இருண்ட

பிட்டுப்படம் பார்ப்பது எப்படி

🇮🇳 தமிழ்
வேகம்: 1.0x
நிலை: தயார்
×

இயக்க அமைப்பு உதவி

நீங்கள் ஏற்கனவே Chrome/Edge ஐப் பயன்படுத்தினாலும், இன்னும் இயக்க முடியவில்லை என்றால், உங்கள் தொலைபேசி/PC அமைப்புகளைச் சரிபார்க்கவும்.
நீங்கள் கேட்க விரும்பும் மொழியைப் பயன்படுத்தி, TTS இன்ஜின் செயலில் இருப்பதை உறுதி செய்யவும்.

Android மற்றும் பிற OS பயனர்களுக்கு

Android, Harmony, Lineage, Ubuntu Touch, Sailfish, ColorOS / FuntouchOS, hyperOS போன்ற பயனர்களுக்கு
மெனு அணுகல்: அமைப்புகளைத் திற > அணுகல்தன்மை > உரையிலிருந்து பேச்சு வெளியீடு.
அது இல்லை என்றால், அமைப்புகள் > மேலே உள்ள தேடல் பெட்டி > "text-to-speech" அல்லது "text" என உள்ளிடவும்
பிறகு உரையிலிருந்து பேச்சு அல்லது அதை ஒத்த ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
மொழியைச் சேர்க்க, கியர் ஐகானைக் கிளிக் செய்யவும் ⚙ > குரல் தரவை நிறுவு உங்களுக்குத் தேவையான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.

iOS பயனர்களுக்கு

அமைப்புகள் > அணுகல்தன்மை > பேசப்படும் உள்ளடக்கம் என்பதற்குச் செல்லவும்
அல்லது அமைப்புகள் > மேலே உள்ள தேடல் பெட்டி > "பேசப்படும் உள்ளடக்கம்" என உள்ளிட்டு என்டர் செய்யவும்
மொழியைச் சேர்க்க குரல்கள் என்பதைத் தேர்ந்தெடுத்து குரலைத் தேர்ந்தெடுக்கவும்

PC MacOS பயனர்களுக்கு

மெனு அணுகல்: Apple மெனுவைக் கிளிக் செய்யவும் () > கணினி அமைப்புகள் > அணுகல்தன்மை > பேசப்படும் உள்ளடக்கம்.

Windows பயனர்களுக்கு

Windows 10 & 11
மெனு அணுகல்: தொடக்கத்தைத் திற > அமைப்புகள் > நேரம் & மொழி > பேச்சு.
Windows 7 & 8
கட்டுப்பாட்டு பலகம் > அணுகல் எளிமை > பேச்சு அங்கீகாரம் > உரையிலிருந்து பேச்சு
Windows XP
தொடக்கம் > கட்டுப்பாட்டு பலகம் > ஒலிகள், பேச்சு மற்றும் ஆடியோ சாதனங்கள் > பேச்சு
Windows 2000 & ME
தொடக்கம் > அமைப்புகள் > கட்டுப்பாட்டு பலகம் > பேச்சு
Linux, ChromeOS, FreeBSD போன்ற பிற வகை PC பயனர்களுக்கு.
Google, Bing போன்ற தேடுபொறிகளில் உரையிலிருந்து பேச்சு வசதியை இயக்குவதற்கான அமைப்புகளைத் தேடவும்

குறிப்பு தற்போது, இந்தப் பக்கம் உங்கள் சாதனத்தின் இன்ஜினுக்கு ஏற்ப செயல்படுகிறது.
எனவே உருவாக்கப்படும் ஒலி உங்கள் சாதனத்தின் TTS இன்ஜினைப் பின்பற்றுகிறது.

பிட்டுப்படம் பார்ப்பது எப்படி

. Tamil Hot Stories – (பப்பரப்பா என்று கைவிரித்துக்காட்டும் இந்த பாப்பா – ரேஷ்மா )பிட்டுப்படங்கள் என்றாலே அனைவருக்கும் உள்ளுக்குள் அலாதி பிரியம் .
என்னதான் அப்படிப்பட்ட படங்களின் மேல் ஆசை இருக்கும் அளவுக்கு அதை காணும் தைரியம் இருப்பதில்லை.
ஏனோ நமது சமுதாய கட்டமைப்பு அவற்றைக்காணும் வாய்ப்பை அனைவருக்கும் அளிப்பதில்லை.
ஆனாலும் இருபது வயது இளைஞன் முதல் அறுபது வயது பல்லில்லா கிழவன் வரை அனைவருக்கும் செய்வதை விட( என்ன செய்வது என நீங்கள் கேட்டால் இந்த பதிவு உங்களுக்கல்ல ஓடிவிடுங்கள் ) பார்ப்பதில்தான் ஒரு உற்சாகம்.
ரொம்ப சீரியஸாக இப்படிலாம் பதிவு போட்டா நான் தமிழின துரோகி ஆகிவிட நேரிடலாம்.
இருந்தாலும் வாலிப வயோதிக அன்பர்கள் பலரின் வேண்டுகோள் என்ன செய்ய?.
ஒரு பிட்டுப்படத்தை முறையாக எப்படிப் பார்ப்பது என்பதை கற்றுத்தரும் கடமை தமிழ் கூறும் நல்லுலகை சேர்ந்த எனக்கு இருப்பதாய் முந்தாநாள் போன் பண்ணிய சுந்தரிலிருந்து அடுத்தவாரம் போன் செய்ய இருக்கும் சுரேஷ் வரை அனைவரது வேண்டுகோளும்.
முதலில் பிட்டுப்படங்களை பிட்டுப்படங்களாய் பார்க்காமல் அவற்றை ஒரு உன்னத அனுபவமாய் பார்க்க என்னவெல்லாம் செய்யலாம்.
வாங்க பதிவுக்கு போகலாம்.
பிட்டுப்படங்களில் பல வகைகள் உண்டு.
டபிள் எக்ஸ்,டிரிபிள் எக்ஸ், ஆங்கிலம்,தமிழ்,மலையாள தமிழ்,தமிழ் மலையாளம், ஹிந்தி தமிழ்,தமிழ் ஹிந்தி இப்படி இன்னும் பல வகைகள் இருக்கின்றன.
இவற்றில் டபிள் எக்ஸ் என்பது டபிள் எக்ஸ்.
டிரிபிள் எக்ஸ் என்பது டிரிபிள் எக்ஸ்.
இதற்கெல்லாம் கூட விளக்கம் உங்களுக்கு தேவைப்படும் பட்சத்தில் இது உங்களுக்கு ஏற்ற பதிவுதான்.
*நேரம் இது மிக மிக முக்கியமானது.
சில தியேட்டர்களில் காலைக்காட்சியில் மட்டுமே இது மாதிரி படங்கள் காட்டப்படும்.
அதிலும் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள இன்னும் சில மாதங்களில் மூடும் தருவாயில் இருக்கும் தியேட்டர்களென்றால் உசிதம்.
நான்கு ஷோவும் பிட்டுப்படங்கள் திரையிடப்படும் தியேட்டர்களை நாடுவது வீண்.
பிட்டுகளுக்கான உத்திரவாதம் இருக்காது.
வெக்குனாப்புல போக நேரிடும்.
அதனால் முடிந்தவரைக்கும் காலைக்காட்சியை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும்.
(நேரம் 11லிருந்து 11.
45 வரை மட்டுமே.. அதான்ல ஆபீசுக்கு லீவெல்லாம் போட வேண்டாம், ஒரு மணிநேர பர்மிஷனில் போய் வந்துவிடலாம்..;-)முதலில் டிக்கெட் எப்படி வாங்குவது என தெரிந்து கொள்ளவேண்டும்.
பிட்டுப்படம் இருக்கும் சாலையோரம் சகஜமாய் நடந்து சென்று.. யாரும் பார்க்காத போது சடக்கென்று உள்ளே நுழைந்து விட வேண்டியதுதான்.
ஒரு பாம்பு எப்படி புத்துக்குள் ஊர்ந்து ஊர்ந்து புசுக்கென நுழையுமே அது போல.
உள்ளே சென்றதும் கவுண்டர் என்ற ஒன்று இருக்கும் ( கட்டாயமாக ஜாதி இல்லை! ) .
அது டிக்கெட் வழங்குமிடம்.
அங்கே சென்று டிக்கெட்டை வாங்க வேண்டும் .
( முடியல!)ஒரே விலைதான் எல்லா டிக்கெட்டும் என்பதை மனதில் கொள்க.
(பிட்டுப்பட தியேட்டர்களின் எழுதப்படாத விதி! விதினாலே அப்படித்தான் ) .
சமீபத்திய விபரம் 20 ரூ எல்லா வகுப்பும் ( அட!!).
படத்தை முழுமையாக பார்த்தபின் இது குறித்து இந்து பொந்து ஆயாவூட்டு சந்து என எதில் வேண்டுமானாலும் எழுதி நீங்கள் இழந்த பணத்தை மீட்கலாம்.
அல்லது கன்சுயூமர் கோர்ட்டுக்கும் போகலாம்.
*அதனால் மறுபேச்சு பேசாமல் எவ்வளவு கேட்கிறார்களோ அவ்வளவையும் கொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து விடுவது உத்தமம்.
இல்லாவிட்டால் நீங்கள் தியேட்டரிலிருந்து தேவையில்லாமல் வெளியேற்றப்படுவீர்கள்.
அதைவிட நம் குலத்திற்கு மிகப்பெரிய அவமானம் இருக்குமா! அதிலும் நீங்கள் கேட்ட காசை கொடுக்க வில்லையென உங்கள் குமட்டில் குத்து விழுவதை யாரேனும் பார்த்துவிட்டால், ஐயகோ…*அதனால் வீட்டிலிருந்து கிளம்பும் போதே நிறைய பணமெடுத்துக்கொண்டு செல்லவும்.
அல்லது பணமுள்ள நண்பரை அழைத்துச்செல்லவும்.
செல்லும் வழியில் படத்தில் ஆறு பிட்டு ஏழு பிட்டு என ஏகத்திற்கு கப்சா விடவும்.
(பிட்டு வரவில்லை என்றால் சே கட் பண்ணிட்டாய்ங்க சார் என்று கழண்டு கொள்ளலாம்.
)அதே போல் உள்ளே நுழைந்தவுடன் தியேட்டரின் மிக இருட்டான பகுதிக்குள் பதுங்கிக்கொள்ளவும்.
அது ஒரு பாதுகாப்பு யுக்தி அல்லது ராஜதந்திரம்.
*ஆர அமர அமர்ந்து கொண்டு ஒரு நீண்ட நெடிய பெருமூச்சு விட்டுக்கொள்ளவும்.
(சம்பிரதாயம்ப்பா).
பக்கத்தில் இருப்பவர் விடாவிட்டால் முதுகில் தட்டி மூச்சுவிட சொல்லுங்கள்.
*எப்படியோ உங்களை தியேட்டருக்குள் அழைத்து சென்றாகிவிட்டது.
ஆறு மணிக்கு படம் என்றால் அது ஆறு முப்பதுக்குத்தான் தொடங்கவேண்டும் என்பது தியேட்டர் உரிமையாளரின் விருப்பம்.
அதனால் அரைமணிநேரம் வாசல் பக்கம் யார்யார் வருகிறார்கள் என அரை வெளிச்சத்தில் பார்த்து ரசிக்கலாம்.
(உங்கள் உற்றார் உறவினர் வந்தால் உசாராக உதவுமே )*இப்போது புரிந்திருக்கும் நான் ஏன் உங்களை ஆரம்பத்தில் தியேட்டரின் இருட்டான பகுதியில் அமரச்சொன்னேன் என்று.
*அந்த அரை மணி நேர இடைவெளியில் லத்தீன் அமெரிக்க மற்றும் இத்தாலிய ரோமானிய இசையெல்லாம் , பாதி உடைந்து போன ஸ்பீக்கரில் போடுவார்கள் அதை ஆத்மார்த்த அனுபவமாக, பழுத்து வெடிக்க காத்திருக்கும் பலாப்பழத்தைப்போல கேட்டு ரசிக்க வேண்டும்.
(இல்லாவிட்டால் குமட்டில் குத்துவேன்) .
(விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு இதையெல்லாம் ரசிக்க தெரியாது, நம்மைபோன்ற அறிவுஜீவி குஞ்சுகளுக்கு மட்டும்தான் தெரியும்.
நாம் எதற்கு தியேட்டருக்கு வந்திருக்கிறோம் என்று.. குஞ்சு என்றால் கோழிக்குஞ்சு,ஆமைக்குஞ்சு,மீன் குஞ்சு என பொருள் கொள்க)*ஸ்ப்பாடா ஒருவழியாக படம் போட்டாச்சா! , இங்கேதான் நாம் கவனிக்கவேண்டிய மிகமுக்கியமான விடயம் வருகிறது.
ஷகிலா படங்களில் முதல் காட்சியில் சாமி கும்பிடும் காட்சியோடு படம் துவங்கினால் படத்தில் 100 சதவீதம் குறைந்தது ஆறிலிருந்து பத்து பிட்டுகள் உத்திரவாதம்.
அதனால் வெறும் சாமி கும்பிடும் காட்சிதானே என பப்பரப்பா என பராக்கு பார்த்துக்கொண்டிருக்காமல் படத்தில் கவனமாய் இருக்க வேண்டும்.
*படத்தில் ஷகிலாவின் கணவனாகவோ அல்லது முக்கிய பாத்திரம் (கதாநாயகியின்) கணவனாக ஒரு அரைமண்டை கிழம் இருந்தால் வெற்றி உங்களுக்கே..! ஆறு பிட்டு உத்திரவாதம்.
*படம் ஆரம்பித்த பின் முன் சீட்டு ஏன் ஆடுகிறது, பின்னால் என்ன முனகல் சத்தம், ஐயோ குய்யோ என்று யார் கத்தினாலும் எதற்கும் தலை அந்த பக்கம் இந்த பக்கம் திருப்பிடாதீங்க.. அதற்கான காரணங்கள் அனுபவித்து உணர வேண்டியது.
பக்கத்து சீட்டில் அமரும் நபரை உன்னிப்பாக கவனிக்கவும்.
அவர் உங்களைப்பார்த்து சிரித்தால் திருப்பி சிரித்து விடாதீர்கள்.
மீறி சிரித்து ஏதும் புண்பட்டால் கம்பெனி பொறுப்பாகாது.
*இன்டர்வெல்லுக்கு முன்னால் அதாவது படம் துவங்கி சரியாக அரைமணிநேரத்திற்குள் நிச்சயம் ஒரு மிக நீண்ட பிட்டு கட்டாயம் இடம் பெறும் , தப்பி தவறி கூட படம் துவங்கியதிலிருந்து இன்டர்வெல் வரை ஆய்,சூச்சூ, உச்சா, கிச்சா ,தம்மு எதற்கும் போய் விடாதீர்கள்.
மிக முக்கியமான பிட்டை இழக்க வேண்டியிருக்கும்.
*இன்டர்வெல்லுக்கு பிறகு பொதுவாகவே எந்த தியேட்டரிலும் பிட்டுகள் போடுவதில்லை.
சப்பையான கிளைமாக்ஸ் மட்டுமே.
அதை பார்ப்பதை விட இன்டர்வெல் முடிந்து படம் துவங்கியதும் , தியேட்டரை விட்டு அரக்க பரக்க பின்னங்கால் பிடறியில் பட ஓடி விடுவது நல்லது.
தியேட்டரும் இருட்டாக இருக்கும்.
யார் கண்ணிலும் பட வாய்ப்பில்லை.
*இப்படி ஒரு வழியாக பிட்டுப்படத்தை பார்த்து முடித்ததும் .
வீட்டிற்கு சென்றதும் பழனி ஆண்டவரை வணங்கி நெற்றி நிறைய பட்டையிட்டு பேசாமல் படுத்து உறங்கவும்.
இறைவன் அருள் உங்களுக்கே சொந்தமாகும்.
பின் குறிப்புகள்.
*ஆங்கில பிட்டுப்படங்கள் தற்காலத்தில் அதிகம் வருவதில்லை.
வந்தாலும் அவற்றில் பிட்டுகள் மகா மொக்கையாக இருப்பதால் அவற்றை பார்ப்பதை முடிந்தவரை தவிர்க்கலாம்.
*அதே போல இந்தி பிட்டுப்படங்களில் .. பிட்டுகள் இடம் பெற்றாலும் மலையாளத்தை நெருங்கவே முடியாது.
நெருங்கினாலும் இந்திக்காரர்கள் உணவைப்போல அதாங்க சப்பாத்தி போல இருக்கும்.
அதற்கு மேல் உங்களிஷ்டம்.
*சீன , கொரிய பிட்டுப்படங்களில் எனக்கு தெரிந்தவரை அலெக்ஸான்டரா வை அடித்து கொள்ள வேறு படமே இல்லை எனலாம்.
மற்ற படி அவை ஒரு உன்னத அனுபவத்தை தரவல்லது.
சாப்ட் பிட்டு (soft biitu ) பார்க்க விரும்புபவர்கள் முயற்ச்சிக்கலாம்.
இது தவிர , டிவிடி வடிவத்தில் கிடைக்கும் பிட்டுப்படங்கள் பார்க்கும் போது எப்படி பார்க்க வேண்டும் என உங்களுக்கு நான் சொல்லித்தர தேவையில்லை.
முடிந்த வரை படத்தை மியூட்டில் வைத்து ஒரு கையில் ரிமோட்டை பிடித்துக்கொண்டு காதை கூர்மையாக வைத்துக்கொண்டு பார்க்கவும்.
யாராவது வந்தால் அணைத்துவிட ( டிவியை!) வசதியாக இருக்கும்.
ஆனால் மிகச்சிறந்த ஆங்கில,மாற்றுமொழி பிட்டுப்படங்கள் வாங்க ஒரு மிகச்சிறந்த வழியுண்டு, சாரு நிவேதிதா மாதிரி கிம் கி டுக்… டின்டோ பிராஸ், சிரிலோ கிரிஸ்கோஸ்கி,அந்தோனி போர்ஜெஸ் போன்றோரின் படங்களை பார்ப்பவரை நண்பராக்கி கொள்ளுங்கள் .
அவர்கள் பார்க்கும் படங்களின் பெயர் மட்டும் வாங்கிக்கொண்டு அதை போய் டிவிடி கடையில் கேளுங்கள்.
அவர் நிச்சயம் இரண்டில் ஒன்று தருவார், ஒன்று அந்த படத்தின் டிவிடி அல்லது சாராமாரியான அடி உதை.. இனிமே இந்த கடை பக்கம் வந்த மவனே சாவடிதான் என்கிற இலவச வசனத்தோடு.. ( சமயங்களில் சார் இந்த படமெல்லாமா பாக்கறீங்க பெரிய ஆள்சார் என்று பாராட்டவும் நேரிடலாம் அதற்கு கம்பேனி பொறுப்பல்ல) Bittupadam Tamil Hot Stories.
ஆதாரம்:இணையம்