீஸ் செல்வாவின் வாய்க்குள் அரைபட்டு கூழாகியிருந்தது.
அசோக் செல்வாவை சற்றே வெறுப்புடன் பார்த்தான்.
அவர் அவனை சுத்தமாக கண்டுகொள்ளவில்லை.
‘ஏஏஏஏவ்…!!!’ என்று ஒரு ஏப்பத்தை வெளிப்படுத்தியவாறு, சுவரில் சாய்ந்துகொண்டார்.
ஒரு குச்சியை எடுத்து பல்சுத்தம் செய்ய ஆரம்பித்தார்.
அசோக் ஒரு சிகரெட் பற்ற வைத்துக் கொண்டான்.
ஆழமாக புகையை உள்ளிழுத்து வெளியே ஊத.. அவன் கண்கள் செருகின.. தலை சுழன்றது..!! இருவருமே இப்போது ஒரு மயக்கத்தில் இருந்தார்கள்.
அசோக்கிற்கு மது மயக்கம்.
செல்வாவிற்கு உண்ட மயக்கம்..!! அப்போதுதான் அசோக் தன் மனதை அரித்துக் கொண்டிருந்த அந்த கேள்வியை தயங்கி தயங்கி செல்வாவிடம் கேட்டான்.
“அண்ணா..”“ம்ம்..”“எனக்கு ஒரு சந்தேகம்.. உங்ககிட்ட கேட்கவா..?”“கேளு..”“காதலிச்சாதான் கவிதை வருமா..?”“ஏன்.. காப்பியடிச்சா கூட வருமே..?” அவர் வெடுக்கென சொல்ல, அசோக் அவருடைய பதிலில் அப்படியே ஆடிப்போனான்.
“அண்ணா.. எப்படிணா இப்டிலாம்..?? பின்னிட்டீங்க..!! நீங்க இதுவரை சொன்ன தத்துவத்துலயே இதுதான் சூப்பர்..!!”“தேங்க்யூ.. தேங்க்யூ..!! அது சரி.. உனக்கு ஏன் திடீர்னு இப்படி ஒரு சந்தேகம்..??”“அ..அது..”“எது..?”“அந்தப் பொண்ணு இருக்குல்லண்ணா..?”“கண்மணியா..?”“அடச்சை.. திவ்யாண்ணா..!!”“ம்ம்.. ஆமாம்.. இருக்கு..!! அதுக்கென்ன..?”“போன வாரம் அவகிட்ட பேசிட்டு இருந்தேன்.. அவளுக்கு காதலனா வரப் போறவன் எப்படி இருக்கணும்னு..”“சரி..”“என்னென்னவோ சொல்றாண்ணா அவ..!! தண்ணியடிக்க கூடாதாம்.. தம்மடிக்க கூடாதாம்.. சைட் அடிக்க கூடாதாம்.. சாஃப்ட்வேர் பையன் வேணாமாம்..”“ஓஹோ..!!”“எ..எனக்கு.. எனக்கு எல்லா கண்டிஷனும் ஓகேண்ணா.. நான் மாத்திக்குவேன்.. தம்மு, தண்ணி எல்லாம் விட்ருவேன்.. என் வேலையை கூட ரிசைன் பண்ணிட்டு.. வேற வேலை தேடிப்பேன்..!! ஆனா.. அவ.. அவளுக்கு வரப் போறவனுக்கு கவிதை எழுத தெரிஞ்சிருக்கணும்னு சொல்றாண்ணா.. நான் எவ்வளவோ ட்ரை பண்ணி பாத்துட்டேன்.. எனக்கு வர மாட்டேன்னுது..!! என்னண்ணா பண்ணலாம்..?”அசோக் அந்த மாதிரி ஒரு கேள்வியை முன்வைத்ததும், செல்வா அமைதியானார்.
தீவிரமாக எதையோ சிந்தித்தார்.
அப்புறம் தொண்டையை லேசாக செருமிக்கொண்டு ஆரம்பித்தார்.
“அசோக்.. நான் ஒரு கதை சொல்றேன் கேக்குறியா..?”“கதையா..???” அசோக் சற்றே மிரள, செல்வா அதை கண்டுகொள்ளாமல் ஆரம்பித்தார்.
“எங்க கிராமத்துல ரமா ரமான்னு ஒரு பொண்ணு இருந்தது.. அழகான பொண்ணு, அப்பாவிப் பொண்ணு.. வெகுளிப் பொண்ணு, வெள்ளந்தியான பொண்ணு..!! அப்போ.. எங்க ஊருக்கு ட்ராமா போடுறதுக்கு ரமேஷ்னு ஒருத்தன் வந்தான்.. தார்ல குளிச்ச காட்டெருமை மாதிரியே இருப்பான்..!! அவன் வாயை தெறந்தா..” “கப்படிக்குமா..?”“இல்ல.. கவிதையா கொட்டும்..!! அவனுக்கும் ரமாவுக்கும் எப்படியோ பழக்கம் ஆயிடுச்சு.. அவன் ரமாகிட்ட கவிதையாத்தான் பேசுவான்.. ‘எருமை சாணம் அள்ளிட்டியா’ன்னு கேக்குறதை கூட.. எதுகை மோனையோடத்தான் கேட்பான்..!! ரமா அவன் பேச்சுல மயங்குனா.. அவனை கண்மூடித்தனமா காதலிக்க ஆரம்பிச்சா..!!”“ம்ம்.. அப்புறம்..?” Kadhal Tamil Sex Stories– தொடரும்
ஆதாரம்:இணையம்