இருண்ட

மலரே என்னிடம் மயங்காதே 16

🇮🇳 தமிழ்
வேகம்: 1.0x
நிலை: தயார்
×

இயக்க அமைப்பு உதவி

நீங்கள் ஏற்கனவே Chrome/Edge ஐப் பயன்படுத்தினாலும், இன்னும் இயக்க முடியவில்லை என்றால், உங்கள் தொலைபேசி/PC அமைப்புகளைச் சரிபார்க்கவும்.
நீங்கள் கேட்க விரும்பும் மொழியைப் பயன்படுத்தி, TTS இன்ஜின் செயலில் இருப்பதை உறுதி செய்யவும்.

Android மற்றும் பிற OS பயனர்களுக்கு

Android, Harmony, Lineage, Ubuntu Touch, Sailfish, ColorOS / FuntouchOS, hyperOS போன்ற பயனர்களுக்கு
மெனு அணுகல்: அமைப்புகளைத் திற > அணுகல்தன்மை > உரையிலிருந்து பேச்சு வெளியீடு.
அது இல்லை என்றால், அமைப்புகள் > மேலே உள்ள தேடல் பெட்டி > "text-to-speech" அல்லது "text" என உள்ளிடவும்
பிறகு உரையிலிருந்து பேச்சு அல்லது அதை ஒத்த ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
மொழியைச் சேர்க்க, கியர் ஐகானைக் கிளிக் செய்யவும் ⚙ > குரல் தரவை நிறுவு உங்களுக்குத் தேவையான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.

iOS பயனர்களுக்கு

அமைப்புகள் > அணுகல்தன்மை > பேசப்படும் உள்ளடக்கம் என்பதற்குச் செல்லவும்
அல்லது அமைப்புகள் > மேலே உள்ள தேடல் பெட்டி > "பேசப்படும் உள்ளடக்கம்" என உள்ளிட்டு என்டர் செய்யவும்
மொழியைச் சேர்க்க குரல்கள் என்பதைத் தேர்ந்தெடுத்து குரலைத் தேர்ந்தெடுக்கவும்

PC MacOS பயனர்களுக்கு

மெனு அணுகல்: Apple மெனுவைக் கிளிக் செய்யவும் () > கணினி அமைப்புகள் > அணுகல்தன்மை > பேசப்படும் உள்ளடக்கம்.

Windows பயனர்களுக்கு

Windows 10 & 11
மெனு அணுகல்: தொடக்கத்தைத் திற > அமைப்புகள் > நேரம் & மொழி > பேச்சு.
Windows 7 & 8
கட்டுப்பாட்டு பலகம் > அணுகல் எளிமை > பேச்சு அங்கீகாரம் > உரையிலிருந்து பேச்சு
Windows XP
தொடக்கம் > கட்டுப்பாட்டு பலகம் > ஒலிகள், பேச்சு மற்றும் ஆடியோ சாதனங்கள் > பேச்சு
Windows 2000 & ME
தொடக்கம் > அமைப்புகள் > கட்டுப்பாட்டு பலகம் > பேச்சு
Linux, ChromeOS, FreeBSD போன்ற பிற வகை PC பயனர்களுக்கு.
Google, Bing போன்ற தேடுபொறிகளில் உரையிலிருந்து பேச்சு வசதியை இயக்குவதற்கான அமைப்புகளைத் தேடவும்

குறிப்பு தற்போது, இந்தப் பக்கம் உங்கள் சாதனத்தின் இன்ஜினுக்கு ஏற்ப செயல்படுகிறது.
எனவே உருவாக்கப்படும் ஒலி உங்கள் சாதனத்தின் TTS இன்ஜினைப் பின்பற்றுகிறது.

மலரே என்னிடம் மயங்காதே 16

. என்னாச்சு இப்போ.. ஏன் டென்ஷனா இருக்குற..?” நான் சற்று சாந்தமாகவே கேட்டேன்.
“ட்ரான்ஸ்ஃபர் கேட்டிருக்கியாமே..?”“உனக்கு யார் சொன்னா..?”“யார் சொன்னா என்ன..? உண்மையா.. பொய்யா..?”“ம்ம்.. உண்மைதான்..!! அதுக்கென்ன..?”“அதுக்கு என்னவா..? எப்புடி அசோக்கு இப்டிலாம் உன்னால பேச முடியுது..?” அவர் நிஜமாகவே நொந்து போனவராய் கேட்டார்.
“எனக்கு வேற வழி தெரியலை பன்னீர்..” நான் விட்டேத்தியாக சொன்னேன்.
“அதுக்காக.. ட்ரான்ஸ்ஃபர் வாங்கிட்டு ஓடிப்போயிட்டா.. எல்லாம் சரியாயிடுமா..?” அவருடைய குரல் இப்போது சற்று காட்டமாக ஒலித்தது.
“இங்க பாரு பன்னீர்.. என்ன நடந்ததுன்னு உனக்கு தெரியாது..!!”“ஆமாம்.. தெரியாதுதான்..!! ஆனா.. என்ன நடந்திருக்கும்னு என்னால புரிஞ்சுக்க முடியும் அசோக்கு..!! மலரை நீ விரும்ப ஆரம்பிச்சுட்ட.. அவகிட்ட நீ தோத்துப்போயிட்ட..!! ஆனா.. அதை ஒத்துக்க மனசு வராம.. அவளுக்கு பயந்து இப்போ ஊரை விட்டு ஓட முடிவு பண்ணிருக்குற..!!”“நான் யாருக்கும் பயந்து ஓடலை..”“பின்ன இதுக்கு பேர் என்ன..?”“நான் என் நிம்மதி தேடி போறேன்..”“உன் நிம்மதி மட்டுந்தான் உனக்கு முக்கியம்.. இல்ல..?” அவர் விடாமல் என்னை துளைத்தெடுக்க, நான் இப்போது தளர்ந்து போனேன்.
“என்னை என்னதான் பண்ண சொல்ற..?”நான் அப்படி பரிதாபமான குரலில் சொல்ல, இப்போது பன்னீரும் சோர்ந்து போனார்.
என்னையே அமைதியாகவும், இரக்கமாகவும் ஒரு பார்வை பார்த்தார்.
அப்புறம் மெல்ல.. எனக்கு எதிரே கிடந்த சேரை இழுத்துப் போட்டுக் கொண்டு, அமர்ந்தார்.
மிக மிக சாந்தமான குரலில் மீண்டும் ஆரம்பித்தார்.
“இங்க பாரு அசோக்கு.. நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளு..”“சொ..சொல்லு..”“கயலை மறந்துடு அசோக்கு.. மலரை கட்டிக்கோ.. உன் மனசுல இருக்குற உறுத்தல்லாம்.. கொஞ்ச நாள்ல காணாம போயிடும்..!! நாம எல்லாருமே ஒண்ணா.. சந்தோஷமா இருக்கலாம் அசோக்கு..!!”“அது என்னால முடியாது பன்னீர்..” நான் வெறுப்பாக சொல்ல, பன்னீர் மீண்டும் டென்ஷனானார்.
“ப்ச்.. ஏண்டா இப்படி அடம் புடிக்கிற..? கேட்டா.. அவளை தவிர வேற யாருக்கும் என் வாழ்க்கைல எடம் இல்ல.. அவ மேல சத்தியம் பண்ணிருக்கேன்.. துரோகம்.. அது இதுன்னு சொல்லுவ..?”“…………..” நான் அமைதியாக இருந்தேன்.
“ஒன்னு தெரிஞ்சுக்கோ அசோக்கு.. ஒரு வருஷத்துல அவ உன்னை இப்படி தவிக்க விட்டுட்டு போவான்னு தெரியாம.. நீ அப்போ செஞ்ச அந்த சத்தியத்துக்கு.. இப்போ எந்த மதிப்பும் இல்ல..!! அவ கூடவே அதுவும் சேர்ந்து போயிடுச்சு..!!”“எனக்கும் இப்போ அந்த சத்தியம்லாம் பெருசா தெரியலை பன்னீர்.. எனக்கு இருக்குற பிரச்னை உனக்கு புரியலை..!! என் வாழ்க்கையை இன்னொரு பொண்ணோட பங்கு போட்டுக்குறதை என்னால நெனச்சுக்கூட பாக்க முடியலை..!!”“சும்மா வறட்டுப் புடிவாதம் புடிக்காத அசோக்கு..”“மனசுக்கு பிடிக்கலைன்னு சொல்றது.. பிடிவாதமா தெரியுதா உனக்கு..?”“செத்துப் போனவளை நெனச்சுக்கிட்டு.. உயிரோட இருக்குறவங்களை வதைக்கிறது மட்டும் நியாயமா தெரியுதா உனக்கு..?”“நீ என்னவேணா நெனச்சுக்கோ பன்னீர்.. எனக்கு கவலை இல்லை.. என் முடிவுலயும் எந்த மாற்றமும் இல்லை..!! நான் போறது போறதுதான்..!!”நான் தீர்மானமாக சொல்ல, பன்னீர் வாயடைத்துப் போனார்.
இன்னும் என்ன சொல்லி இவன் மனதை மாற்றுவது என்று தெரியாமல் குழம்பி, களைத்துப் போனார்.
என் முகத்தையே கொஞ்ச நேரம் பாவமாக பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்புறம் நீளமாய் ஒரு பெருமூச்சை வெளிப்படுத்துவிட்டு, தளர்ந்து போன குரலில் சொன்னார்.
“ம்ம்ஹ்ஹ்ம்ம்.. சரிப்பா.. பண்ணு..!! உன் இஷ்டப்படி என்னவேணா பண்ணு..!! ஆனா ஒன்னு..”என்று அவர் சற்றே நிறுத்த, நான் இப்போது நிமிர்ந்து அவரை கேள்வியாக பார்த்தேன்.
அவர் தொடர்ந்தார்.
“அப்பா, அம்மா இல்லாம நீ பட்ட கஷ்டத்தை.. உன் புள்ளையும் அனுபவிக்கட்டும்னு நெனச்சுட்ட..!! கயலோட ஆன்மான்னு ஒன்னு இருந்து.. அது மேல இருந்து இதெல்லாம் பாத்துட்டு இருந்ததுன்னு வச்சுக்கோ.. நீ செய்றதுலாம் பாத்து சத்தியமா அது சந்தோஷமா இருக்காது..!!”அவர் அழுத்தம் திருத்தமாக அந்த வார்த்தைகளை என் மீது எறிந்துவிட்டு, எழுந்து சென்றார்.
அவசரமாக சென்று கதவு திறந்து, அறையை விட்டு வெளியேறினார்.
அவர் சொன்ன வார்த்தைகள் என் இதயத்தில் ‘சுருக் சுருக்’கென்று குத்துவது மாதிரி இருந்தது.
அந்த வலி தந்த வேதனையில்.. நான் திகைத்துப் போய் அப்படியே அமர்ந்திருந்தேன்..!! அவர் அள்ளி வீசிச் சென்ற வார்த்தைகளில் நான் சற்றே குழம்பிப் போனேன்.
பன்னீர் சொல்வதில் எந்த அளவு நியாயம் இருக்கிறது..? மன உறுத்தல் கொஞ்ச நாட்களில் மறைந்து விடும் என்கிறாரே.. அது எந்த அளவுக்கு சாத்தியம்..? கயல் ஏற்படுத்தி சென்றிருக்கும் தாக்கம், என் மனதை விட்டு மறைவது அவ்வளவு எளிதா..? என்னுடைய இந்த முடிவு, அபியின் வளர்ச்சிக்கு எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்த போகிறது..? ஒருவேளை நான் தவறு செய்கிறேனோ..? கயலுடைய ஆன்மா என்னை விரும்புமா.. வெறுக்குமா..?? நிறைய கேள்விகள்.. திரும்ப திரும்ப மனதில் முளைத்த பதிலற்ற கேள்விகள்..!!இந்த மாதிரி ஒரு குழப்ப மனநிலையில்.. என்னுடைய முடிவு சரியா தவறா என்று எனக்குள்ளேயே பட்டிமன்றம் நடந்து கொண்டிருந்த ஒரு சூழ்நிலையில்.. மலர் அடுத்த நாள் இந்தப் பிரச்னையை வேறுபக்கமாக திசை திருப்பினாள்..!! அது நான் எதிரே பார்த்திராத.. வேறு மாதிரியான உணர்ச்சி அலைகளை.. என் உள்ளக்கடலில் பொங்கச் செய்தது..!!அடுத்த நாள் ஆபீசில் இருந்து கொஞ்சம் சீக்கிரமாகவே கிளம்பிவிட்டேன்.
நான்கு மணிக்கெல்லாம் ஆபீசில் இருந்து காரைக் கிளப்பி, தரமணி ரோட்டில் விரட்டியவன், ஐந்தே நிமிடங்களில் விஜயநகர் பஸ் ஸ்டாண்டை அடைந்தேன்.
காரை செலுத்திக்கொண்டே, எதேச்சையாக பஸ் ஸ்டாப் பக்கம் பார்வையை வீசியவன், சற்றே ஆச்சரியப்பட்டுப் போனேன்.
அங்கே நிழற்குடைக்கு கீழே மலர் நின்றிருந்தாள்.
இரண்டு கைகளாலும் கைப்பையை இறுக்கிப் பிடித்தவாறு, பஸ் வரும் திசையை தலையை நிமிர்த்தி வெறித்துக் கொண்டிருந்தாள்.
இந்த நேரத்தில் இவள் என்ன செய்கிறாள் இங்கே..?? அவள் கையில் அபியை வேறு காணோம்..?? எனக்கு புரியவில்லை..!! காரின் வேகத்தை குறைத்து, நிழற்குடையை தாண்டி ஓரமாய் நிறுத்தினேன்.
இரண்டு முறை ஹார்ன் அடித்தேன்..!! ஓரிரு வினாடிகளிலேயே மலர் திரும்பி காரை கவனிப்பதும், அப்புறம் சற்றே வேகமாக நடை போட்டு, காரை நோக்கி வருவதும் ரியர்வ்யூ மிரரில் தெரிந்தது.
முன்பக்க கார்க்கதவை திறந்து, மலர் எனக்கு அருகே அமர்ந்தாள்.
அமர்ந்ததுமே.. ‘உஷ்ஷ்ஷ்… ப்பா…’ என்று உதடுகளை குவித்து ஊதி.. சென்னை வெயிலின் உஷ்ணம் அவளுக்கு ஏற்படுத்தியிருந்த எரிச்சலை.. எனக்கு உணர்த்தினாள்..!! புடவைத்தலைப்பால் நெற்றியில் பூத்திருந்த வியர்வைத் துளிகளை ஒற்றி எடுத்தாள்..!! நான் இப்போது என் இடது கைநீட்டி.. கருப்பாய் இருந்த ஒரு குமிழ் திருகி.. காருக்குள் ஏ.
ஸி-யின் அளவை அதிகரித்தேன்..!! முகத்தை துடைத்துக் கொள்ளும் அவளையே ஓரக்கண்ணால் பார்த்தேன்..!! வெயிலில் அலைந்து திரிந்து அவள் களைத்திருந்தும்.. அது கூட அவளுடைய முகத்துக்கு ஒரு புதுவித கவர்ச்சியை கொடுக்கிறதே.. அது எப்படி..??“என்னத்தான்.. அப்படி பாக்குறீங்க..?”“அ..அது.. அது.. ம்ஹ்ஹ்ம்.. ஒண்ணுல்ல..!! வெ..வெளில பயங்கர வெயிலா..??”“ஆமாம்.. தாங்க முடியலை..!! கொஞ்ச நேரம் அப்படியே நின்னோம்னா.. பொசுக்கி சாம்பல் ஆக்கிடும் போல..?”அவள் சலிப்பாக சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, நான் காரை கிளப்பினேன்.
கியர் மாற்றி காரின் வேகத்தை அதிகரித்து, பள்ளிக்கரணை செல்லும் சாலையில் செலுத்தினேன்.
கார் சீரான வேகத்தில் சீற.. நான் சாலையை பார்த்துக்கொண்டே, மலரிடம் இயல்பான குரலில் கேட்டேன்.
“ம்ம்ம்…!! ஆ..ஆமாம்.. நீ என்ன இங்க தனியா..? அபியை எங்க..?”“நான் வர்றப்போ நல்லா தூங்கிட்டு இருந்தான்.. எழுப்ப மனசு வரலை.. அதான்.. ஷ்யாம் அம்மாட்ட கொடுத்து பாத்துக்க சொல்லிட்டு வந்தேன்..”“ஓ..!! நீ என்ன விஷயமா வந்த..?”“ஒரு ட்ரெயின் டிக்கெட் புக் பண்ண வந்தேன்..”“ட்ரெயின் டிக்கெட்டா..?? யாருக்கு..??”“எனக்குத்தான்..!!”“எங்க போறதுக்கு..?”“என் காலேஜ் மேட் ஒருத்தி.. அஹமதாபாத்ல இருக்குறாத்தான்..!! நான் அங்க போனா.. அவ ரூம்லேயே தங்கிக்கலாம்.. அவ கம்பெனிலயே எனக்கு வேலை வாங்கித் தர்றதா சொல்றா..!! நான் போயிடலாம்னு இருக்கேன்..!!”சாதாரணமாக அவள் சொல்ல, சடன் ப்ரேக் அடித்து நான் காரை நிறுத்தினேன்..!! அதிர்ந்து போனவனாய் அவளை திரும்பி பார்த்தேன்..!! திணறலாக கேட்டேன்..!!“ம..மலர்.. எ..என்ன சொல்ற நீ..?”“ஆமாத்தான்..!! நீங்க எங்கயும் போக வேணாம்.. இங்கயே இருங்க..!! நா..நான் போயிடுறேன்..!!”“ப்ச்.. அறிவில்லாம பேசாத மலர்..!! நீ எங்கயாவது போயிடனும்ன்றதுக்காக.. நான் அன்னைக்கு அப்படி பேசலை..!!”“ஐயோ.. நான் அப்படிலாம் நெனைக்கலை..!! யார் போனா என்ன.. நாம ஒண்ணா இருக்கக் கூடாது.. அவ்வளவுதான..?”“அதுக்காக..?? நீ போறேன்னு சொல்றதை.. என்னால ஒத்துக்க முடியாது மலர்.. நீ தப்பா முடிவேடுத்திருக்கேன்னு எனக்கு தோணுது..!!”“இல்லைத்தான்.. எனக்கு இதுதான் சரின்னு படுது..!! என்னாலதான உங்களுக்கு பிரச்னை.. நான் ஒதுங்கி போறதுதான் சரி..!!”“பிரச்னைக்கு நீ மட்டும் காரணம் இல்ல மலர்.. நானுந்தான்..!!”“நீங்க என்ன பண்ணுனீங்க..? அக்காவோட நினைவுலேயே நிம்மதியா வாழ்ந்துட்டு இருந்தீங்க.. நான்தான் அந்த நிம்மதியை கெடுத்திட்டேன்..!! உங்க மனசுல தேவையில்லாத சலனம் உருவாக காரணமாகி.. ‘எல்லாத்தையும் விட்டுட்டு எங்கயவாது போயிடுறேன்’னு நீங்க புலம்புற அளவுக்கு.. உங்களை கொண்டுவந்து விட்டுட்டேன்..!! போதும்த்தான்.. என்னால நீங்க பட்ட கஷ்டம்லாம் போதும்.. இனிமேலும் கஷ்டப்பட வேணாம்..!! நான் போயிடுறேன்..!! நீங்க இங்கயே.. எப்பவும் போல.. அப்பாவோடவும், அபியோடவும்.. நிம்மதியா இருங்க..!!”அவள் படபடவென பேசி முடிக்க, நான் கொஞ்ச நேரம் அமைதியாக அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
அப்புறம் என் முகத்தை வேறுபக்கமாக திருப்பிக்கொண்டு, சற்றே எரிச்சலும், சலிப்புமாய் கேட்டேன்.
“ம்ம்ம்… முடிவே பண்ணிட்ட போல..?”“ஆமாம்..!!”“உன்னோட முடிவு பன்னீருக்கு தெரியுமா..?”“ம்ம்.. நேத்துதான் சொன்னேன்..!! மொதல்ல திட்டுனாரு.. இதுலாம் சரியா வராதுன்னு சொன்னாரு..!! அப்புறம் நான் பேசி சம்மதிக்க வச்சுட்டேன்..!!”“ஓ.. அவரும் சம்மதிச்சாச்சா..? ம்ம்ம்… நல்லது..!! அப்போ.. நீ போறதுக்கு இதுதான் காரணமா..?? நான் கஷ்டப்படக் கூடாதுன்னுதான் இந்த முடிவா..?”“ஆமாம்..!! அதில்லாம..” அவள் சற்றே இழுக்க,“ம்ம்ம்.. சொல்லு..” நான் அவளை சொல்ல தூண்டினேன்.
“அபிக்கு என்னை விட நீங்க ரொம்ப முக்கியம்த்தான்..!! அவன் படிச்சு பெரிய ஆளா வரணும்னா.. நீங்க எப்போவும் அவன்கூட இருக்கணும்..!! என்னால நீங்க ரெண்டு பேரும் பிரிய வேணாம்.. அப்பாவையும் பையனையும் பிரிச்ச பாவம் எனக்கு வேணாம்..!!”“ஓஹோ..?? அப்பாவையும், பொண்ணையும் பிரிச்ச பாவம் மட்டும் எனக்கு வந்தா பரவாலையா..? ஐ மீன்.. உன்னையும் பன்னீரையும் பிரிக்கிற பாவம்..??”“அப்பாவுக்கு என்னை விட உங்களைத்தான் ரொம்ப பிடிக்கும்.. நீங்க பிரிஞ்சாத்தான் அது பாவம் ஆகும்.. அந்த பாவமும் எனக்குத்தான் வந்து சேரும்..!! அதுவுமில்லாம.. பொண்ணா பொறக்குற எல்லாருமே.. ஒருநாள் அப்பாவை பிரிஞ்சுதானே ஆகணும்..? அக்காவுக்கு கிடைச்ச மாதிரி ஒரு அதிர்ஷ்டம் எல்லாருக்கும் கிடைக்குமா..??”சொல்லும்போதே அவளுடைய குரலில் ஒருவித ஏக்கம் எட்டிப் பார்த்ததை என்னால் உணர முடிந்தது.
அதே நேரம் அவளுடைய முடிவில் அவள் உறுதியாக இருப்பதையும் புரிந்து கொள்ள முடிந்தது.
எல்லாவற்றிகும் இவள் பதில் வைத்திருக்கிறாள் என்றும் தோன்றியது.
இன்னும் என்ன சொல்லி இவளை தடுத்து நிறுத்துவது என்று யோசித்தேன்.
அப்புறம் சற்றே தயங்கி தயங்கித்தான் அந்தக்கேள்வியை கேட்டேன்.
“நீ.. நீ இல்லாம.. அ..அபியை யாரு பாத்துப்பா..?”“ஷ்யாமோட அம்மாட்ட பேசினேன்.. என் பிரச்னையை சொன்னேன்.. அபியை பாத்துக்க அவங்க சந்தோஷமா ஒத்துக்கிட்டாங்க..!! உங்களுக்கே தெரியும்.. அவங்க ரொம்ப நல்லவங்க..!! அபியை அவங்க நல்லா பாத்துப்பாங்கத்தான்.. அபி அவங்ககிட்ட நல்லபடியா வளருவான்..!!”“அபியைப் பிரிஞ்சி நீ இருந்துடுவியா..?”நான் அவரமாய் எறிந்த இந்தக்கேள்விக்கு, உடனடியாய் பதில் சொல்ல மலர் சற்று திணறினாள்.
பின்பு ஒருவாறு அந்த தடுமாற்றத்தை சமாளித்துக் கொண்டு சொன்னாள்.
“க..கஷ்டந்தான்.. ஆனா.. வே..வேற வழி இல்லையே..? இருந்துதான ஆகணும்..? சமாளிச்சுப்பேன்..!!”மலர் எடுத்திருக்கும் இந்த முடிவில் எனக்கு சம்மதம் இல்லை.
ஆனால் என்னால் எதிர்வாதம் செய்ய முடியாத அளவுக்கு எல்லாமே திட்டமிட்டு செய்திருக்கிறாள்.
இனி நான் என்ன சொன்னாலும் அவள் கேட்கப் போவதில்லை என்று தோன்றியது.
அவளுடைய முகத்தையே கொஞ்ச நேரம் இயலாமையுடன் பார்த்தேன்.
அப்புறம் நீண்டதாய் ஒரு பெருமூச்சை வெளிப்படுத்தினேன்.
சாவி திருகி காரை ஸ்டார்ட் செய்தேன்.
சாலையில் செலுத்திக் கொண்டே, மெல்லிய குரலில் கேட்டேன்.
“ட்ரெயின் என்னைக்கு புக் பண்ணிருக்குற..?”“நெக்ஸ்ட் தர்ஸ்டே..!!”– தொடரும்மலரே என்னிடம் மயங்காதே – 16.
ஆதாரம்:இணையம்