. Sex Stories In Tamil – என்னுடன் கல்லூரியில் படித்த நண்பன் ஒருவன் இருக்கிறான்.
முகுந்த் என்று பெயர்.
அவனுக்கு ஒரு தம்பி.
வைபவ்..!! வைபவ் ஹைதராபாத்தில் ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்கிறான்.
கை நிறைய சம்பாதிக்கிறான்.
அவனுக்கு பெண் பார்க்கிறார்கள் என்று தகவல் எனக்கு முகுந்த் மூலமாக கிடைத்தது.
நான் பன்னீரிடம் பேசி, மலருடைய ஜாதகத்தை அவர்களுக்கு அனுப்பி வைத்தேன்.
ஜாதகம் பொருந்தியிருந்தது.
மலரை ஒரு நாள் பெண் பார்க்க வருவதாக கேட்டிருந்தார்கள்.
கயலின் நினைவு நாள் சென்ற பிறகு ஒருநாள் வாருங்கள் என்று, நானும் சொல்லியிருந்தேன்.
அவர்கள் பெண்பார்க்க வருவதற்கு முதல்நாள்தான் அது நடந்தது.
வேலை நாட்களில் மதிய உணவு, நானும் பன்னீரும் சேர்ந்து சாப்பிடுவதுதான் வழக்கம்.
சரியாக 12.
30-க்கெல்லாம் பன்னீர் வந்து என் கேபின் கதவை தட்டுவார்.
‘வேலை பாக்குறது மாதிரி நடிச்சது போதும்.. வெளிய வா.. சாப்பிட்டு வரலாம்..’ என்பார்.
நானும் என்னவேலை பார்த்துக் கொண்டிருந்தாலும், இரண்டே நிமிடங்களில் தயாராகி அவருடன் கிளம்பிவிடுவேன்.
கம்பெனி கேண்டீனில்தான் சாப்பாடு.
பத்தே ரூபாயில் அம்சமான அளவு சாப்பாடு..!!அன்று சாப்பிடும்போது.. அப்பளத்தை கை வைத்து நொறுக்கிக்கொண்டே பன்னீர் சொன்னார்..!!“அவளுக்கு.. கொழுப்பு ரொம்ப ஜாஸ்தியா போயிடுச்சு அசோக்கு..”“யாருக்கு..?” சாம்பாரை விரலால் கலக்கிக்கொண்டே நானும் குழப்பமாய் கேட்டேன்.
“மலருக்கு..!!”“ஏன்.. என்னாச்சு..??”“அந்த மாப்பிள்ளை வீட்டுக்காரங்களை பொண்ணு பார்க்க வரவேணாம்னு சொல்ல சொல்றா..!!” பன்னீர் சொல்ல நான் சற்றே அதிர்ந்தேன்.
“ஏன்..?”“அவளுக்கு கல்யாணம் வேணாமாம்.. இப்படியே இருந்திட போறாளாம்..”“என்ன சொல்ற பன்னீர்..? அவங்க நாளைக்கு பொண்ணு பார்க்க வர்றதா சொல்லிருக்காங்க..”“தெரியும் அசோக்கு..”“அப்புறம்..?? கடைசி நேரத்துல இப்படி சொன்னா..? நான்தான் போன வாரமே உன்னை அவகிட்ட சொல்ல சொன்னேன்ல..?”“சொல்லிட்டேன் அசோக்கு.. அவ அன்னைக்கே வேணாம்னுதான் சொன்னா..!! உன்கிட்ட சொன்னா.. நீ மனசு கஷ்டப்படுவேன்னு நான் சொல்லல..!! அவளை பேசி சம்மதிக்க வச்சிடலாம்னு நெனச்சேன்.. ஆனா.. இப்போ அது முடியாது போல இருக்கு.. புடிவாதமா இருக்குறா.. காலைல அவளுக்கும் எனக்கும் பெரிய சண்டையா போச்சு..!!”“இப்போ என்ன பண்றது..? அந்தப் பையன் வேற ஹைதராபாத்ல இருந்து இதுக்காக கிளம்பி வர்றான் பன்னீர்..”“நீ அவகிட்ட பேசு அசோக்கு.. நீதான் அவளுக்கு லாயக்கு.. நீ சொன்னாத்தான் அவ கேட்பா..!! ரொம்ப சிலுப்புனான்னா.. செவுள்லயே நாலு அறை வுடு..”எனக்கு நிஜமாகவே மலர் மீது பயங்கர எரிச்சல் வந்தது.
என்ன பெண் அவள்..?? அவளுக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்று நாங்கள் இங்கு கிடந்தது இவ்வளவு சிரமப் படுகிறோம்.. இவளானால் கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாமல்..?? கல்யாணமே வேண்டாம் என்றால்.. என்ன பேச்சு அது..??எனக்கு அவளிடம் பேசவேண்டும் என்று தோன்றியது.
பன்னீரை பார்த்தால் அவளுக்கு சற்று இளக்காரம்தான்.
அவர் சொல்வதை காதில் போட்டுக் கொள்ள மாட்டாள்.
அழகாக அவரை சமாளித்து விடுவாள்.
ஆனால் என்னிடம் அப்படி இருக்க மாட்டாள்.
என்னிடம் நிறைய மரியாதை உண்டு அவளுக்கு.
நான் சொல்லும் வார்த்தைகளுக்கு நிறைய மதிப்பு கொடுப்பாள்.
பன்னீர் சொல்வது மாதிரி நான்தான் இதற்கு சரியான ஆள்.
நானே பேசுகிறேன்.
அன்று மாலை சீக்கிரமே ஆபீசில் இருந்து கிளம்பிவிட்டேன்.
மலரிடம் தனியாக பேசுவதற்காகத்தான்..!! நாலு மணிக்கெல்லாம் வீட்டை அடைந்தேன்.
கதவை திறந்த மலர் என்னை நம்பமுடியாமல் பார்த்தாள்.
சற்றே ஆச்சரியமான குரலில் கேட்டாள்.
“என்னத்தான்.. இன்னிக்கு சீக்கிரமே வந்துட்டீங்க..?”“ஒண்ணுல்ல மலர்.. சும்மாத்தான்..”“உ..உடம்புக்கு ஏதாவது..??” ஆச்சரியமான அவளது குரல் இப்போது பட்டென கவலையாக ஒலித்தது.
“அதுலாம் ஒண்ணுல்ல.. சும்மாதான் கெளம்பி வந்தேன்..”“ம்ம்.. காபி போடவா..?”“போடு..!! அபி என்ன பண்றான்..?”“தூங்குறான்த்தான்..”நான் உடை மாற்றிக்கொண்டு, முகம் கழுவிவிட்டு, ஹாலில் வந்து அமர்ந்தேன்.
கொஞ்ச நேரத்தில் மலர் காபி கப்புடன் வந்தாள்.
கொடுத்துவிட்டு, நான் காபி உறிஞ்சுவதையே கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
நான் சற்றே தயக்கமான குரலில் சொன்னேன்.
“உ..உன்கிட்ட கொஞ்சம் பேசணும் மலர்..”“எ..என்னத்தான்..?” அவளிடமும் இப்போது லேசான தடுமாற்றம்.
“உக்காரு.. சொல்றேன்..”நான் சோபாவை நோக்கி கைநீட்ட, அவள் எனக்கு எதிரே தயங்கி தயங்கி அமர்ந்தாள்.
என்ன விஷயம் பேசப் போகிறேன் என்று அவள் கணித்திருப்பாள் என்று நினைக்கிறேன்.
ஒரு மாதிரி அவஸ்தையாக நெளிந்தாள்.
நான் மெல்ல ஆரம்பித்தேன்.
“வைபவ்னு ஒரு பையன் இருக்குறான் மலர்..”“ம்ம்.. அ..அப்பா சொன்னார்..”“ஏன் வேணாம்ன்ற..?”“எ..எனக்கு.. எனக்கு பிடிக்கலைத்தான்..”“என்ன பிடிக்கலை..?”“இ..இந்த கல்யாணம்..”“ஏன்..? அந்தப்பையனை பாக்காம.. அவனை பத்தி எதுவுமே தெரிஞ்சுக்காம.. பிடிக்கலைன்னு சொன்னா என்ன அர்த்தம்..?”“அந்தப்பையனை பிடிக்கலைன்னு சொல்லல.. எனக்கு கல்யாணமே பிடிக்கலை.. நான் இப்படியே இருந்திடுறேன்த்தான் ..”“அதான் ஏன்னு கேக்குறேன்..?”“ப்ளீஸ்த்தான் என்னை கம்பெல் பண்ணாதீங்க..” அவள் நழுவ முயல,“காரணம் சொல்லு.. நான் கம்பெல் பண்ணமாட்டேன்..” நான் விட மறுத்தேன்.
மலர் இப்போது பட்டென்று அமைதியானாள்.
என்னுடைய பார்வையை சந்திக்க துணிவில்லாமல், தலையை கவிழ்ந்து கொண்டாள்.
கைவிரல்களை கோர்த்துக்கொண்டு நெறித்தாள்.
நானும் கொஞ்ச நேரம் அவளையே அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தேன்.
அப்புறம் காலி கப்பை டீப்பாயில் வைத்தபடி, என் மனதில் உறுத்திக் கொண்டிருந்த அந்த கேள்வியை கேட்டேன்.
“யாரையாவது லவ் பண்றியா மலர்..?”மலரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.
என் கேள்வி அவள் காதில் விழுந்ததா என்று கூட எனக்கு குழப்பமாக இருந்தது.
நான் இப்போது சற்றே எரிச்சலானேன்.
“உன்னைத்தான் கேக்குறேன்.. யாரையாவது லவ் பண்றியா..?”“………”“இப்டி உம்ம்னு இருந்தா.. என்ன அர்த்தம்.. ஆமாம் இல்லைன்னு ஏதாவது ஒன்னு சொல்லலாம்ல..? இங்க பாரு.. பன்னீர்கிட்ட நீ சொல்ல தயங்கிருக்கலாம்.. ஆனா என்கிட்டே உனக்கு..” நான் பேசிக்கொண்டிருக்கும்போதே,“ஆமாம்..!!” என்றாள் மலர் பட்டென.
நான் அதிசயித்து போனேன்.
பதில் சொல்ல அவளை தூண்டியிருந்தாலும், ‘இல்லை..!!’ என்ற பதிலைத்தான் நான் எதிர்பார்த்திருந்தேன்.
அந்த வார்த்தை வந்து விழும் என்றுதான் என் காதுகளும் காத்திருந்தன.
அவளுடைய உதடுகள் இப்போது படபடத்தன.
கைவிரல்கள் நடுநடுங்கின.
மலர் யாரையோ காதலிக்கிறாள் என்பது எனக்கு நம்ப முடியாத செய்தி.
அவளிடம் காதலுக்கான அறிகுறியை, இத்தனை நாளாய் கொஞ்சம் கூட நான் கண்டதில்லை.
வீட்டை விட்டு எங்கேயுமே செல்லாமல், வெளி ஆட்கள் யாருடனும் பேசாமல்.. யாரை காதல் செய்கிறாள் இவள்..??“ம..மலர்.. நெ..நெஜமாவா சொல்ற..?”“ம்ம்..”“எ..என்னால நம்பவே முடியலை..!! ம்ம்ம்.. ச..சரி.. யார் அந்த பையன்..?”“அது வேணாம்த்தான் ப்ளீஸ்..” அவள் அவசரமாய் மறுத்தாள்.
“ப்ச்..!! யார்னு சொல்லலைன்னா எப்படி..?”“வேணாம்னு சொல்றேன்ல.. விடுங்க..”“உன்கூட படிச்சவனா..?”“ம்ஹூம்..”“பக்கத்து வீட்டு ஆண்ட்டி பையன் ஷ்யாமா..? நீ கூட அடிக்கடி அவன் கூட பேசிட்டு இருப்பியே.. ம்ம்..?அவனா..?”“இ..இல்ல..”“ஆன்லைன்ல ஷேர் ட்ரேடிங்லாம் பண்ற.. அதுமூலமா யாராவாது பழக்கமா..? ஆன்லைன் லவ்வா..?”“ஐயோ.. அதுலாம் இல்லைத்தான்..”“அப்புறம் யாரு மலர்..? யார்னு சொன்னாத்தான.. நான் ஏதாவது பண்ண முடியும்..?”“நீங்க எதுவும் பண்ண வேணாம்.. இதை இப்படியே விட்டுடுங்க..”“ஏன் அப்படி சொல்ற..?”“நான் மட்டுந்தான் லவ் பண்றேன்.. அவருக்கு என் மேல விருப்பம் இல்ல..!!”“ஓ..!! சரி பரவால்ல.. யார்னு சொல்லு.. நான் தெரிஞ்சுக்குறேன்..!!”“ப்ளீஸ்த்தான்.. வேணாம்..!!”“ப்ச்..!! அடம் பிடிக்காத மலர்.. சொல்லு..!!”“வேணாம்.. சொன்னா நீங்க கோவப்படுவீங்க..”“இல்ல.. கோவப்பட மாட்டேன்.. ப்ராமிஸ்..!! சொல்லு மலர்.. ப்ளீஸ்..!! யார் அது..?”“…….
”“இப்டி சைலண்ட்டா இருந்து இரிடேட் பண்ணாத மலர்.. இப்போ சொல்லப் போறியா.. இல்லையா..?”என்னுடைய குரல் இப்போது எரிச்சலாகவும், கோவமாகவும் ஒலித்தது.
மலர் அதன் பிறகும் கொஞ்ச நேரம் எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்தாள்.
நான் அவளையே முறைத்து பார்த்துக் கொண்டிருந்தேன்.
அப்புறம் திடீரென்று என்ன நினைத்தாளோ..?? ஒரு முடிவுக்கு வந்தவள் மாதிரி, பட்டென அவளுடைய முகத்தை நிமிர்த்தினாள்.
என்னுடைய கண்களை கூர்மையாக பார்த்தவாறு, அழுத்தம் திருத்தமான குரலில் சொன்னாள்.
“நீங்கதான்..!! உங்களைத்தான் நான் லவ் பண்றேன்..!!”அவ்வளவுதான்..!! உச்சபட்ச அதிர்ச்சியில் நான் அப்படியே உறைந்து போனேன்..!! சுத்தமாய் அதை எதிர்பார்க்கவே இல்லை நான்..!! இப்போது எனது உதடுகள் படபடக்க ஆரம்பித்தன..!! எனது கைவிரல்கள் நடுநடுங்கின.
தடுமாறினேன்..!! வார்த்தைகள் என்னிடமிருந்து திணறலாய் வெளிப்பட்டன.
“ம..மலர்.. வெ..வெளையாடாத… ப்ளீஸ்..”“இல்லத்தான்.. நான் சீரியஸாத்தான் சொல்றேன்..!! ஐ லவ் யூ..!!” அவளுடைய குரலில் ஒரு அசாத்திய உறுதி தெரிந்தது.
“அறைஞ்சுடுவேன் மலர்..” நான் கோவமாய் கத்தினேன்.
“சொன்னேன்ல..? யார்னு சொன்னா நீங்க கோவப்படுவீங்கன்னு நான் சொன்னேன்ல..?”“மடத்தனமா பேசுனா.. கோவம் வராதா..?”“மனசுல உள்ளதை பேசுனா.. மடத்தனமா உங்களுக்கு தெரியுதாத்தான்..?”“எ..என்னைப் போய்.. லவ் பண்றேன்னு சொல்றியே.. அது மடத்தனம் இல்லாம என்னது..?”“ஏன்.. உங்களுக்கு என்ன..?”“நா..நான் உன் அக்காவோட ஹஸ்பண்ட்…”“அக்காதான் இப்போ இல்லையே..?”“நான் ஒரு கொழந்தைக்கு அப்பா மலர்..”“அபிக்கு நான் அம்மாவாகி ரொம்ப நாளாச்சுத்தான்..”“புரியாம பேசாத..!! நா..நான்.. நான் உன் அக்காவையே மனசுல நெனச்சு வாழ்ந்துட்டு இருக்கேன்..!!”“அதுதான்.. அதுதான் உங்க மேல எனக்கு காதல் வரவே காரணம்..!!”“ப்ச்.. கயலை இந்த ஜென்மத்துல என்னால மறக்க முடியாது மலர்..”“எத்தனை ஜென்மம் எடுத்தாலும்.. என் காதலும் மாறாதுத்தான்..!!”“அறைஞ்சு பல்லை உடைச்சிடுவேன்..”“என்னவேனா பண்ணிக்கோங்க.. என் மனசை மாத்திக்க முடியாது..!! சொன்னா சொன்னதுதான்.. எனக்கு கல்யாணம்னு ஒன்னு நடந்தா.. அ..அது உங்களோடதான்..!!”அவள் ஆவேசமாக சொல்லிக்கொண்டிருக்கும்போதே, உள்ளே அபி விழித்துக்கொண்டு, அழுகிற சத்தம் பெரிதாக கேட்டது.
உடனே.. ‘இதோ.. வந்துட்டேன்டா கண்ணா..’ என்று மலர் எழுந்து உள்ளே ஓடினாள்.
அவசரமாய் பால் கலந்து ஃபீடிங் பாட்டிலில் அடைத்துக்கொண்டாள்.
குழந்தையை தூக்கிக்கொண்டு, ஹாலுக்கு வந்து என் எதிரே அமர்ந்தாள்.
அபி பசியில் இருந்திருப்பான் போல.
அவன் பருக பருக, பரபரவென பாட்டிலில் இருந்த பாலின் அளவு குறைந்து கொண்டிருந்தது.
நான் எதுவும் பேச தோன்றாமல், சோர்ந்து போனவனாய் சோபாவில் அமர்ந்திருந்தேன்.
செயலற்றுப்போய் அசைவில்லாமல் அமர்ந்திருந்தேன்.
மனதில் பலவித குழப்பங்கள் இப்போது..!! தலையை குனிந்து நெற்றியை கீறிக் கொண்டிருந்தேன்.
கொஞ்ச நேரம்..!! அப்புறம் மெல்ல தலையை நிமிர்த்தி, மலரை ஏறிட.. அவள் இப்போது என்னையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்..!! அதே பார்வை..!! அன்று இரவு பார்த்தாளே.. அதே.. மயக்கும் மந்திரத்தனமான பார்வை..!! காதல் பார்வை..!!!!“இங்க பாருங்கத்தான்.. உங்க மனசு எனக்கு புரியுது..!! உங்களுக்கு இது ஷாக்கா இருக்கும்னு எனக்கும் தெரியும்..!! நீங்க மனசை போட்டு ரொம்பலாம் அலட்டிக்க வேணாம்.. நான் உங்களை தொந்தரவு பண்ண மாட்டேன்.. என்னை கல்யாணம் பண்ணிக்கோங்கன்னு சொல்லி.. உங்களை கட்டாயப்படுத்த மாட்டேன்..!! அதே மாதிரி.. நீங்களும் என்னை வேற யாரையாவது கட்டிக்க சொல்லி கட்டாயப் படுத்தாதீங்க.. ப்ளீஸ்..!! என்னால அது முடியாது..!!”“என்னை கல்யாணம் செய்துக்கணும்னு நெனச்சா.. நீ காலம் பூரா இப்படியேதான் இருக்கணும் மலர்..!!”“பரவாலத்தான்.. இப்படியே உங்க முகத்தையும் அபி முகத்தையும் பாத்துக்கிட்டு.. காலத்தை கழிச்சுடுவேன் நான்.. கவலை இல்லை எனக்கு..!!”அவள் உறுதியாக சொல்ல, நான் ஓரிரு வினாடிகள் அவளுடைய கண்களையே கூர்மையாக பார்த்தேன்.
அப்புறம் ஒரு பெருமூச்செறிந்தவாறு சொன்னேன்.
“ம்ம்ஹ்ஹ்ஹ்ம்ம்.. பன்னீருக்கு தெரிஞ்சா ரொம்ப வருத்தப்படுவாரு மலர்..!!”“சொல்லித்தான் ஆகணும்..!! நீங்களே முடிவு பண்ணுங்க.. நீங்க சொல்றதா.. இல்ல நான் சொல்றதான்னு..!!”“அப்போ.. நீ உன் மனசை மாத்திக்கமாட்ட..?”“முடியாதுத்தான்..!! கஷ்டம்..!!”“முயற்சி செஞ்சு பாக்கலாம்ல..?”“அக்காவை மறக்க நீங்க ஏன் முயற்சி பண்ணல..?”“உன்கூட விவாதம் பண்ண நான் விரும்பலை மலர்.. இது உன் வாழ்க்கை..!! எது நல்லதுன்னு நீயே நல்லா யோசி.. யோசிச்சு நல்ல முடிவா எடு..!!”நான் இறுதியாக சொல்ல, அப்புறம் மலர் எதுவும் பேசவில்லை.
வாயை இறுக மூடிக்கொண்டாள்.
அபி பாலை காலி செய்துவிட்டு, தூக்கத்தை விட்ட இடத்திலிருந்து தொடர ஆரம்பித்தான்.
மடியில் கிடந்த அவனுக்கு இதமாக, மலர் தன் காலை சீரான வேகத்தில் ஆட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
அப்படி காலை ஆட்டிக் கொண்டே, கருவிழிகளை ஒருபக்கமாய் நகர்த்தி என்னையே குறுகுறுவென பார்த்துக் கொண்டிருந்தாள்.
என்னை ஊடுருவி.. என் இதயத்தை துளைத்தெடுப்பது மாதிரியான பார்வை..!! அந்த பார்வையின் அனலை தாங்க முடியாமல், நான் தலையை குனிந்து கொண்டேன்.
அப்போதுதான் கதவை தள்ளிக்கொண்டு பன்னீர் உள்ளே வந்தார்.
நாங்கள் இருவரும் அமர்ந்திருந்த நிலையை பார்த்து அவர் சற்று குழம்பிப் போனார்.
நான் மலருடன் பேச்சு வார்த்தை நடத்த வந்திருக்கிறேன் என்று அவருக்கு தெரியும்.
‘நான் தெளிவாக அமர்ந்திருப்பேன்.. மலர் குழப்பமாக தலை கவிழ்ந்திருப்பாள்..’ என்று எதிர்பார்த்திருப்பார் போலும்.
இங்கே நிலைமை தலைகீழாக இருக்க, அவருக்கு அது குழப்பத்தை உண்டு பண்ணியிருக்க வேண்டும்.
அது அவரது முகத்திலேயே தெளிவாக தெரிந்தது.
அப்புறம் அன்று முழுவதும் யாரும் அந்த விஷயம் பற்றி பேசிக்கொள்ளவில்லை.
சாப்பிடும்போது கூட பொதுவான விஷயங்கள்தான் பேசிக்கொண்டோம்.
நான் மலரை சம்மதிக்க வைத்திருப்பேன் என்று பன்னீராக ஒரு முடிவு கட்டியிருப்பார் போலிருக்கிறது.
சகஜமாக இருந்தார்.
அடுத்த நாள் காலை நான் ஆபீஸ் கிளம்பி ரெடியாகி, என் அறையை விட்டு வெளியே வந்தபோது, பன்னீர் கிளம்பி சென்றிருந்தார்.
நான் மலரை தேடினேன்.
கிச்சனில் இருந்து சப்தம் வந்தது.
எட்டிப் பார்த்தேன்.
மலர் பாத்திரங்கள் கழுவிக் கொண்டிருந்தாள்.
என்னை பார்த்ததும்,“ரெடியாயிடுச்சுத்தான்.. ஒரு அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணுங்க.. எடுத்து வைக்கிறேன்..”சொல்லிவிட்டு, அவளுடைய வேலையை தொடர்ந்தாள்.
நான் இப்போது கிச்சனுக்குள் நுழைந்து, அவளை நெருங்கினேன்.
அவளுக்கு அருகே சென்று, என் கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு, அவளையே முறைத்து பார்த்தேன்.
மலர் இப்போது நிமிர்ந்து என்னை பார்த்தாள்.
நெற்றி வியர்வையை புறங்கையால் துடைத்துக் கொண்டே மென்மையாக கேட்டாள்.
“என்னத்தான்..?”“என்ன முடிவு பண்ணிருக்குற..?” நான் இறுக்கமான குரலில் கேட்டேன்.
“எதை பத்தி..?”“உன் மனசை மாத்திக்கிறதை பத்தி..”“நான் எப்போ என் மனசை மாத்திக்கிறதா உங்ககிட்ட சொன்னேன்..?”“நல்லா யோசின்னு நேத்து சொன்னனே..?”“ப்ச்.. காமடி பண்ணாதீங்கத்தான்..!! நீங்க எப்படி மனசுக்குள்ள அக்காவோட குடும்பம் நடத்திட்டு இருக்கீங்களோ.. அது மாதிரிதான் நானும் உங்களோட குடும்பம் நடத்திட்டு இருக்குறேன்..!! நேத்து வந்து நீங்க ரெண்டு டயலாக் விட்டவுடனே.. என் மனசு பட்டுன்னு மாறிடுமா..?” Bra Kalattum Sex Stories In Tamil– தொடரும்.
ஆதாரம்:இணையம்