இருண்ட

மாங்கல்யம் தந்துனானே 14

🇮🇳 தமிழ்
வேகம்: 1.0x
நிலை: தயார்
×

இயக்க அமைப்பு உதவி

நீங்கள் ஏற்கனவே Chrome/Edge ஐப் பயன்படுத்தினாலும், இன்னும் இயக்க முடியவில்லை என்றால், உங்கள் தொலைபேசி/PC அமைப்புகளைச் சரிபார்க்கவும்.
நீங்கள் கேட்க விரும்பும் மொழியைப் பயன்படுத்தி, TTS இன்ஜின் செயலில் இருப்பதை உறுதி செய்யவும்.

Android மற்றும் பிற OS பயனர்களுக்கு

Android, Harmony, Lineage, Ubuntu Touch, Sailfish, ColorOS / FuntouchOS, hyperOS போன்ற பயனர்களுக்கு
மெனு அணுகல்: அமைப்புகளைத் திற > அணுகல்தன்மை > உரையிலிருந்து பேச்சு வெளியீடு.
அது இல்லை என்றால், அமைப்புகள் > மேலே உள்ள தேடல் பெட்டி > "text-to-speech" அல்லது "text" என உள்ளிடவும்
பிறகு உரையிலிருந்து பேச்சு அல்லது அதை ஒத்த ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
மொழியைச் சேர்க்க, கியர் ஐகானைக் கிளிக் செய்யவும் ⚙ > குரல் தரவை நிறுவு உங்களுக்குத் தேவையான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.

iOS பயனர்களுக்கு

அமைப்புகள் > அணுகல்தன்மை > பேசப்படும் உள்ளடக்கம் என்பதற்குச் செல்லவும்
அல்லது அமைப்புகள் > மேலே உள்ள தேடல் பெட்டி > "பேசப்படும் உள்ளடக்கம்" என உள்ளிட்டு என்டர் செய்யவும்
மொழியைச் சேர்க்க குரல்கள் என்பதைத் தேர்ந்தெடுத்து குரலைத் தேர்ந்தெடுக்கவும்

PC MacOS பயனர்களுக்கு

மெனு அணுகல்: Apple மெனுவைக் கிளிக் செய்யவும் () > கணினி அமைப்புகள் > அணுகல்தன்மை > பேசப்படும் உள்ளடக்கம்.

Windows பயனர்களுக்கு

Windows 10 & 11
மெனு அணுகல்: தொடக்கத்தைத் திற > அமைப்புகள் > நேரம் & மொழி > பேச்சு.
Windows 7 & 8
கட்டுப்பாட்டு பலகம் > அணுகல் எளிமை > பேச்சு அங்கீகாரம் > உரையிலிருந்து பேச்சு
Windows XP
தொடக்கம் > கட்டுப்பாட்டு பலகம் > ஒலிகள், பேச்சு மற்றும் ஆடியோ சாதனங்கள் > பேச்சு
Windows 2000 & ME
தொடக்கம் > அமைப்புகள் > கட்டுப்பாட்டு பலகம் > பேச்சு
Linux, ChromeOS, FreeBSD போன்ற பிற வகை PC பயனர்களுக்கு.
Google, Bing போன்ற தேடுபொறிகளில் உரையிலிருந்து பேச்சு வசதியை இயக்குவதற்கான அமைப்புகளைத் தேடவும்

குறிப்பு தற்போது, இந்தப் பக்கம் உங்கள் சாதனத்தின் இன்ஜினுக்கு ஏற்ப செயல்படுகிறது.
எனவே உருவாக்கப்படும் ஒலி உங்கள் சாதனத்தின் TTS இன்ஜினைப் பின்பற்றுகிறது.

மாங்கல்யம் தந்துனானே 14

. Sex Stories In Tamil – நான் அவசர அவசரமாய் கண்களை துடைத்துக் கொண்டு எழுந்தேன்.
பரபரப்பாய் கிச்சனுக்கு ஓடினேன்.
சாதம் ஆறிப் போயிருந்தது.
சாம்பாரும், பொரியலும் கொஞ்சமாய் சூடு செய்தேன்.
ஐந்தே நிமிடத்தில் எல்லாம் ரெடி செய்து டைனிங் டேபிளில் எடுத்து வைத்தேன்.
“ம்ம்.. சாப்பிடுங்க..”நான் சாதம் பரிமாற, அவர் அவசர அவசரமாய் அள்ளி வாய்க்குள் போட்டார்.
ரொம்பவும் பசித்து விட்டது போலிருக்கிறது..!!!!! அழுகை வந்தது எனக்கு..!!“ஸாரிப்பா..!!” என்றேன் அவர் தலையை கோதியவாறு.
“பரவால்ல பவி.. வா.. நீயும் உக்காந்து சாப்பிடு..”“இல்ல.. நீங்க மொதல்ல சாப்பிடுங்க..”“ப்ச்.. வான்னு சொல்றேன்ல.. உக்காரு..!!” நானும் அமர, அவரே ஒரு ப்ளேட்டில் சாதம் பரிமாறி சாம்பார் ஊற்றினார்.
“சாப்பிடு..!!” என்றார் கனிவான குரலில்.
நான் சாதத்தை பிசைந்தேன்.
இருவரும் ஒருவாய் அள்ளி வைத்தபோது.. சுவர்க்கடிகார குருவி புதுவருடம் பிறந்ததை கூச்சலிட்டு அறிவிக்க ஆரம்பித்தது.
நானும் அவரும் திரும்பி, வெளியே வந்து கூவிய அந்த குருவியையே சில வினாடிகள் பார்த்துக் கொண்டிருந்தோம்.
அப்புறம் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து, தெளிந்த மனதுடன் காதலாக புன்னகைத்துக் கொண்டோம்.
அவ்வளவுதான்.. சாப்பிட ஆரம்பித்தோம்..!!“நான் சொல்றதை கொஞ்சம் கோவம் இல்லாம கேக்குறியா பவி..?” அவர் மெல்ல ஆரம்பித்தார்.
“சொல்லுங்கப்பா.. எனக்கு இப்போ கோவம்லாம் இல்லை..!!”“ரேணுகா.. ரொம்ப ரொம்ப நல்ல பொண்ணுடி.. பெரிய பணக்கார ஃபேமில பிறந்தவ..!!”“ம்ம்..”“அவ ஹஸ்பன்ட் யாருன்னு சொன்னா நீ ஆச்சரியப் படுவ..”“யா..யாரு..?”“அவ வீட்டுல ட்ரைவரா வேலை பாத்தவரோட பையன்.. ஏழு எட்டு வருஷமா லவ் பண்ணி.. அவங்க வீட்டுல எல்லாரும் எதிர்த்ததை மீறி.. எல்லா சொத்தையும் உதறிட்டு ஓடிவந்து.. அவரை கட்டிக்கிட்டவ..!! சும்மா பேச்சுக்கு அவரை கொறை சொல்லுவா.. ஆனா அவர் மேல அவ உயிரையே வச்சிருக்கா..!! அவளைப்போய்.. வேற புருஷனுக்காக ஏங்குறான்னு தயவு செஞ்சு தப்பா சொல்லாத பவி..”அவர் சொல்ல சொல்ல, என்னை யாரோ சாட்டையால் ‘சுளீர்.. சுளீர்..’ என அடிப்பது மாதிரி இருந்தது.
தவறு செய்துவிட்டோமோ என்ற குற்ற உணர்வு உள்ளுக்குள் குபுகுபுவென கொப்பளிக்க ஆரம்பித்தது.
“ம்ம்..” என்றேன் தெம்பே இல்லாத குரலில்.
“எத்தனை தடவை ‘நீ என் தம்பி மாதிரிடான்’னு எங்கிட்ட சொல்லிருப்பா தெரியுமா..? நானும் அவளை என்னோட இன்னொரு அக்காவாத்தான் நெனைக்கிறேன் பவி.. அப்டித்தான் நான் அவகூட பழகுறேன்..!! தயவு செஞ்சு எங்க அக்கா தம்பி உறவை சந்தேகப்படாத.. ப்ளீஸ்..!!” அவர் கெஞ்சும் குரலில் கேட்க, எனக்கு அழுகை வரும்போல் ஆனது.
“சேச்சே.. அ..அதெல்லாம் இல்லைப்பா..!!” என்றேன் பதற்றமாக.
“அவ ஏற்கனவே.. கொழந்தை இல்லைன்ற கொறையை நெனச்சு நெனச்சு.. தெனம் தெனம் தனியா அழறா..!! பாவம்டி அவ..!! உன் மனசுல இப்டிலாம் சந்தேகம் இருக்குன்னு தெரிஞ்சா.. சத்தியமா அவளால தாங்க முடியாது.. துடிச்சுப் போயிடுவா..!!”என்னால் அதற்கு மேலும் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.
கண்ணீர் முத்துகள் கண்களில் இருந்து வெளிப்பட்டு கன்னத்தில் உருண்டோடின.
தவறு செய்துவிட்டேன் என்று தெளிவாக தெரிந்தது.
‘என் புருஷன் எனக்குத்தான்’ என்ற என்னுடைய பொசஸிவ் உணர்வினால், ‘என் தம்பி மாதிரி இவன்..’ என்று சகஜமாக பழகிய ஒருத்தியின் களங்கமற்ற உணர்வை நசுக்கி சிதைத்திருக்கேன்.
என் மனதில் சந்தேகம் இருப்பதை இனிமேல் அறியப் போகிறாளா..? என்னுடைய செய்கைகள் ஏற்கனவே அவளுக்கு உணர்த்தியிருக்கும்.
அப்படியானால்.. இவர் சொன்னமாதிரி அவள் எப்படி துடித்துப் போயிருப்பாள்..?அப்புறம் நானும் அவரும் ரேணுகாவைப் பற்றி பேசவில்லை.
ஆனால் அன்று இரவும் அடுத்த நாளும், அவளே என் மனம் எங்கும் நிறைந்திருந்தாள்.
கையில் வீட்டு சாவி வைத்து நீட்டினாள்.. கள்ளம் கபடம் இல்லாமல் கலகலவென சிரித்தாள்.. கன்னத்தில் கை வைத்து படக்கென பயந்தாள்.. கண்ணீர் சிந்தியவாறு என் வாசலில் பரிதாபமாக நின்றாள்..!! அவள் முகத்தில் அறைந்து சாத்திய கதவு.. இப்போது என் முகத்தை அறைவது மாதிரி இருந்தது..!!அடுத்த நாள் மாலை அவள் சீக்கிரமே ஆபீசில் இருந்து திரும்பிவிட்டாள்.
அவள் காரில் வந்து இறங்கியதை, நான் என் வீட்டு ஜன்னல் வழியாக பார்த்துக் கொண்டிருந்தேன்.
அவள் ஒருகணம் நிமிர்ந்து ஜன்னலை பார்த்தாள்.
நான் அங்கே நின்றிருப்பதை அறிந்ததும், பட்டென தலையை குனிந்து கொண்டாள்.
விடுவிடுவென படியேறினாள்.
நான் ஓரிரு நிமிடங்கள் அங்கேயே நின்றவாறு யோசித்திருப்பேன்.
பின்பு ஒரு முடிவுக்கு வந்தவளாய் எங்கள் வீட்டை விட்டு வெளியே வந்தேன்.
அவளுடைய ஃப்ளாட்டை நோக்கி நடந்தேன்.
அவளுடைய வீட்டு வாசலில் வந்து நின்றேன்.
கதவு திறந்திருந்தது.
அவள் கண்களை மூடியவாறு சோபாவில் தலை சாய்த்திருந்தாள்.
நான் மேலும் சிறிது நேரம் யோசித்துவிட்டு என் தொண்டையை செருமினேன்.
இப்போது அவள் கண்களை திறந்து வாசலை பார்த்தாள்.
வாசலில் நின்றிருந்த என்னை சற்றே வித்தியாசமாக பார்த்தாள்.
இப்போது நான் பரிதாபமான குரலில் அவளிடம் கேட்டேன்.
“உள்ள வரலாமாக்கா..?”அவ்வளவுதான்.. அவள் பட்டென உருகிப் போனாள்.
அவசரமாய் எழுந்து என்னை நோக்கி ஓடி வந்தாள்.
“ஹேய் பவி.. என்ன நீ..? உள்ள வா.. பர்மிஷன்லாம் கேட்டுக்கிட்டு இருக்குற.. வா..”என்று அவளே என் தோளைப் பற்றி உள்ளே அழைத்து சென்றாள்.
சோபாவில் என்னை அமர செய்து, அவளும் எனக்கருகே அமர்ந்து கொண்டாள்.
அன்பாக என் முகத்தை பார்த்தாள்.
கனிவான குரலில் கேட்டாள்.
“சொல்லு பவி.. என்ன விஷயம்..?”“என்னை மன்னிச்சிடுங்கக்கா..!!” நான் கண்கள் கலங்க சொல்ல, அவள் பதறிப் போனாள்.
“ஏய்.. பவி.. என்னாச்சு உனக்கு.. மன்னிப்பு அது இதுன்னு..?”“இல்லக்கா.. நான் நேத்து உங்ககிட்ட அப்டி நடந்துக்கிட்டு இருந்திருக்க கூடாது.. வேற எதோ கோவத்தை உங்ககிட்ட காட்டிட்டேன்.. தப்பு பண்ணிட்டேன்.. ப்ளீஸ்க்கா.. மன்னிச்சுடுங்க என்னை..!!”“ஹையோ.. என்ன நீ..? ச்சீய்.. அழாத பவி.. கண்ணைத் தொடைச்சுக்கோ..!! இங்க பாரு.. நீ பண்ணினதுல எந்த தப்புமே இல்ல.. எனக்கு உன்மேல எந்த கோவமும் இல்ல..!!”“நெஜமா..?”“சத்தியமா..!!! ஸாரிலாம் கேக்காத ப்ளீஸ்..!!”அவள் சொல்லிவிட்டு என்னை தன்னுடைய தோளில் சாய்த்துக் கொண்டாள்.
இதமாய் என் தலையை தடவிக் கொடுத்தவாறு சொன்னாள்.
“அழாத பவி.. கண்ணைத் தொடைச்சுக்கோ..!!”“ம்ம்.. சரி.. அழலை..!! ஆனா.. இனிமே நீங்க எப்போவும் போல எங்க வீட்டுக்கு வரணும்.. எப்போவும் போல சிரிச்சு பேசணும்..!! சரியா..?” நான் எழுந்து கண்களை துடைத்துக்கொண்டே சொல்ல, அவள் அழகாக புன்னகைத்தாள்.
“ஹ்ஹ்ஹாஹ்ஹா.. வீட்டுக்குத்தான..? வந்துட்டா போச்சு..!!”“சத்தியமா என் மேல கோவம்லாம் இல்லைலக்கா..?” மறுபடியும் நான் நம்பிக்கை இல்லாமல் கேட்க,“ப்ச்..!! அதான் கோவம்லாம் எதுவும் இல்லைன்னு சொல்றேன்ல..? எனக்கு பாடம் கத்துக் கொடுத்த டீச்சரம்மாவைப் பார்த்து நான் ஏன் கோவப்படப் போறேன்..?”“டீச்சரம்மாவா..? நானா..?”“ஆமாம்..!!”“நான் என்ன கத்துக் கொடுத்தேன்..?” நான் சற்றே இலகுவான குரலில் கேட்க,“ஒரு பொண்டாட்டின்றவ எப்படி இருக்கணும்னு..!!” அவள் திருத்தமான குரலில் சொன்னாள்.
“அக்கா..!!”“நெஜமாத்தான் பவி.. உன்னை பாத்ததுக்கப்புறம்.. எனக்கு என் புருஷனை பக்கத்துலையே வச்சுப் பாத்துக்கனும்னு ஆசை வந்துடுச்சு..!! சம்பாதிச்ச வரை போதும்.. காண்ட்ராக்ட் கேன்சல் பண்ணிட்டு வாங்கன்னு அவர்கிட்ட சொல்லிட்டேன்.. அடுத்த வாரம் அவர் இன்டியா வந்துடுவாரு..!! இனிமே அவரை விட்டு நான் பிரியவே மாட்டேன்..!!”“நெஜமாவா..?”“ம்ம்.. அப்புறம் உன்கிட்ட இன்னொன்னும் சொல்லணும்..!!”“என்னக்கா..?”“இந்த நியூ இயர்ல நான் எடுத்திருக்குற ரெஸல்யூஷன் என்ன தெரியுமா..?”“எ..என்ன..?”“என் புருஷனை இனிமே யார் கூடவும் கம்பேர் பண்ணிப் பேசக் கூடாதுன்னு..!!”அவள் சொன்னதும், நான் அன்று அவளுடைய முகத்தில் அறைந்த மாதிரி கேட்டது ஞாபகம் வந்து, என் மனதை வருத்தியது.
“ஸாரிக்கா..!!” என்றேன்.
“ச்சீய்.. நீ எதுக்கு ஸாரி சொல்ற..? அந்த மாதிரி ஒரு பாடம் எனக்கு சொல்லிக் கொடுத்ததுக்கு.. நான்தான் உனக்கு தேங்க்ஸ் சொல்லணும்..!! இனிமே என் புருஷனை எதுக்காகவும் யார்கிட்டவும் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்..!!”அவள் மிகவும் உறுதியான குரலில் சொல்ல, எனக்கு இப்போது கண்கள் மீண்டும் கலங்க ஆரம்பித்தன.
அவள் முகத்தை கொஞ்ச நேரம் பரிதாபமாக பார்த்தவள், அவளுடைய மடியில் முகம் புதைத்துக் கொண்டேன்.
அவள் என்னை தடுக்கவில்லை.
என் முதுகையும் கூந்தலையும் அன்பாக வருடிக் கொடுத்தாள்.
அப்புறம் என் முகத்தை அவளுடைய உள்ளங்கைகளுக்குள் வைத்து தாங்கி, நிமிர்த்தினாள்.
அவளுடைய முகம் முழுவதும் புன்னகையும் அன்பும் பொங்கி வழிய, மென்மையாக சொன்னாள்.
“உன்னை நான் மொதநாள் பார்த்தப்போ தப்பா சொல்லிட்டேன் பவி.. உண்மையை சொன்னா.. உன்னை மாதிரி சூப்பரான பொண்டாட்டி கெடைக்க.. அசோக்தான் ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும்..!!”எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
உள்ளத்தில் விதவிதமான உணர்சிகள்.. கலந்துகட்டி கடலலை மாதிரி மோதின.
என்னையே அன்பாக பார்த்துக் கொண்டிருந்த அவளுடைய முகத்தையே நானும் கொஞ்ச நேரம் அமைதியாக பார்த்தேன்.
அப்புறம் மீண்டும் அவளுடைய மடியில் தலை சாய்த்துக் கொண்டேன்.
அப்புறம் வந்த நான்கைந்து நாட்கள் மிகவும் சந்தோஷமாய் இருந்தேன் நான்..!! எதோ இனம்புரியாத மகிழ்ச்சியும், மலர்ச்சியும் என் முகம் முழுவதும்..!! வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் என் கணவரை முத்தமிட்டேன்.. நேரம் கிடைக்கும்போதெல்லாம் ரேணுகாவை கட்டிக் கொண்டேன்..!! ‘எல்லாமே சரியாகிவிட்டது.. இனி இன்பம் தவிர எதுவுமில்லை..’ என்று என் மனம் எக்காளமிட்டபோதுதான்.. ஒருநாள் நண்பகல் எங்கள் வீட்டு காலிங் பெல் ஒலித்தது..!! உற்சாகத்துடனே சென்று கதவு திறந்தவள், வெளியே நின்றிருந்தவளைப் பார்த்து, எதிர்பாராத அதிர்ச்சியில் அப்படியே திகைத்துப் போனேன்..!!அன்பரசி..!!!!!!!!!எபிஸோட் – Vவாழ்வில் என்றுமே இருபக்கம்.. அதில் ஒருபக்கம் துக்கம்..!! நான்கைந்து நாட்களாக சந்தோஷப் பக்கத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த நான், விரைவிலேயே அடுத்த பக்கத்தையும் பார்க்க நேர்ந்தது.
அதற்கு ஒரு வகையில் காரணமாகவும், தூண்டுகோலாகவும் அன்பரசி வந்து சேர்ந்தாள்.
அதையெல்லாம் அப்போது அறியாத நான், அவளை உற்சாகமாகவே வரவேற்றேன்.
“ஹேய்.. அன்பு…!!!!!!!!!! என்னடி இது திடீர்னு வந்து நின்னு சர்ப்ரைஸ் கொடுக்குற..?”“இல்லடி.. இந்தப்பக்கம் கொஞ்சம் வேலை இருந்தது.. அதான்.. அப்படியே..”“சரி.. வா.. வா.. உள்ள வா..!!”அவளை உள்ளே அழைத்து சென்றேன்.
சோபாவில் அமரவைத்தேன்.
வெயிலில் அலைந்து களைத்துப் போனவள் மாதிரி காட்சியளித்தாள்.
தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தேன்.
அதைக் குடித்து அவள் காலி செய்ததும், பொறுமையாக ஆரம்பித்தேன்.
“அப்புறம்டி.. எப்டி இருக்குற..?”“எதோ இருக்குறேன் பவி..”“பாப்பா நல்லாருக்காளா..?”“ம்ம்.. நல்லாருக்குறா.. இந்த வருஷம் ஸ்கூல் அனுப்பனும்..!! ம்ம்ஹ்ஹ்ம்ம்… அது கெடக்குது..!! நீ எப்டிடி இருக்குற..?”“எனக்கென்னடி கொறைச்சல்..? நல்லாருக்கேன்..!!”“உன் வீட்டுக்காரரு நல்லா பாத்துக்குறாரா..?”“ம்ம்.. பாத்துக்குறாரு.. ப்ரியமா நடந்துக்குறாரு..!!”“இந்தப்பக்கம் ஒரு கடைல சாம்பிள் கொடுக்க வந்தேன் பவி.. அப்டியே உன்னையும் பாத்துட்டு போகலாம்னு நெனச்சேன்..!! இந்தா.. இதை உன் வீட்டுக்கு வச்சுக்கோ..!!”சொன்னவள் தன் தோளில் தொங்கிய பையை திறந்து, இரண்டு ஊதுவத்தி பாக்கெட்டுகளை எடுத்து என்னிடம் நீட்டினாள்.
நான் எந்த சலனமும் காட்டாமல், அதை வாங்கி வைத்துக் கொண்டேன்.
கொஞ்ச நேரம் அமைதியாக அவள் முகத்தையே பார்த்தேன்.
எப்படி இருந்தவள் இவள்..?? எந்த நேரமும் முகத்தில் சிரிப்புடன்.. பேச்சில் கேலியுடன்..!! இப்போது.. அவளா இவள் என என்னும் அளவிற்கு களையிழந்து போயிருக்கிறாள்..!! கஷ்டமாக இருந்தது..!! கஷ்டத்தை காட்டிக் கொள்ளாமல் இயல்பாக கேட்டேன்.
“அம்மா, அப்பாலாம் நல்லாருக்காங்களா அன்பு..?”“தெரியலைடி.. ரொம்ப நாளாச்சு அவங்க கூட பேசி..”“ஏன்..? என்னாச்சு..? உன்னை வந்துலாம் பாக்குறது இல்லையா..?”“ஹ்ஹ்ஹா.. ம்ஹூம்.. வர்றது இல்ல..!! அவங்களுக்கு என் மேல இருந்த கோவம் இப்போ இன்னும் அதிகமாயிடுச்சு..!!”“ஏன்..? நீ என்ன பண்ணுன..?”“அப்படி ஒரு ஆளை லவ் பண்ணி.. குடும்பத்துக்குள்ள இழுத்துட்டு வந்து.. அவங்க ரெண்டாவது பொண்ணு வாழ்க்கையையும் சீரழிச்சுட்டேனாம்..!! என்னமோ அவங்க பொண்ணு ஒன்னுந்தெரியாத ஒழுக்க சிகாமணி மாதிரி..!! ஓடுகாலி சிறுக்கி..!!”சொல்லும்போதே அவள் கண்கள் கலங்க ஆரம்பிக்க, எனக்கு ஏண்டா கேட்டோம் என்பது மாதிரி கஷ்டமாயிற்று.
நான் உடனே பேச்சை மாற்ற எண்ணினேன்.
என் மனதில் முளைத்த இன்னொரு கேள்வியை மெல்ல கேட்டேன்.
“அ..அப்டினா.. பாப்பாவை யார் பாத்துக்குறது..”“என் மாமியார்தான்.. கொஞ்ச நாளா என்கூடதான் இருக்குறாங்க.. எனக்கு இப்போதைக்கு ஆறுதலா இருக்குற ஒரே ஆளு அவங்கதான்..!!”“ம்ம்.. ஊதுவத்தி பிசினஸ் எப்டி போகுது அன்பு..?”“ஏதோ பரவலாடி.. சாப்பாட்டுக்கு பிரச்னை இல்லாம போகுது.. ஆனா.. பெருசா ஏதும் மிச்சம் புடிக்க முடியலை..!!” Kundi Nakkum Sex Stories In Tamil“ம்ம்ம்ம்..”– தொடரும்
ஆதாரம்:இணையம்